Showing posts with label நான் பிரதமரானால். Show all posts
Showing posts with label நான் பிரதமரானால். Show all posts

Wednesday, May 12, 2010

நான் பிரதமரானால் - சுகாதாரத்துறை

இப்பதிவு நான் பிரதமரானால் என்ற பதிவின் தொடர்ச்சியே ஆகும். இப்பதிவில் நான் சுகாதாரத் துறையைப் பற்றி ஆலோசிக்கப் போகிறேன்.

இந்தியாவின் சுகாதாரத்துறை 3500 ஆண்டுகள் பழமையானது. 3500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் ஆயுர்வேதம் பின்பற்றப்படுகிறது. பேரரசர் அசோகர் பல பள்ளிகளை நிறுவி மருத்துவக் கல்வியைப் பரப்பினார். மேலும் உலகிலேயே முதல் முறையாக பேரரசர் அசோகர் தன் நாட்டு மக்களுக்கு அனைவர்க்கும் மருத்துவ வசதி கிடைக்க முயற்சி மேற்கொண்டார். இவ்வாறாக இந்தியாதான் தன் நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதியை அளித்த முதல் நாடு.

ஆனால் இன்றோ நம் ஊரில் வியாதிகளுக்கு பஞ்சமில்லை அத்துடன் சாலை விபத்துகளால் ஏற்ப்படும் உயிரிழப்புகளும் அதிகம் . உலகிலேயே அதிகம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழப்பவர்கள் இந்தியாவில் தான் அதிகம் . இந்தியாவில் 2007 ஆம் ஆண்டு மட்டும் 1.13 லட்சம் பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர் . இது சாலை விபத்தின் போதே நடக்கும் உயிரிழப்புகளை மட்டுமே கணக்கில் கொண்டதா அல்லது சாலை விபத்துகளுக்கடுத்து நடைபெறும் சிகிச்சையின் போது இழந்த உயிர்களின் எண்ணிக்கையையும் சேர்த்ததா என்று தெரியவில்லை. இது எனக்குத் தெரிந்து சாலை விபத்துகளின் போது நடைபெறும் உயிரிழப்புகளை மட்டுமே கணக்கில் கொண்டதாக இருக்கும். அப்படியானால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம். சாலை விபத்துகளின் போது நடைபெறும் உயிரிழப்புகளை சாலை மேம்பாட்டின் மூலம் தடுக்கலாம் . ஆனால் அதற்கடுத்து நடைபெருமிழப்புகளை மேம்பட்ட மருத்துவ முறைகளின் மூலம் மட்டுமே தடுக்க இயலும்.

மேலும் உலகிலேயே சக்கரை நோயின் தலை நகரமாக இந்தியா விளங்குகிறது. 1995 ஆம் ஆண்டு 19 மில்லியன் ஆக இருந்த சக்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2007 ஆம் ஆண்டு 40.9 மில்லியன் ஆக உயர்ந்தது. சக்கரை நோய் உலகிலேயே நோய்களின் மூலம் ஏற்ப்படும் உயிரிழப்பில் நான்காவது இடத்தை வகிக்கிறது.

இந்தியாவில் குண்டானவர்களின் (Obesity) எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் 5% ஆக உள்ளது. Obesity தான் உலகில் பல நோய்களுக்கு மூல காரணம்.

இந்தியா உலகிலேயே நான்காவது எய்ட்ஸ் நோயாளிகள் அதிகமாக இருக்கும் நாடு.

அதே போல் உலகிலேயே இருதய நோய் அதிகம் இருக்கும் நாடு இந்தியா.

ஏறக்குறைய 10 லட்சம் மக்கள் இந்தியாவில் போதுமான மருத்துவ வசதி இல்லாததால் இறக்கின்றனர். 70 கோடி மக்களுக்கு சிறப்பு மருத்துவ வசதி கிடைப்பதில்லை .
இந்தியாவில் இருக்கும் சிறப்பு மருத்துவ வசதிகளில் கிட்டத்தட்ட 80% நகர்ப் புறங்களிலேயே உள்ளது .

