Monday, October 26, 2009

கற்பனைகள் கட்டுக்கடங்காதவைகள்!

ஒரு விஷயத்தை எழுத்திலிருந்து திரைக்கு கொண்டுவருவது என்பது சற்றுக் கடினமான செயலே. பொதுவாக ஒரு திரைப்பட இயக்குனர் தான் நினைத்ததை அப்படியே திரையில் கொண்டு வந்திருப்பார்களா என்றால், 100% பண்ணி இருக்கமாட்டார்கள். ஒவ்வொரு படத் தோல்வியின் போதும் ஒவ்வொரு நடிகரும் கூறும் குற்றச்சாட்டு, இயக்குனர் என்னிடம் கூறிய கதை வேறு ஆனால் படத்தில் வந்தது வேறு என்பார்கள். நிச்சயம் இயக்குனர் வேறு கதையை படமெடுத்திருக்கமாட்டார், ஆனால், தான் கூறிய கதையையே படமாக்கும் போது அது வேறு பரிமாணம் எடுத்திருக்கும். இது அவரே எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கலாம். திரைப்படம் எடுக்கும்போது கதை தெரிந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கதையைக் கற்பனை செய்திருப்பார்கள். ஒரு தயாரிப்பாளர் ஒரு விதமாக கற்பனை செய்திருப்பார், கதாநாயகன் ஒரு விதமாக கற்பனை செய்திருப்பார். ஏன் இயக்குனரே ஒரு விதமாக கற்பனை செய்திருப்பார். ஒரு படத்தின் வெற்றியே குறைந்தபட்சம் ஒரு இயக்குனர் ஒரு கதையில் தான் கற்பனை செய்ததில் எத்தனை சதவீதம் திரையில் கொண்டு வர முடிந்தது என்பதில்தான் இருக்கிறது. ஏனெனில் ஒரு மனிதனின் கற்பான சக்திக்கு ஈடு எதுவும் கிடையாது. அது எல்லைகள் அற்றது. அதனை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட திரைக்கு கொண்டு வருவதென்பது அசாத்தியமான செயல். அதனை ஒரு இயக்குனர் எந்த அளவுக்கு வெற்றிகரமாகச் செய்கிறார் என்பதில் தான் ஒரு படத்தின் வெற்றியே அடங்கியுள்ளது.

பொதுவாக நாவல்களை படமாக்குவதென்பது சற்று அசாத்தியமான செயலே. ஏனெனில் இங்கு கதையானது ஏற்கனவே ரசிகனுக்கு அறிமுகமானதாக இருக்கும். அந்நாவலை படிக்கும்போது ஒவ்வொரு ரசிகனும் ஒவ்வொரு விதமாக கற்பனை செய்திருப்பான். அதனை ஈடு செய்வதென்பது பெரிய விஷயம். அதனை மிகச் சில இயக்குனர்களே வெற்றிகரமாகச் செய்துள்ளனர். எ.கா : பாலச்சந்தர். அவருடைய 47 நாட்கள், எழுத்தாளர் சிவசங்கரியின் நாவலே. அப்படம் ஒரு வெற்றிப் படமாகவே அமைந்தது. ஆனால், நான் அந்நாவலை படித்தபின் அப்படத்தைப் பார்த்தவர்களைக் கண்டதில்லை. அதனால் அப்படம் ஒரு வாசகனுக்கு எந்த அளவு பிடித்தமாக இருந்தது என்பது எனக்குத் தெரியாது!.

தமிழ்த் திரையில் ஆரம்ப காலத்தில் வந்த படங்கள் எல்லாமே மக்களுக்கு அறிமுகமான கதைகளாகவே இருந்தன. ஆரம்ப காலத்தில் தமிழ்த் திரை உலகம் புராணக் கதைகளையே எடுத்தது. அவை பெரும்பாலும் வெற்றிப் படமாகவே இருந்தன. அவை வெற்றிப் படமாக அமைந்ததற்கு இயக்குனர்கள் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்கள் என்பது மட்டுமே காரணம் அல்ல. அக்காலங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் மிகக் குறைவு, அதனால் மக்கள் எதைத் திரையிட்டாலும் பார்த்தார்கள். ஆனால் இக்காலம் அப்படி அல்ல. மேலும் இக்கால (வாசகர்களின்) ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகம். அதனைப் பூர்த்தி செய்வது என்பது சற்றுக் கடினமானதே.

நான் படித்ததிலேத் திரைக்கு வந்த ஒரு தொடர், லக்கி லூக் கார்ட்டூன். சிறு வயதில் நான் லக்கி லூக்கின் ரசிகன். அக்கார்டூனைப் படிப்பது என்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. சிறிது காலத்திற்கு முன்பு வரை கூட அக்கார்டூனைத் தேடி அதனைத் தமிழில் வெளியிட்ட ராணி காமிக்ஸ்ற்கு கடிதம் எல்லாம் அனுப்பினேன். அதே லக்கி லூக்கை சுட்டி தொலைக்காட்சியில் பார்த்த போது மிக ஆவலுடன் பார்த்தேன். ஆனால், அது என்னை ஏனோ அவ்வளவாக கவரவில்லை. சில விசயங்களைப் பார்க்கும் போது, இதனைப் பார்க்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றும். அதேபோல் தான் லக்கி லூக்கை சுட்டி தொலைக்காட்சியில் பார்த்த போது எனக்குத் தோன்றியது. அதற்குக் காரணம் அது என் கற்பனையை ஈடு செய்யாமல் இருந்தது என்பதோடு மட்டுமல்லாமல் என் கற்பனையில் இருந்த லக்கி லூக்கை சிதைப்பதாகவும் இருந்தது.

கற்பனைகள் கட்டுக்கடங்காதவைகள். அதனை ஈடு செய்வது அவ்வளவு எளிதல்ல!

பின் குறிப்பு:

1. இப்பதிவையே நான் எப்படியோ எழுத எண்ணி எப்படியோ முடித்திருக்கிறேன். அப்படியானால் எண்ணத்திலிருப்பதை எழுத்திற்கும், எழுத்திலிருப்பதை ஒளிக்கும் கொண்டு வருவது எவ்வளவு கடினமான விஷயம்!.

2. 47 நாட்கள் திரைப் படத்தைப் பற்றிக் கூறியதற்காக மதுவிற்கும் கார்த்திக்கிற்கும் நன்றி :)

4 comments:

Shankar.Nash said...

in the beginning i too thought y is he deviating from what he started with.. later on found the drift.. u were deviating from the topic which is about deviation.. eppadi idhellam.. mudiyalai!!! anyway, nice post :)

Haripandi Rengasamy said...

ha ha ... yes i knew that i was deviating .. but i just wrote what ever came to mind .. nothing else shankar :) ...

madu said...

U r free to imagine when u read. The Visual media is a reality and there is no room for imagination. No one in this world can fill everybody's imagination. Thats the reason for most of the Films from stories. As Sujatha said "Filmgurathu vera oru janthu"

JDK said...

லேசா மயக்கம் வருது ப்பா :)