Tuesday, December 1, 2009

Over Night இல் உலக வல்லரசு !

இந்தியப் பிரதமர், அரசு முறைப் பயணமாக அமெரிக்க சென்றிருந்தார்( அல்லது சென்றிருக்கிறார்). ஒபாமா, அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின் ஒரு வெளிநாட்டுத் தலைவரை அமெரிக்காவில் சந்திப்பது இதுவே முதல் முறை. ஒபாமாவும் சீனா உட்பட கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று விட்டு இப்பொழுதுதான் திரும்பியுள்ளார். அதனால் அவர் சீனாவுடன் தான் பேசிய விசயங்களை நமது பிரதமருடன் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இச்சந்திப்பின் போது அமெரிக்கா, இந்தியாவை ஒரு "World Power" ஆக அங்கீகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.இதன் மூலம் UN Security counsel - இல் இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்க பெரும் வாய்ப்பாக இருக்கும். அந்த நிரந்தர இடம் கிடைப்பது Veto power உடனா அல்லது Veto power இல்லாமலா என்பதை அடுத்து பார்த்துக் கொள்ளலாம் . அப்படி ஏதாவது அமெரிக்கா, இந்தியாவை அங்கீகரித்ததா? கடந்த 5, 6 நாட்களாக நான் இந்த உலகத்திலேயே இல்லை. ஒரே காய்ச்சல். அதனால் தயவு செய்து என்ன நடந்தது என்று கூறுங்கள். இந்தியா over night ல உலக வல்லரசாக ஆயிடுச்சா? யாராவது சொல்லுங்கப்பா :)

2 comments:

Suppa S said...

காய்ச்சல் ல , உடம்பை பார்த்துக்கொள் தம்பி... இந்திய ஒர் இரவில் இரவல் வல்லரசு அக தேவை இல்லை என்பது என் கருத்து. காலம் வரும் மாற்றம் நிகழும் !! Looking fwd :)

Haripandi said...

Yes suppa, I don't want that, a third party to recognize India as a world power. Even if we think like this , the reality is different . Everything in this world depends on who recognizes whom. In that sense we need to make others to wide open their eyes. One more thing also there "Rome was not built in one day.".

But, I just want to know what was the outcome of our PM's first state visit to US after Obama took office .