இப்படி பல நோய்களின் தலைமையிடமாக இருக்கும் இந்தியாவில் மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் சென்றடைவதில்லை. இத்தனைக்கும் இந்தியாவில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் இல்லை. இந்தியா தற்பொழுது மருத்துவச் சுற்றுலாவின் தலைமையிடமாக மாறிக்கொண்டிருக்கிறது . பல வெளிநாட்டுக்காரர்கள் செலவு குறைவாக இருக்கிறது என்று இந்தியாவில் தான் மருத்துவச் சிகிச்சைப் பெறுகிறார்கள் . அந்த அளவிற்கு இந்தியாவில் மருத்துவ வசதிகள் உள்ளன. ஆனால் அவை இந்திய மக்களுக்கு கைக்கெட்டும் தொலைவில் இல்லை.

முதலில் மருத்துவ சிகிச்சைகளுக்குத் ஆகும் செலவீனங்களைப் பார்க்க வேண்டும் . அந்த செலவீனங்கள் அனைத்து மக்களாலும் கொடுக்க முடியாது. ஆக இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் இலவச காப்பீடு வழங்க வேண்டும். ஆக மருத்துவச் செலவுகளை காப்பீடுகள் மூலம் அளிக்கலாம். இது ஒன்றும் உலகில் புதுமையானது ஒன்றும் அல்ல . இங்கிலாந்து நாட்டில் ஏற்கனவே NHS (National Health Service) என்ற பெயரில் இருப்பதுதான். இதன் மூலம் அந்நாடு தன் நாட்டு மக்களுக்கு தேவையான மருத்துவச் செலவுகளை இந்த NHS மூலம் அளிக்கிறது. ஏன் அந்நாட்டில் தங்கிப் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கூட இந்த திட்டத்தின் மூலம் இலவச மருத்துவச் சிகிச்சை அளிக்கிறது .

நூறு கோடி பேருக்கு இன்சூரன்ஸ் அளிப்பதின் மூலம் சில கோடி பேருக்கு உயர்தரச் சிகிச்சை அளிக்க முடியும். இந்த இன்சூரன்ஸ் திட்டத்திற்குத் தேவையான நிதியை முழுவதுமாக அரசாங்கமே ஏற்காமல் அரசும் மக்களும் சேர்ந்து ஏற்கலாம். எப்படி வாகனங்களுக்கு கட்டாயம் இன்சூரன்ஸ் இருக்கவேண்டுமோ அப்படி மக்களுக்கு கட்டாயம் இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். இந்த இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை LIC நிறுவனம் ஏற்ப்பது மூலம் இந்த திட்டத்தில் ஏற்ப்படும் வரவு செலவுகளை மறைமுகமாக அரசாங்கமே பெறலாம். இதன் மூலம் அரசாங்கப் பணமானது எங்கும் ஓடிப் போகாமல் அரசாங்கத்திடமே திரும்பி வரும்.

இத்திட்டத்தில் செலவழிக்கப்படும் நிதியானது முழுவதுமாக இன்சூரன்ஸ்கு என்றே செலவழிக்கப்படாமல் குறிப்பிட்ட சதவீதம் மக்களுக்கு பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவும் , AIIMS போன்ற பல்வேறு மருத்துவமனைகள் ஏற்ப்படுத்தவும் பயன்படும்.

இந்தியாவில் உள்ள 250 ஆங்கில மருத்துவக் கல்லூரிகளிலிருந்தும் , 400 இந்திய மருத்துவ முறைகளிலிருந்தும் கிட்டத்தட்ட 5,00,000 மருத்துவர்கள், செவிலியர்கள்,para professional கள் வெளிவருகின்றனர். இந்த எண்ணிக்கையே போதுமானதாக இல்லை. மேலும் மருத்துவக் கல்லூரிகளின் தரத்தையும் உயர்த்த வேண்டி உள்ளது. நமக்கு AIIMS போன்ற உயர்தர அரசாங்க மருத்துவமனைகள் தேவை.


