Monday, October 5, 2009

ஆகையால் எழுத்தை நான் நேசிக்கத்தான் செய்கிறேன்!

நான் பல காலமாகவே blog எழுதவேண்டும் என்று எண்ணினேன். சிறிது காலத்திற்கு முன்பு என் நடைமுறை வாழ்க்கையை மாற்ற எண்ணி blog எழுத ஆரம்பித்தேன். சிறிது சிறிதாக blog எழுதுவது எனக்குப் பிடித்துப் போனது, அத்துடன் கூடவே ஒரு தொந்தரவையும் தர ஆரம்பித்தது, அதாவது அது என்னுடைய நேரத்தையும் அதிகமாக சாப்பிட ஆரம்பித்தது. முக்கியமாக எனக்குப் பிடித்த வாசித்தலுக்குரிய நேரத்தின் பெரும் பகுதியையும் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தது. என்னடா இவன் பத்து blog எழுதுரதுக்குள்ளவே இப்படி புழம்புகிறான் என்கிறீர்களா?.

பொதுவாக முதல் தடவை குட்டி போடும் யானையை, in experienced mother (இது அனைத்து உயிரினங்களுக்கும் ் பொதுவான வார்த்தை தான்! ) என்பார்கள். அது தன்னுடைய குட்டியை சிறுது நேரம் கூட படுக்க(ஒய்வு எடுக்க) விடாது. அது இறந்து விட்டதோ என்ற பயத்தின் காரணமாக எப்பொழுதும் எழுப்பிக் கொண்டே இருக்கும்.

அது போல, இந்த blog என் நேரத்தைச் சாப்பிடுகிறது என்ற என்னுடைய பயம் , ஒரு வேளை நான் ஒரு in experienced blogger ஆக இருப்பதன் காரணமாகக் கூட இருக்கலாம். ஆனால் இந்தப் புழம்பல் நிச்சயமாக அனுபவமின்மை in experienced காரணமாக மட்டுமே அல்ல. மேலும் இது என் நேரத்தை சாப்பிடுகிறது என்ற பயம் கூட அல்ல, எனக்கு அதையும் தாண்டி ஒரு விஷயம் இருப்பதாகவேத் தோன்றுகிறது. நான் எழுத ஆரம்பித்த பிறகு, என்னுடைய வாசிப்பிற்கான நேரம் குறைந்து விட்டது. அதாவது என்னுடைய எழுத்து என்னுடைய வாசிப்பை தின்று விடுகிறது. அதாவது என்னுடைய எழுத்து, வாசிப்பதின் மூலம் நான் கற்கும் புதுப்புது விசயங்களைத் தடுக்கிறது. இதை நான் நிச்சயமாக என் எழுத்தின் மீது குறை சொல்லக் கூடாது. அது என்னுடைய நேர நிர்வாகத்தின் மீது உள்ள குறைபாடே . மேலும் நான் எழுதும் பதிப்புகளில் 90% க்கு மேலும் , எனக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த விசயங்களாகவோ அல்லது ஏற்கனவே நான் அவற்றைப் பற்றிப் பலருடன் பல முறை விவாதித்த விசயங்களாகவோதான் இருக்கின்றன. அவற்றை எழுதுவதன் மூலம் நான் புதிதாக எதுவும் கற்பதில்லை. அவற்றை எழுதுதல் என்பது எனக்குத் தெரிந்ததை கக்குவதைப (இதற்க்கு பதமான வார்த்தை எனக்கு தெரியவில்லை, ஆகையால் என்னை மன்னிக்கவும் ;) ) போலவே உணர்கிறேன் .

வாசித்தல் என்பது எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம். எழுதுதல் என்பதை விட மிகவும் பிடித்த விஷயம் என்றும் கூறலாம். நான் எழுதுவதற்க்காக புதிதாக எதையும் வாசிப்பதில்லை அல்லது கற்பதில்லை. கற்றதையே எழுதுகிறேன். அதுவே எனக்கு ஒரு bore ஆன விசயமாக உள்ளது. மேலும் இதற்கு என்னுடைய typing வேகமும், வார்த்தைகளை கோர்வையாக அமைப்பதில் எனக்கு உள்ளக் குறைபாடும் சில (முக்கியக்) காரணங்கள். என்னுடைய எழுத்துக்களில் நீங்கள் சிறிது எழுத்துப்பிழைகளையும் காணலாம். முக்கியமாக சந்திப் பிழைகள். அவை என்னுடைய கவனமின்மை காரணமாகவும், Google transliterator ஐ பயன்படுத்துவதில் எனக்கு உள்ள அனுபவமின்மை காரணமாகவும் அமைகின்றன . என்னுடைய எழுத்தில் இருக்கும் மிக மிக முக்கிய குறைபாடு வாக்கிய அமைப்பு மற்றும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல் . இவ்விரண்டிலும்் நான் மிகவும் தேர்ச்சிக் குறைந்தவன். அந்தக் குறைபாடு எனக்கு மிகச் சலிப்பைத் தருகிறது.

