Sunday, October 18, 2009

புலி



புலி, இந்தியாவின் தேசிய விலங்கு. புலியின் கம்பீரமே மிக அருமையாக இருக்கும். சொல்லப் போனால் புலிதான் உண்மையான காட்டு ராஜா. ஒரு புலிக்கும் சிங்கத்துக்கும் சண்டை வைத்தால் பெரும்பாலும் புலிதான் ஜெயிக்கும் . சிங்கத்தின் கர்ஜனைக்காகவே சிங்கம் காட்டு ராஜாவாக உள்ளது!.

உலகிலேயே புலிகள் அதிகமாக இருக்கும் நாடு இந்தியா தான். இதற்க்கு நாம் இந்திரா காந்திக்கே நன்றி சொல்ல வேண்டும். 1972 ஆம் ஆண்டு அவர் கொண்டு வந்த "Project Tiger" திட்டமே புலிகளை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றியது . தற்போது இந்தியாவில் 1411 புலிகள் உள்ளன. இது இதற்க்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் எண்ணிக்கையைவிட மிகக் குறைவு தான். சென்ற கணக்கெடுப்பின்போது 3000 திற்கும் மேற்ப்பட்ட புலிகள் இருந்தன. இதற்க்கு முக்கியக் காரணம் தற்போதைய கணக்கெடுப்பு சென்ற கணக்கெடுப்பைவிட மேம்பட்ட அறிவியல் முறைப்படி எடுக்கப்பட்டது. அதனால் உண்மையான எண்ணிக்கை தெரிய வந்துள்ளது. மேலும் சென்ற கணக்கெடுப்புகளின் போது அதிகாரிகள் தங்கள் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள புலிகளின் உண்மையான எண்ணிக்கையைவிட அதிகமாகக் காட்டினார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இப்புலிகளில் பெரும்பாலானவை இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைதொடரிலும், இந்தியாவின் மத்திய மாநிலங்களில் உள்ள காடுகளிலும், சுந்தரவனக் காட்டிலும் மற்றும் வட கிழக்கு
மாநிலங்களிலும் காணப்படுகின்றன.

இந்தியாவிற்கு அடுத்து புலிகள் அதிகமாக காடுகளில் இருப்பது நேபாளிலும், பங்களாதேசிலும்தான். அதுவும் சில நூறு புலிகளே.

உலகிலேயே புலிகள் அதிகமாக இருக்கும் நாடு இந்தியா என்பது, காடுகளில் இருக்கும் புலிகளின் எண்ணிகையை குறிப்பிடும்போது மட்டும் தான். உண்மையில் புலிகள் அதிகமாக இருக்கும் நாடு அமெரிக்கா. அங்கிருக்கும் புலிகள் அனைத்தும் தனியார் வசமும் மற்றும் Zoo க்களிலும் உள்ளன. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 12000 மேற்ப்பட்ட புலிகள் உள்ளன. ஆனால் காடுகளில் ஒரு புலி கூட கிடையாது. அதனால் தான் இந்தியாவிற்கு இத்தகையப் பெருமை.

அமெரிக்காவிற்கு அடுத்து புலிகள் அதிகமாக இருக்கும் நாடு சீனா. சீனாவில் புலிகள் Tiger Farm களில் வைத்து வளர்க்கப்படுகின்றன. சீனாவில் புலிகளின் உறுப்புகள் குறிப்பாக எலும்புகள் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. அதற்குத் தான் இத்தகைய "Tiger Farms". ஆனாலும் சீனா 1993 ஆம் ஆண்டிலிருந்து புலிகளின் உறுப்புகளைப் பயன்படுத்துவதை தடை விதித்துவிட்டது . இருந்தாலும் இத்தகைய "Tiger Farms" இல் புலிகள் வளர்க்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன . இந்த "Tiger Farm" களில் இறக்கும் புலிகளின் உறுப்புகள் சேகரிப்படுகின்றன. சீனாவில் தற்போது இருக்கும் புலிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5000. அவற்றில் பெரும்பாலனவை இத்தகைய "Tiger Farm" களில் தான் உள்ளன. சில புலிகள் சீனக் காடுகளிலும் உள்ளன. இவ்வாறாக "Tiger Farm" களில் சேகரிக்கப்படும் புலி உறுப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், அவற்றையாவது பயன்படுத்தத் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை சீனாவில் வலுப்பெறுகிறது. இருந்தாலும் அத்தடையை நீக்கக் கூடாது என்று எதிர்ப்புக்குரல் உலகம் முழுவதிலிருந்தும் வலுக்கிறது . இந்தியாவும் தடையை நீக்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளது. ஏனெனில் அத்தடையை நீக்கினால் இந்தியாவில் புலிகளை வேட்டையாடுதல் அதிகரித்துவிடும்.

இந்தியாவிலும் புலிகள் ஒன்றும் அவ்வளவு பாதுகாப்பாக இல்லை. பன்னா மற்றும் சரிஸ்கா உயிரியல் பூங்காக்களில தற்போது ஒரு புலியைக்கூடக் காண முடிவதில்லை. பெரும்பாலும் வேட்டையாடுதலே அதற்குக் காரணம். அதற்க்கு அதிகாரிகளை மட்டுமே குறை சொல்லிப் பயன் இல்லை. ஏனென்றால் அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஆயுதங்கள் வேட்டைகாரர்களுடன் சண்டையிடுவதற்கு தகுந்த வகையில் இல்லை. மேலும் வனத் துறையில் உள்ள படையின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு. இவ்வாறாக பல மாநிலங்களில் புலிகளின் எண்ணிக்கை குறைந்த போதும் தமிழ்நாட்டில் மட்டும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது நமக்குப் பெருமை தான் !

பல வன உயிரினக்காப்பகங்களிளுருந்து புலிகள் முற்றிலும் காணமல் போனது இந்திய அரசின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. அதனால் "Project Tiger" க்கு மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கி உள்ளது. இருந்த போதிலும் அந்த நிதி ஒழுங்கான முறையில் பயன்படுத்தவேண்டும்.

நம்முடைய சந்ததிகள் புலிகளை படத்தில் மட்டுமே பார்க்கும் நிலைமையை ஏற்ப்படுத்தினால் வருங்காலம் நம்மை மன்னிக்காது.

5 comments:

Shankar.Nash said...

nice post da.. Tiger is one of the most majestic animals .. and it looks even more when it is in forest, on its own.. rather than being captive.

Though, its a happy news that India has the largest number of wild tigers, its disheartening to know that it could have been more if only it is free from the poachers and terrorists (particularly in central and north east india).

The indian govt is now very particular about increasing the count of the tigers. Hope they succeed in their effort.

Haripandi said...

useful link about tiger

http://www.dawn.com/wps/wcm/connect/dawn-content-library/dawn/news/sci-tech/08-for-the-tiger-a-year-closer-to-extinction-ts-02

ரவி said...

இதுமாதிரி நல்ல விஷயங்களை எழுதுங்கப்பா...

Unknown said...

சூப்பர்

Anonymous said...

https://www.instagram.com/reel/Chko_FkhC6P/?igshid=YmMyMTA2M2Y=