உலக தர மருத்துவச் சிகிச்சைகளைப் பெறவும், தேவையான மனித ஆற்றலைப் பெறவும் இந்திய அடுத்த 5 ஆண்டுகளில் $20billion முதலீடு செய்ய வேண்டிருக்கும்.
இந்தியாவிலிருக்கும் மருத்துவமனைப் படுக்கைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. உலக அளவில் மருத்துவமனைப் படுக்கைகளின் எண்ணிக்கை 3.96 /1000 மக்களுக்கு இருக்கும்போது இந்தியாவின் சராசரி வெறும் 0.7 தான். இந்நிலைமை மாற அதிக முயற்ச்சிகள் எடுக்கப்படும் .

மேற்க்கூறிய செலவினங்களை கையாளுவதற்கும் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கும் நிதி நிலை அறிக்கை போன்று ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ அறிக்கை சமர்பிக்கப்படும்.

ஆரம்ப சுகாதாரங்களில் வசதிகள் மேம்படுத்தப்படும் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் .

இத்துறையில் இருக்கும் மற்றொரு முக்கியமான பிரச்சினை கிராமப் புறங்களுக்கான பல மருத்துவர்கள் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனைகளுக்கேச் செல்லாமல் தங்களுடைய தனியார் மருத்துவமனைகளிலேயே தங்கி பணம் சம்பாதிப்பது. அந்த நிலையை மாற்ற கட்டாயமாக சிறப்பு அதிரடி சோதனைப் படை அமைக்கப்படும். தவறிழைக்கும் மருத்துவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.


http://www.indiastat.com/default.aspx
http://www.indiastat.com/crimeandlaw/6/accidents/35/roadaccidents/17897/stats.aspx

Thursday, March 25, 2010

நான் பிரதமரானால் - சாலை மற்றும் போக்குவரத்து துறை

நான் நெடுந்தொலைவு பயணப்படும் போது இருக்கும் பயண நேரங்களில் எல்லாம் எனக்கு பல எண்ணங்கள் தோன்றும். அவற்றில் முக்கியமானது ஏன் இந்தியா மட்டும் இப்படி முன்னேறாமல் இருக்கின்றது என்ற எண்ணம். மற்ற நாடுகள் எல்லாம் எவ்வளவு முன்னேறி இருக்கின்றன. இந்தியா மட்டும் ஏன் இப்படி இருக்கிறது என்று தோன்றும்.

நான் அதிகமாக இந்தியாவை ஒப்பீடு செய்யும் நாடு, சீனா . சீனா எவ்வளவு தூரம் பயணப்பட்டுவிட்டது. இத்தனைக்கும் எந்த ஒரு முன்னேற்ற செயல்களைப் பற்றிய எண்ணங்கள் சீனாவிற்கு தோன்றுவதற்கு முன்னமே இந்தியாவிற்கு தோன்றிவிடும். எடுத்துக்காட்டாக துரித நெடுஞ்சாலைகள்(Express way) ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிற்கு 1970 களிலேயே வாய்த்துவிட்டது. ஆனால் அது பல தடைகளைத் தாண்டி செயல்பாட்டிற்கு வந்தது 2000 களில்தான். சீனாவில் 1980 கள் வரை துரித நெடுஞ்சாலைகளே இல்லை. 1990 களில்தான் சில நெடுஞ்சாலைகள் துரித நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட்டன. இப்பொழுது சீனாவில் இருக்கும் துரித நெடுஞ்சாலைகளின் நீளம் 60,300 km. இது கிட்டத்தட்ட இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளமான 65,569 km சமம். இந்தியாவிலோ துரித நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 200 km களே. இதிலிருந்து நாம் சீனாவைவிட செயல்பாட்டில் எவ்வளவு தூரம் பின் தங்கி இருக்கோம் என்று தெரியும்.

இப்படிப்பட்ட நேரங்களில் எனக்கு இந்தியாவின் மீது அதீத கோபம் வரும். நாம் எப்படியாவது இந்தியாவை முன்னேற்றிவிட வேண்டும் என்று தோன்றும். அத்தகைய நிமிடங்களில்தான் நாமே பிரதமரானால் என்னவெல்லாம் செய்வோம் என்று எண்ணுவேன். இது பள்ளிப் பருவத்தில் நாம் எழுதிய "நான் பிரதமரானால் .." , " நான் முதலமைச்சரானால் ..." என்ற எண்ணங்களின் வெளிப்பாடே.... அத்தகைய எண்ணங்களே கீழே. முதலில் சாலை மற்றும் போக்குவரத்து துறையிலிருந்து ஆரம்பிக்கிறேன் ...

