Friday, October 16, 2009

சிரிக்கிறேன், அனைவரும் ஒன்று போல் இருப்பதை எண்ணி!

பொதுவாக எனக்கு தமிழ் உச்சரிப்புகள் சிறப்பாக வரவில்லை. குறிப்பாக ர,ற மற்றும் ல,ள,ழ மற்றும் ந,ன,ண க்குரிய வேறுபாடுகள் ஒன்றும் தெரியவில்லை. தவறாகவே உச்சரிக்கிறேன். தமிழ் இலக்கியங்கள், எடுத்துக்காட்டாக கலிங்கத்துப் பரணி, திருக்குறள், புநானூறு ( இவையே இப்போதைக்கு என்னிடம் உள்ள இலக்கியப் புத்தகங்கள். அகநானூரைப் படிக்க வேண்டும் என்ற ஆசைதான்!, ஆனால் புத்தகம் கிடைக்கவில்லை. பரவாயில்லை இப்போதைக்கு காமத்துப்பால் போதும் ;) ) ஐப் படிக்கும் போது தமிழ் அமுதின் சுவையை முழுவதுமாக உணர முடியவில்லை.ஒரு தமிழனாக இருந்து கொண்டு எனக்கு தமிழே சரியாகத் தெரியவில்லை என்று எண்ணும் போது சற்று அவமானமாகத்தான் உள்ளது.

தமிழின் சிறப்பே ர,ற மற்றும் ல,ள,ழ மற்றும் ந,ன,ண க்குரிய வேறுபாடுகள்தான். அதனால் ஒரு நல்ல தமிழாசிரியரிடம் தமிழ் கற்றுக்கொள்ளலாம் என்று, என் நண்பர்களிடம் விசாரித்தேன், உடனே அவர்கள் அனைவரும் சிரித்தனர், இவ்வளவு நாள் கழித்து நீ தமிழ் கற்றுக்கொள்ளப் போய்கிறாயா என்று. பெரும்பாலானோர் இந்த எழுத்துக்களிடையே உள்ள வேறுபாடு தெரியாமல் தான் இருக்கிறார்கள், பின் நீ மட்டும் ஏன் வேறுபடுகிறாய் என்று சிரித்தார்கள். நானும் அவர்களைப் பார்த்து சிரித்தேன், அவர்கள் அனைவரும் ஒன்று போல் இருப்பதை எண்ணி!

No comments: