Monday, February 4, 2013

சமையல்



சின்ன வயசுல இருந்து எங்க அம்மாவுக்கு சமயலுல அப்பப்ப கொஞ்சம் உதவி பண்ணுவேன். அதாவது பால் காய்ச்சும்போது அப்பப்ப பக்கத்துல இருந்து பால் பொங்காம பாத்துக்குறது, குக்கருல விசில் போடுறது, குக்கர் விசில் அடிச்சுச்சுனா கரெக்டா எண்ணி சொல்லுறதுனு இப்படி சில. இதனாலையே எனக்கு சமையலாம் பெரிய விசயமே இல்லன்னு ஒரு நினைப்பு அப்பயே வந்துருச்சு. எங்க அம்மாவும் வேற, மத்தவங்ககிட்ட என்னைய விட்டுக்கொடுக்காம சிவா சமயலுல நல்லா உதவி பண்ணுவான்னு பெருமையா (!!!)  சொல்லுவாங்களா, நிஜமாவே எனக்கு, நமக்கு சமையல் தெரியும்லனு ஒரு எண்ணம் வந்துருச்சு. இத்தனைக்கும் நான் முழுசா சமையல் பண்ணது (!!!) ஒரே ஒரு தடவதான். அது நான் காலேஜ் படிக்கும்போது அம்மாவும் அப்பாவும் வீட்ல இல்லாதப்ப செஞ்சேன். அந்த சாப்பாட்ட சாப்பிட்ட ஜீவன்கள் மதுவும் எங்க பெரியப்பா பைய்யன் பிரபுவும்தான். ஒரு சாம்பாரும் சாதமும் காயும் வச்சேன். சொன்னா நம்பணும், கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்புட்டுடாய்ங்க. அப்புறம் மத்தியானம் 12 மணிக்கு ஆரம்பிச்சு 4 மணிக்கு முடிச்சா. பசி. அதான் எல்லாம் காலி ;). அப்பயே எனக்கு நம்ம சமையலோட அரும பெரும தெரிஞ்சுருக்கணும் :). ஆனா பசி ருசி அறியாதும்பாங்கல்ல, அதனால நம்ம சமையலோட ருசி தெரியாமலயே போயிருச்சு. 

அதுக்கப்புறம் நம்ம சமயல பத்தி பெரிசா அறிஞ்சுக்குற எண்ணமே வரல. நானும் மதுவும் தனியா இருக்கும்போது கூட எங்க அம்மா, டேய் ரெண்டு பேரும் ஒரு சாதம் வச்சு சாப்புடறதுக்கு என்னடான்னு சொல்லும்போது கூட , நாம சோம்பேறித்தனத்துனாலதான் செய்யாம இருக்கோம், சமயலுலாம் பெரிய விசயமே இல்லன்னுதான் தோணுச்சு. அப்பப்ப மதுகூட, வித்யாட்ட , எங்க அண்ணன் நல்லா சமைப்பானு வேற சொல்லுவான். அப்பலாம் வித்யா, ஏங்க எல்லாரும் நீங்க நல்லா சமைப்பீங்கனு சொல்றாங்க , நீங்க ஒரு தடவ கூட எனக்கு செஞ்சுக் கொடுக்கலன்னு சொல்லும்போது மதுவையும், என்னோட சமையல் திறமையையும் (!!!) நினச்சு பெருமையா இருக்கும். 

