Sunday, October 25, 2009

Good insight into Taliban

David Rohde - 7 மாதம் 10 நாட்களுக்குப் பிறகு தலிபானிடமிருந்து தப்பி வந்த NewYorkTimes பத்திரிக்கையாளர்.

அவருடைய பதிவைக் காண இங்கே சொடுக்கவும். பின்வரும் பதிவு அவருடைய பதிவின் சுருக்கமே. அவருடைய பதிவைப் படிப்பதாக இருந்தால் இப்பதிவை அவருடையப் பதிவைப் படித்த பின் படிப்பது நலம். ஏனெனில் அவருடைய பதிவு பல திருப்பங்களை கொண்டது. பின் வருவனவற்றைப் படித்த பின் அவருடைய பதிவைப் படித்தால் சுவாரசியம் இருக்காது !

சரி அவருடையப் பதிவின் சுருக்கத்தைக் காண்போம்.

கடந்த 2008 Nov 10 ஆம் தேதி அவர் ஒரு தலிபான் தலைவரை(Abu Tayeb) பேட்டி காணச் செல்லும் வழியில் கடத்தப்பட்டார் . அவருடன் அந்தப் பேட்டிக்கு ஏற்பாடு செய்த ஒரு ஆப்கானிஸ்தான் செய்தியாளர் Tahir Luddin ம், அவர்களுடைய ஊர்தி ஓட்டுனர் Asad Mangal ம் கடத்தப்பட்டனர். அவர்களைக் கடத்தியவன் தன்னை Mullah Atiqullah என்று அறிமுகப்படுத்திக்கொண்டான்். பின்னர் அவர்கள் பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பாகிஸ்தானில் அவர்கள் தலிபானின் strong hold ஆன Waziristan பகுதியில் அடைத்துவைக்கப்பட்டனர். பிணையத்தொகையாக பல மில்லியன் டாலர்களும் , தலிபான் கைதிகளும் கேட்கப்பட்டனர். சிறிது நாட்களுக்குப் பிறகே David Rohde க்குத் தெரியவந்தது , Mullah Atiqullah வேறு யாருமல்ல , Abu Tayeb தான். அதாவது David, தான் யாரைப் பேட்டி காணச் சென்றாரோ, அவனாலே கடத்தப்பட்டார். David, வாஜிரிச்டனில் ஒன்பது இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டார்.

இந்தப் பல மாதங்களில் அபு தயெப், டேவிட்டிடம் பேச்சுவார்த்தை முடிவில் இருப்பதாகவும், நீ விரைவில் ஊர் திரும்புவாய் என்றும் கூறி வந்திருக்கிறான். ஆனால் டேவிட் அவற்றை நம்புவதாக இல்லை. ஏனெனில் அபு தயெப், பேச்சுவார்த்தையில் அரசாங்கம் 7m $ க்கும் மேலும் guantanamo bay இலிருந்து கைதிகளை விடுவிக்க ஒத்துக்கொண்டிருப்பதாகவும் கூறி வந்திருக்கிறார். அமெரிக்காவைப் பற்றித் தெரிந்தவர்கள் யாரும் இதை நம்ம மாட்டார்கள். ஏனெனில் அமெரிக்கா என்றுமே தீவிரவாதிகளுக்குப் பணிந்ததே இல்லை. அமெரிக்கா என்றுமே பிணைக்கைதிகளுக்காக கைதிகளை விடுவித்ததே இல்லை. அதனால் டேவிட் இதனை நம்பாதது ஆச்சரியமில்லை.மேலும் அவர் தான் அந்த அளவிற்கு தகுதி உள்ளவன் என்றும் நம்பவில்லை!.இதற்கிடையில் டேவிட் தங்கியிருந்த வீடு ஒரு தடவை அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. அதிலிருந்தும் அவர் தப்பித்துள்ளார்.

இப்படியே ஏழு மாதங்கள் சென்றுள்ளது. ஒருநாள் டேவிடும் தகீரும் தப்பிக்க முடிவெடுத்து ஒரு பாகிஸ்தான் ராணுவ சோதனைச்சாவடியை அடைந்தனர். ஆசாதை, டேவிட்டும் தகீரும் நம்பவில்லை. அதனால் அவரை தனியாக விட்டு விட்டு வந்துவிட்டார்கள். டேவிட்கு பாகிஸ்தான் ராணுவ சோதனைச்சாவடிக்குச் செல்வதில் தயக்கம் இருந்தது. ஏனெனில் அவர் பாகிஸ்தான் ராணுவத்தை நம்பவில்லை. அவர்கள் தம்மை திருப்பி தலிபானிடம் ஒப்பைடைத்துவிடக் கூடும் என்று பயந்தார். இருந்தபோதிலும் வேறு வழியே இல்லாமல் பாகிஸ்தான் ராணுவ சோதனைச்சாவடியை அடைந்தார். நல்லவேளையாக அவர் பயந்தபடி எதுவும் நடக்கவில்லை. ஆசாத்தும் பத்து நாட்களுக்குப் பிறகு தப்பி வந்து விட்டார்.

அவருடையப் பதிவு தலிபானின் அன்றாட நடவடிக்கைகளை அறிய உதவியாக உள்ளது.

2 comments:

Shankar.Nash said...

wow.. seems like a movie..

Haripandi Rengasamy said...

yes shankar ..for me also that was seem like a movie ... full of twists .. but from his writing you can get to know day to day life of Taliban