சாலை போக்குவரத்து ஒரு நாட்டிற்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு நாட்டின் பொருளாதரத்தில் இந்த சாலைகள் முதுகுத்தண்டாக உள்ளன. அதனால் நான் பிரதமரானால் இந்தியாவின் அனைத்து மாவட்ட தலைநகரங்களும், முக்கிய துறைமுகங்களும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டங்களின் வளர்ச்சியும் உறுதிப்படுத்தப்படும். இதே போல் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்கள் தேசிய நெடுஞ்சாலையால் இணைக்கப்படும்.

உலகிலேயே அதிக மக்கள் சாலைப் போக்குவரத்தில் இறப்பது இந்தியாவில் தான் அதிகம். இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 13 பேர் இறக்கின்றனர். 2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1.14 லட்சம் பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர். இது உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவைக் காட்டிலும் அதிகம் . இதைக் குறைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் ஆம்புலன்ஸ் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன (PAGE 9). அந்த சேவை இன்னும் விரிவுபடுத்தப்பட்டு , இன்னும் அதிகமான ஆம்புலன்ஸ்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுத்தப்படும். இதன் மூலம் ஏதேனும் விபத்து நிகழ்ந்தால், ஆம்புலன்ஸ்கள் விரைவாக விபத்து நடந்த இடத்தை அடைய முடியும். தேசிய நெடுஞ்சாலைகளில் "median" களின் உயரம் அதிகரிக்கப்படும் . சாலைப் போக்குவரத்து இதன் மூலம் விரைவானதாகவும், ஆபத்து குறைந்ததாகவும் மாற்றப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலும், "median" களிலும் மரங்கள் வளர்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். இதன் மூலம் நாட்டில் மரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் சாலைப் போக்குவரத்து இனிமையானதாகவும் குளுமையானதாகவும் மாற்றப்படும். மரங்கள் வளர்க்கப்படுவதை உறுதிபடுத்தும்விதமாக அந்த சாலை அமைத்த "contractor" மரங்கள் நடுவதுடன் அதனை ஒரு வருடம் பராமரிக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வாகனம் நகர ஒரு சிக்னலில் 10 நிமிடத்திற்கும் மேல் நிற்க வேண்டிய தேவை ஏற்ப்பட்டால் அந்த சிக்னலில் ஒரு மேம்பாலம்(fly over) அமைக்கப்படும்.

தற்போது இந்தியாவில் இருக்கும் மொத்த சாலைகளின் நீளம் 3.34 million k.m. அதில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 65,569 km , மாநில நெடுஞ்சாலைகளின் நீளம் 1,30,000 km. மற்ற சாலைகளின் நீளம் 3,14 million k.m. தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் நாட்டின் மொத்த சாலைகளின் நீளத்தில் வெறும் "2%" மட்டுமே. ஆனால் அவை 40% போக்குவரத்தை சுமந்து செல்கின்றன. அதனால் இவற்றின் நீளத்தை அதிகரிக்க போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதாவது ஒவ்வொரு 5 வருடமும் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 40,000 km அதிகரிக்கப்படும் . மாநில நெடுஞ்சாலைகளின் நீளம் 60,000 km அதிகரிக்கப்படும். இந்தியாவில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையின் 65,569 km நீளத்தில், 10,00 km சாலைகள் நான்கு அல்லது ஆறு வழிச் சாலைகளாக உள்ளன. எனவே ஏற்கனவே 2 வழிச் சாலைகள் 4 வழிச் சாலைகளாகவும், 4 வழிச் சாலைகள் 6 வழிச் சாலைகளாகவும், 6 வழிச் சாலைகள் 8 வழிச் சாலைகளாகவும் மாற்றப்படும்.