இவ்வளவு குறைபாடுகளையும் தாண்டி எழுதுதல் என்பது எனக்கு பிடித்ததாகவே உள்ளது ;). அதற்கு ஒரு முக்கியக் காரணம் எழுத்தில் இருக்கும் ஒரு ஈர்ப்பு. எழுத்தில் இருக்கும் ஈர்ப்பானது மிகவும் ஆச்சரியப்படத்தக்கது. எழுத்தும், பேச்சும் எல்லாரையும் தன் பால் ஈர்க்கும் வல்லமை வாய்ந்தவைகள். நான் என்னை ஒரு வாசிப்பாளன் என்றுக் காட்டிக் கொள்வதன் மூலம், எழுத்தில் இருக்கும் ஈர்ப்பை என்னால் மிக நன்றாக உணர முடிகிறது. மிக நல்ல ஒரு கட்டுரையோ அல்லது மிக நல்ல நாவலையோ படித்து முடித்த பிறகு ஏற்படும் பரவச உணர்வு மிக அற்புதமானது. மிக நல்லக் கட்டுரை அல்லது நாவல் என்பது அது கூற வரும் விஷயங்களை பற்றியது மட்டுமே அல்ல. அந்தக் கட்டுரை அல்லது நாவலில் இருக்கும் கரு, அக்கருவை அது எடுத்துரைக்கும் முறை, அதில் உள்ள வாக்கிய அமைப்புகள், சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல், இப்படி பல விசயங்கள் சேர்ந்து அவற்றை சிறந்தவைகளாக ஆக்குகின்றன. என்னுடைய எழுத்துக்களும் அவ்வாறாகவே இருக்க விரும்புகிறேன். அதை முயற்சியின் மூலமும், பயிற்ச்சியின் மூலமும் மட்டுமே கொண்டுவர முடியும்.

எழுத ஆரம்பித்த பிறகு நான் என்னை ஒரு புது மனிதனாக உணர்கிறேன் . எழுத்தானது எனக்கு ஒரு புது அடையாளத்தைக் கொடுத்துள்ளது. பொதுவாக எப்பொழுதும் நான் விசயங்களைத் தெரிவிப்பதைப் பற்றி் மட்டுமே கவலைப்பட்டேனேயொழிய ,அவற்றைக் கூறும் முறையைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை். (அதனால் தான் என்னவோ தேர்வில் தமிழில் மற்றப் பாடங்களை விடக் குறைந்த மதிப்பெண்ணைப் பெற்றேன் ;) ). அதே போல் தான் வாசிக்கும் பொழுதும் விசயங்களிலேயே என்னுடைய கவனம் சென்றது. அதில் அமைந்த வாக்கிய அமைப்புகளையோ அல்லது வார்த்தைத் தேர்ந்த்தெடுத்தல்களிலோ கவனம் கொண்டதில்லை. ஆனால் இப்பொழுது வாசிக்கும்பொழுது அவற்றிலும் கவனம் கொள்கிறேன்.

பொதுவாக நான் என்னைச் சுற்றி நடக்கும் விசயங்களிலும் இதுவரை பெரிதாக கவனம் கொண்டதில்லை. ஆனால் இப்பொழுது கவனம் கொள்கிறேன் (blog எழுத உதவும் அல்லவா! ).

இப்படி என்னுள் பல மாற்றங்களை ஏற்ப்படுத்திய எழுத்தை நான் நேசிக்கத்தான் செய்கிறேன் ! :).

2 comments:

JDK said...

மச்சி, எனக்கு கருத்து போட மட்டும் தான் பிடிக்கும் :)

JDK said...

Have u watched the film " The Hurricane" my fav hollywood actor Denzel Washington will quote a phrase in this film "Writing is Magic". Great Going.