Onsite கிளம்பும்போது கூட எப்படி onsiteல சமைச்சு சாப்புடப்போறம்னு பெரிசா பயம் ஒன்னும் தோணல. Onsite வந்ததுப்புறம்தான்  சமையல் பண்ற வாய்ப்பே (!!) வந்துச்சு.  கிளம்பும்போது கூட வித்யா, அங்க போயிட்டு சமையல்ல ஏதாவது சந்தேகம் இருந்துச்சுனா போன் பண்ணுங்க, சொல்றேன்னு சொன்னா. அன்னைக்கு பேசும்போது கூட வித்யா, சமையல்ல பெரிய ஆளுதான் போல, சந்தேகம்லாம் கேட்குறதே இல்லன்னு கேட்டா. ஆனா வித்யாவுக்கு தெரியாது, நம்ம பண்றதுலாம் Just in Time(JIT) னு . எல்லாமே நமக்கு எப்ப வேணுமோ அப்பதான் அதப்பத்தியே யோசிக்க ஆரம்பிக்குறது. ஆமாம், நாம்ம வர்ற 10 மணிக்கு இந்தியால அதிகாலை 3 மணி இருக்கும். அப்ப எங்க போன் பண்ணி சந்தேகம் கேட்குறது. 

அப்படிதான், அன்னைக்கு ஒரு நாள் சமையல் பண்ணலாம்னு ரசப் பொடி எடுக்கும்போதுதான் ரசம் எப்படி பண்ணனும்குறதே தெரியலன்னு தெரிஞ்சது. சரின்னுட்டு ரசம் தயாரிப்பது எப்படின்னு கூகுள் பண்ணேன். வந்ததுல ஒன்ன கிளிக் பண்ணா , எடுத்தவுடனே பருப்புத்தண்ணிய எடுத்துக்கவும்னு போட்டுருந்துச்சு. அப்பதான் ரசத்துக்கு பருப்புத்தண்ணி வேணுமான்னு தெரிஞ்சது. சரி பருப்புத் தண்ணிக்கு எங்க போறது. சரின்னு சாதம் வைக்கும்போது குக்கருல ஒரு டம்ளருல பருப்பும் தண்ணியும் போட்டு வச்சேன். 4 விசில் அடிச்சதும் எடுத்துப்பாத்தா , டம்ளருல பாதி பருப்புதான் இருந்துச்சு. மீதி எல்லாம், நீயும் நானும் ஒன்றன்றி இரண்டில்லைங்குற மாதிரி சாதத்தோட கலந்துருந்துச்சு. சரி இன்னைக்கு தயிர் சாதத்துலையும் பருப்பு போட்டுதான் சாப்பிடணும் போலன்னு நினச்சுட்டு, அப்பயும் மனம் தளரா விக்கிரமாதித்யன் போல ரசம் வைக்குறதுல குறியா இருந்தேன். அப்புறம் அந்த பருப்புல தண்ணிய கரைச்சு பருப்புத் தண்ணியாக்கி, அதுல கொஞ்சம் ரசப்பொடி உப்பு அது இதுன்னு சேத்து ஒரு வழியா ரசம் பண்ணேன். திரும்பவும் பசி ருசி அறியாதுங்குற தமிழ் முதுமொழியால ருசி அறியாமலயே ரசம் சாப்புட்டு முடிச்சேன். அடுத்து மூணு நாளைக்குக்குன்னு  சேத்து வச்ச ரசத்த, அடுத்த மூணு நாள் கழிச்சுதான் எடுத்தேங்குறதால(!!) என் சமையலோட உண்மையான ருசி அறிகிற பாக்கியம் அப்பயும் எனக்கு கிடைக்காம போச்சு :(. 

