Tuesday, August 17, 2010

களவாணி - விமர்சனம்


விமல், ஓவியா நடிச்ச களவாணி படத்த இந்த சனிக்கிழமைதான் பார்க்க நேரம் கிடைச்சது. நானும் மதுவும் ஒரே நாளுல திரை அரங்கத்துல ரெண்டு படம் பாத்ததில்ல. அது இப்பதான் வாச்சது . இந்த சனிகிழமை 2.30 க்கு மினி உதயம்ல களவாணியும், 7 மணிக்கு INOX ல வம்சமும் பார்த்தோம். சரி களவாணியை மாயாஜால்ல பாக்கலாம்னு பாத்தா டிக்கெட் கிடைக்கல. படம் வந்து இவ்வளவு நாள் ஆகியும் டிக்கெட் கிடைக்கலனா படம் எந்த அளவிற்கு நல்ல படம்னு தெரிஞ்சுக்கலாம். கடைசியா நானும் மதுவும் உதயம் போய்தான் படம் பாத்தோம். படம் நல்லவேள சோட போகல. காமெடி, காதல், விருவிருப்புன்னு நல்லா போச்சு.

படத்துல விமல் , அரிக்கி என்கிற அறிவழகனா நடிச்சுருக்கார். ஓவியா , மகேஷ்வரியா நடிச்சிருக்காங்க.படத்துல விமல் , 12 வது கூட பாஸ் பண்ணாம எந்த வேலை வெட்டியும் செய்யாம ஊர் சுத்துற இளைஞரா வர்றார். வீட்டுல இருக்குற பொருள் எல்லாத்தையும் ஒடச்சு அம்மாவ மிரட்டி காசு வாங்கிட்டு ஊர் சுத்துறார் . பாக்குற எல்லா பொண்ணுங்களையும் கட்டிகிறியானு கேட்குறாரு . படத்துல சின்ன சின்ன இடங்களையும் இயக்குனர் பாத்து பாத்து செய்துருக்கார். ஓவியாவ ஏன் நெல்லு திருடுனன்னு மிரட்டிட்டு நண்பன் கிட்ட அந்த பொண்ணு பேனாவ தொலச்சுருச்சுனு சொல்றதும் , சிகரெட் கேட்குறவருக்கு முன்னாடி சிகரெட் இருக்குற பாக்கெட்ட தூக்கி வீசிட்டு அப்புறம் அவர் போன பின்னாடி இவனுக்குலாம் எவன் சிகரெட்டு கொடுப்பான்னு சொல்லிட்டு கீழ போட்ட சிகரெட்ட எடுக்குற இடமும் , இப்படி சின்ன சின்ன இடங்களும் நல்லா இருக்கு. விமல் ஒரு அலட்சியமான இளைஞருக்கு நல்லா பொருந்துராறு. விமலுக்கு செமையா body language வருது. செம அலட்சியமா நடிக்கிறாரு.


கஞ்சா கருப்பு வர்ற இடம்லாம் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகுது. கஞ்சா கருப்ப குடிக்காத
பாலிடாய்ல குடிச்சதா சொல்லி ஆஸ்பத்திரியில சேக்குற இடமும் அதுக்கு கஞ்சா கருப்பு பொண்டாட்டியிட்ட அவ மேல சந்தேகப்பட்டு பாலிடாய்ல குடிச்சதா சொல்லற இடமும் , கரகாட்ட காரிக்கு இரநூறு ரூபா கொடுத்து அத பஞ்சாயத்து என்கிற கஞ்சா கருப்பு கொடுத்ததா சொல்லற இடமும் , கஞ்சா கருப்பு இறந்து போயிட்டதா announce பண்ற இடமும் செம சூப்பெர்ப்.


படத்தின் கிளைமாக்சில் என்ன நடக்கப் போதுன்னு ஒரே பரபரப்பா இருந்தாலும் கடைசி வரை காமெடி இருக்கு . அதுவே இந்த படத்தின் ஒரு பலம்னு சொல்லலாம். இன்னொன்று நடிகர்கள் தேர்வு . படத்தின் அனைத்து நடிகர்களும் தங்களுடைய பணியை சிறப்பாகச் செய்துள்ளனர். சரண்யா வரும் இடங்களிலெல்லாம் தன் மகன் ஆவணி வந்தா டாப்பா வந்துருவானு சொல்ற இடமும் , இளவரசு தன் மகனை நம்பாமல் கமெண்ட் அடிக்கும் இடங்களும் நல்லா இருக்கு.

இந்த படத்தில் ஏற்கனே இரண்டு பாடல்கள் ஹிட் ஆகிடுச்சு படத்தின் பெரிய பிளஸ் பாயிண்ட் விமலும் திரைக்கதையும்தான். படத்தின் ஒரு நாயகியைத்தாண்டி எனக்கு படத்தின் கதாநாயகனை பிடித்த படங்கள் மிகச் சிலவே ;-) . அதில் இந்த படமும் ஒன்று.

பெரிய ஹீரோக்களைக் கொண்டு டப்பா கதையையும் , திரைக்கதையையும் நம்பி கோடிகளை கொட்டி எடுத்து ஓடாத டப்பா படங்களுக்கு மத்தியில் இந்த படம் ஒரு சம்மட்டி அடி . நல்ல படங்கள் வந்தால் மக்கள் ஹீரோக்களையும் , ஹீரோய்ன்களையும் பர்றி கவலைப்படாமல் நல்ல படங்களை ஓட வைப்பார்கள் என்பதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் இந்த படம்.

இந்த வருஷத்தின் ஹிட் படம் . குடும்பத்துடன் சென்று பார்க்க மிகச் சிறந்த படம் .

5 comments:

அமுதா கிருஷ்ணா said...

குடும்பத்துடன் பார்க்க, வாய் விட்டு சிரிக்க..விமல்,சரண்யா இயல்பான நடிப்பு..

Jerry Eshananda said...

Good Film Review.

JDK said...
This comment has been removed by a blog administrator.
அமைதி அப்பா said...

நானும் மிகவும் ரசித்துப் பார்த்தேன். வன்முறை இல்லாத கிராமத்துப் படம்.
நல்ல விமர்சனம்.
பாராட்டுக்கள்.

Haripandi Rengasamy said...

@அமுதா கிருஷ்ணா

ஆமாம், அமுதா இது ஒரு நல்ல திரைப்படம். உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

@ஜெரி ஈசானந்தன்

மிக்க நன்றி ஜெரி

@jdk,

நண்பா நம் இரண்டு பேர் இதயங்களும் ஒன்றாக துடிக்கின்றன.

@அமைதி அப்பா

மிக்க நன்றி அமைதி அப்பா