தற்போது இரண்டு மிகப் பெரிய தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றன. ஒன்று North-South Corridor and East - West Corridor. இதில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை 4000 km நீளமானது. இது வடக்கே ஸ்ரீநகரையும் தெற்க்கே கன்னியாகுமரியையும் இணைக்கிறது. கிழக்கு - மேற்கு நெடுஞ்சாலை 3,300 km நீளமானது. . இது மேற்க்கே போர்பந்தரையும் கிழக்கே சில்ச்சரையும் இணைக்கிறது. இந்த இரண்டு திட்டங்களும் நான்கு வழி மற்றும் ஆறு வழிச் சாலைகளைக் கொண்டவை. இதில் கிட்டத்தட்ட 60% மட்டுமே பூர்த்தியாகியுள்ளது. இதற்க்கான திட்டச் செலவு 1999 ஆண்டு கணக்குப்படி 60,000 கோடி ரூபாய். இதன் மூலம் என்னுடைய திட்டமான வருடத்திற்கு 8,000 km நீள தேசிய நெடுஞ்சாலை, 12,000 km மாநில நெடுச்சாலை என்பது எவ்வளவு கடினமானது என்பது புரியும். ஆனால் இது சாத்தியமானதே. ஏனெனில் சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இதற்கும் அதிகம். மேலும் மேற்க்கூறிய நடவடிக்கைகளின் மூலம் உள்நாட்டு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

இதே போன்று மற்றொரு முக்கியமானத் திட்டம் தங்க நாற்கரச் சாலை (Golden Quadrilateral). இதனுடைய மொத்த நீளம் 5,486 km . 1999 ஆண்டு கணக்குப்படி இதன் மொத்த செலவு 60,000 கோடி ரூபாய்.

தங்க நாற்கரச் சாலை , North-South Corridor and East - West Corridor போல மேலும் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்கப்படும். ஒன்று 'X' வடிவில் வட மேற்க்கே பஞ்சாபையும்,வட கிழக்கே பிஹாரையும், தென் மேற்க்கே கேரளாவையும் , தென் கிழக்கே தமிழ்நாட்டையும் இணைக்கும்.

வட கிழக்கு மாநிலங்களில் பொருளாதார முன்னேற்றம் குறைவாக உள்ளது. அதற்க்கு ஒரு முக்கிய காரணம் போதுமான சாலை வசதிகள் இல்லாததும் ஆகும். அதனைப் போக்கும் வகையில் வட கிழக்கு மாநிலங்களின் தலைநகரங்கள் அனைத்தையும் ஒன்றோடொன்று இணைப்பது மட்டுமல்லாமல் அவற்றை பாட்னாவுடனும், கோல்கட்டாவுடனும் இணைக்கும் வகையில் ஒரு திட்டம் மேற்கொள்ளப்படும். அதற்க்கு North Eastern corridor என்று பெயரிடப்படும்.

துரித நெடுஞ்சாலைகள் (Expressways)


துரித நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளைவிட மேம்பட்டவை. National Expressway -1 எனும் அகமதாபாத்தையும், பரோடாவையும் இணைக்கும் துரித நெடுஞ்சாலை பயண நேரத்தை இரண்டரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரமாக குறைக்கிறது என்பதிலிருந்து அது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம். இந்தியாவில் இருக்கும் மொத்த துரித நெடுஞ்சாலைகளின் நீளம் மிகக் குறைவே. இந்தியாவின் மொத்த துரித நெடுஞ்சாலைகளின் நீளம் 200 km மட்டுமே. இந்தியாவோ 2022 க்குள் 15,600 km துரித நெடுஞ்சாலை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. இதுவுமே மிகக் குறைந்த தூரம்தான் . எனவே நான் பிரதமரானால் வருடத்திற்கு 3000 km நீள துரித நெடுஞ்சாலைகள் உருவாக்கப்படும். இதன் மூலம் 2022 க்குள் 33,000 km சாலைகள் துரித நெடுஞ்சாளைகலாக் மாறி இருக்கும்.

உலகிலேயே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரவில் இந்தியா 42 ஆவது இடத்தை வகிக்கிறது. இது எனக்குத் தெரிந்து இந்தியாவைப் பொறுத்தவரையில் மிகக் குறைவுதான். இதற்க்கு உள்நாட்டு பாதுகாப்பு , சுற்றுலாத்துறை வளர்ச்சி , உள்நாட்டு கட்டமைப்புகள் என பல காரணிகள் உள்ளன . அவற்றில் போக்குவரத்தும் அதன் பாதுகாப்பு வசதிகளும் மிக முக்கியம் . சாலைப் போக்குவரத்து மற்றும் அதன் கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் நாம் வெளி நட்டு பயணிகளின் வரத்தை மட்டும் அல்ல உள்நாட்டு சுற்றுலா வளர்ச்சியையும் மேம்படுத்தலாம் . இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செலவாணிகள் கிடைக்கும். (page no 19) . இவ்வாறாக சுற்றுலாத்துறையின் மூலம் கிடைக்கும் நிதியில் ஒரு பகுதியை நாம் சாலை மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம் .

