Friday, October 9, 2009

நக்சலிசம்,அழிக்கப்படவேண்டிய ஒன்று

நக்சலிசம், இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மிக படு பயங்கர நோய். நக்சலைட்டுகள் மேற்குவங்க மாநிலத்தில், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல் என்னும் ஊரில் முதன் முதலில் பயிற்ச்சி மேற்க்கொன்டார்கள். அதனாலயே அவர்கள் நக்சலைட்டுகள் என்று அழைக்கப்பட்டார்கள். நக்சலிசம் முதலில் சிறிய அளவில் தான் இருந்தது. ஆனால் இன்றோ அது மிகப் பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறது. இந்திய விமானப் படையின் விமானத்தையே குறி பார்க்கும அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.

என்னைப் பொறுத்தவரை தீவிரவாதம் அழிக்கப்படவேண்டிய ஒன்று. அதிலும் உள்நாட்டுத் தீவிரவாதம் என்பது வெளியிலிருந்து வரும் தீவிரவாதத்தைவிட மோசமான ஒன்று. நக்சலைட்டுகளை இந்திய அரசு இந்த அளவிற்கு வளர விட்டிருக்கக்கூடாது. முளையிலேயே கிள்ளி எறிந்த்திருக்கவேண்டும். நக்சலைட்டுகளை அழிப்பதற்கு ராணுவம் அழைக்கபடவேண்டும். ராணுவத்தை அழைப்பதில் கௌரவக் குறைச்சல் ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை. நம் மண்ணும், நம் மக்களும் ரொம்ப முக்கியம். அதனால் நம் உள்நாட்டில் தீவிரவாதம் உள்ளது என்பதை ஒத்துக்கொண்டு, அதை அழிக்க ராணுவத்தை உடனடியாக அழைக்க வேண்டும்.

நக்சலிசம் என்பது வெறுமனே தீவிரவாதம் மட்டும் அல்ல. அது ஒரு சமூக, பொருளாதாரப் பிரச்சினை. நக்சலிசம் இந்த அளவிற்கு வளர்ந்ததிற்கு, அது வளர்ந்துள்ள பகுதிகளின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளும் ஒரு முக்கிய காரணம். பொதுவாக நக்சலிசம் வளர்ந்துள்ள பகுதிகளைப் பார்த்தீர்களானால், அவை பெரும்பாலும் சமூக, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவைகளாகவே உள்ளன. ஆகையால் நக்சலைட்டுகள் அழிக்கப்பட்ட பிறகு, அது வளர்வதற்கு ஆணி வேரான சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளையும் களையவேண்டும். அப்பகுதிகளின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்படவேண்டும். அப்பகுதிகளில் மேலும் பல வேலைவாய்ப்புகளை ஏற்ப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் அப்பகுதி இளைஞர்கள் நக்சலிசம் பக்கம் செல்லாமல் இருப்பார்கள்.

நாம் இன்னும் பல காலத்திற்கு தீவிரவாதத்திக்கு, பாகிஸ்தானையே மட்டும் குறை சொல்ல முடியாது. நம் மண்ணிலும் களைகள் உள்ளன. அவையும் களையப்படவேண்டியவையே.

நமது ஊடகங்களும் நக்சலிசம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மேலும் அதிக முக்கியத்துவம் வேண்டும். பாகிஸ்தானிலிருந்து வரும் தீவிரவாதத்திற்கு கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவம், நக்சலைட்டுகள், ஒரு காவல் நிலையத்தை எரிப்பதையும் , பீகாரில் புகுந்து இருபது அப்பாவி பொதுமக்களை அழிக்கும் செயலைக்் கண்டிப்பதற்கும் அவற்றை மக்கள் முன் எடுத்துச் செல்வதற்கும் முக்கியத்துவம் தரவேண்டும்.

நக்சலிசம் மாவோஸ்ட்டுகள், உல்பா உள்ளிட்ட அனைத்துத் தீவிரவாத இயக்கங்களும் வேருடனும் வேரடி மண்ணுடனும் ஒழிக்கப்படவேண்டும்். வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மத்திய மாநிலங்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும். அப்படி செய்தால்தான் நக்சலைட்டுகளை ஆணி வேருடன் அழிக்க முடியும்.

No comments: