Sunday, August 29, 2010

இனிது இனிது


இன்று Express Avenue Mall இல் சத்யமின் புது தியேட்டரான Escape இல் இனிது இனிது படம் பார்த்தேன். அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாததால் மது வரவில்லை. நான், கார்த்திக் மற்றும் பிரசாத் அண்ணன் போயிருந்தோம். Mall ரொம்ப பெரிதாக இருந்தது. டாய்லெட் யூரினல் எல்லாம் பார்க்க நல்லா இருந்தது ;-). சீட் எல்லாம் நல்ல அகலமாக வசதியாக இருந்தது. Mall இன் basement இல் பார்கிங். இன்னும் mall இன் நிறைய இடங்கள் காலியாக உள்ளன. என்ன ஸ்நாக்ஸ் விலையும் பார்க்கிங் கட்டணுமும் ரொம்ப ஜாஸ்தி ஆக இருந்தது. கோக் ஒரு டம்பளர் 80 ரூபா. பாப்கார்ன் 100 ரூபா. பார்கிங் 3 மணிநேரத்துக்கு 40 ரூபா. படத்து டிக்கெட் விலையைவிட ஸ்நாக்ஸ்க்குத்தான் அதிகம் செலவாச்சு.

படம் தெலுகில் சூப்பர் டூப்பர் கிட் ஆன Happy Days இன் மறு உருவாக்கம். கதை கல்லூரி வாழ்க்கையைப் பற்றியது. ஒரு பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டிலிருந்து கடைசி ஆண்டு வரையிலான நிகழ்ச்சிகளைக் கொண்டது.


இந்த கல்லூரியின் முதலாம் ஆண்டில் சேரும் ஓர் மாணவனின் பார்வையிலிருந்து இக்கதை சொல்லப்படுகிறது. படத்தில் சீனியர் ஜூனியர் பிரச்சினை, ராகிங், காதல், நட்பு என்று எல்லாம் உண்டு. படத்தில் நாலு பசங்க மூணு பொண்ணுங்க. இவர்களுக்கிடையே நட்பு காதல் எல்லாம் ஏற்ப்படுகிறது. இவர்களின் காதல் ஜெயித்ததா, அவர்களின் கல்லூரி வாழ்க்கை எப்படி முடிந்தது என்பதே கதை .

படத்தில் கல்லூரி லூட்டியையும் காதலையும் ஆதாரமாக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. சின்ன சின்ன லூட்டிகள் பார்க்க நன்றாக உள்ளது. அந்தப் பொண்ணு மது பார்க்க நன்றாக இருக்கா. படத்தின் பாடல்கள் இன்னும் கிட் ஆயிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். படத்தில் முகம் சுழிக்கக் கூடிய காட்ச்சிகள் எதுவும் இல்லை. மேலும் படம் பார்ப்பவர்களை நாம் இந்த மாதிரி கல்லூரி வாழ்க்கையை இழந்துவிட்டோமே என்று உணர வைப்பதே அதன் வெற்றிதான் .

படத்தில் சித்தார்த்துக்கும், மதுவுக்கும் நட்பிலிருந்து காதல் பூப்பதும், பிறருடன் பேசுவதால் ஏற்ப்படும் பொறாமையும் நன்றாக உள்ளது. படத்தில் விமலாகவும், அப்புவாகவும் நடித்திருப்பவர்களால் நகைச்சுவை நன்றாக வந்துள்ளது. படத்தில் அர்ஜூனாக வரும் அந்த சீனியர் மாணவன் நன்றாக உள்ளார். இன்னும் முயன்றால் நல்ல திரைப்படம் பெறலாம்.

மற்றபடி படம் பார்க்கக்கூடிய படம்தான்

2 comments:

சசிகுமார் said...

அருமை நண்பா வாழ்த்துக்கள்

Haripandi Rengasamy said...

மிக்க நன்றி சசிகுமார் அவர்களே