கடந்த 2006 ஆம் ஆண்டு 4million வெளிநாட்டவர்கள் வந்தனர். அவர்கள் செலவழித்த மொத்த தொகை US$ 8.9 billion . இது தவிர உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானம் தனி . எனவே சுற்றுலாத் துறையில் நாம் கவனம் செலுத்துவதன் மூலம் சாலைப் போக்குவாரத்துக்கு தேவையான நிதியின் ஒரு பகுதியைப் பெறலாம்.


4 lane துரித நெடுஞ்சாலை அமைக்க 1 km க்கு Rs 14 கோடி ஆகிறது. இதுவே 6 lane Rs 20 கோடி ஆகிறது. இது 2009-10 ஆண்டுக்கான கணக்கு . இது 100 km ஐ அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது . ஆக 100 km நீள 4 lane சாலை அமைக்க மற்ற எல்லா செலவுகளையும் சேர்த்து Rs 1627.51 கோடி ஆகிறது. இதுவே 6 lane க்கு Rs 2325.01 கோடி ஆகிறது. தற்போது இந்த 100 kmதுரித நெடுஞ்சாலை அமைக்க 3 ஆண்டுகள் வரை ஆகிறது . இந்த செலவானது 3 ஆண்டுகளுக்கு 20:40:40 என்ற ratio வில் செலவாகிறது . இதற்க்கான பணமானது loan மற்றும் equity மூலம் 70:30 என்ற ratio வில் பெறப்படுகிறது (page 99).

மேற்க்கூறிய கணக்கின் படி பார்த்தால் நான் கூறிய வருடத்திற்கு 3000 km நீள துரித நெடுஞ்சாலை அமைக்க வருடத்திற்கு கிட்டத்தட்ட Rs 50,000 ஊட்டி செலவாகும். மேலும் 2022 ஆம் ஆண்டுக்குள் ஏறும் விலைவாசியையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும் . மேலும் தற்பொழுது 100 km சாலை அமைக்க 3 ஆண்டுகள் ஆகிறது . வருங்காலத்தில் வரும் தொழிநுட்ப முன்னேற்றங்களையும் மனதில்
கொள்வதன் மூலம் , இந்த 100 km க்கு 3 ஆண்டுகள் என்பதை படிப்படியாக குறைந்து விலைவாசி உயர்வால் ஏப்படும் செலவீனங்களை ஈடு கட்டிவிடும் . ஆக 2022 ஆண்டுக்குள் மொத்தம் 33,000 km என்பது சாத்தியமாகக் கூடியதே .

திட்டத்திற்கு தேவையான நிதி:


தங்க நாற்கரத் திட்டத்திற்கான நிதியானது பெட்ரோலின் மீது விதிக்கப்பட்ட வரியிலிருந்து பெறப்பட்டது. மேற்க்கூறிய திட்டங்களுக்கான நிதியும் பெட்ரோலின் மீது விதிக்கப்பட்ட வரிகளிலிருந்தே பெறப்படும். இதற்காக பெட்ரோலின் மீது புதிய வரிகள் விதிக்கப்படாது. ஏற்கனவே விதிக்கப்பட்ட வரிகளிலிருந்தே பெறப்படும். மேலும் வருமான வரியின் சில சதவீதங்களும் இத்திட்டதிற்க்காகப் பயன்படுத்தப்படும். வருமான வரி பற்றிய மேலும் தகவல்கள் என்னுடைய " நான் பிரதமரானால் - நிதி மேலாண்மை" என்ற பதிப்பில் இடம்பெறும்.

மேற்க்கூறிய கனவு இந்தியராகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே உண்டு. உங்கள் கனவை இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.