அடுத்து நம்ம try பண்ணது எண்ணெய் கத்திரிக்காய் !. எனக்கு எண்ணெய் கத்திரிக்காய்னா ரொம்ப பிடிக்கும். சரி அன்னைக்கு எண்ணெய் கத்திரிக்காய் பண்ணலாம்னு நினச்சேன். அத எப்படி பண்றதுன்னு நினைச்சப்ப, எண்ணெய் அதிகமா ஊத்துனா அது எண்ணெய் கத்திரிக்காய்னு என் அறிவுல உதிச்சது. சரின்னு ஒரு அஞ்சு ஆறு கரண்டி எண்ணெய் ஊத்தி அதுல கத்திரிக்காய நாலு கீறு கீறி போட்டேன். அதுல வேண்டிய(!!) மசாலாலாம் போட்டு வதக்கி எடுத்து ஒரு டப்பால போட்டுட்டு ஆபீஸ் கொண்டு போய்ட்டேன். சரின்னு மத்தியானம் லஞ்சுல கொண்டு போயிருந்த தயிர் சாதத்தையும் (ஆமா நாம பண்ற ஸ்பீடுக்கு காலைல இருக்குற முக்கா மணி நேரத்துல சாம்பார், காய்னு ஏதோ ஒண்ணுதான் பண்ண முடியும்), நம்ம எண்ணெய் கத்திரிக்காயையும் எடுத்தேன். அன்னைக்கு ருசி அறியாத பசி எதுவும் இல்லைங்குறதால, மொத வாய் வைக்கும்போதே தெரிஞ்சுருச்சு நாம எண்ணெய் கத்திரிக்காய்ல எண்ணெய் ஊத்த மறக்கல, ஆனா உப்பு போட மறந்துட்டோம்குறது. நமக்குதான் நாம பெரிய சமையல் கலை வல்லுனர்ங்குற எண்ணம் இன்னும் போகலங்குறதால சமையல் பண்ணும்போது ருசிலாம் பாக்குறதே இல்ல. இல்லனா அப்பயே தெரிஞ்சுருக்கும்ல. சரி என்ன பண்ணலாம்னு நினைக்கும்போதுதான், நம்மளுக்குள இருக்க அந்த நளபாகன் எட்டிப்பாத்தான். உப்பு போட்டுதான் சமைக்கணுமா என்ன, சமைச்சுட்டு உப்பு போடக்கூடாதானு நினச்சுட்டு கேண்ட்டீன்ல இருக்குற உப்பு கொஞ்சம் எடுத்துட்டு வந்து உப்பு போட்டு கையாலயே நாலு கிளறு கிளறி  நம்ம எண்ணெய் கத்திரிக்காய் சமையல 6 மணி நேரம் கழிச்சு நிறைவு செஞ்சேன் :) .

அப்படிதான் அன்னைக்கு பண்ண பீன்ஸ் பொரியலுல மசாலா கொஞ்சம் அதிகமாவே போச்சு. சரி என்ன பண்ணலாம்னு நினைக்கும்போதுதான் நான் பீன்ச சமைக்குறதுக்கு முன்னாடி கழுவலல்லன்னு ஞாபகம் வந்துச்சு. சரி அதுனால என்ன, இப்ப பண்ணிரலாம்னு கொஞ்சம் தண்ணி ஊத்தி பொறியலுல இருந்த பீன்ச கழுவுனேன். இதுல பாருங்க ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்ங்கிற மாதிரி பொரியலுல இருந்த பீன்சும் சுத்தமாகிருச்சு அதிகப்படியா இருந்த மசாலாவும் போயிருச்சு ;).

சின்ன வயசுலலாம் எங்க அம்மா சமையல் பண்ணும்போதே, அம்மா திட்ட திட்ட பாதிலயே அடுப்புல இருந்து எடுத்து சாப்புடுவேன். அதே மாதிரி எங்க அம்மா காய் நறுக்கும்போதே தக்காளி, காரட், வெண்டிக்காய் , வெங்காயம்லாம் எடுத்து பச்சையாவே சாப்புடுவேன்.  இந்த மாதிரி சமையல் அரவேக்காடா இருக்கும்போது சாப்ட்ட அந்த பயிற்சிதான் இப்ப எனக்கு உதவுது.

சின்ன வயசுல எனக்கு இருந்த அந்த பயிற்ச்சியும் , நல்லா சமைக்க தெரிஞ்ச வெங்கட்டோட ரூம் மேட்டா இருக்கிறதாலயும்தான் நான் இன்னைக்கு இப்படி blog எழுதிகிட்டு இருக்கேன். அதனால தாய்மார்களே உங்க பசங்க யாராவது சமையல் பண்ணும்போது அரவேக்காடாவே எடுத்து சாப்பிட்டா யாரும் திட்டாதீங்க. அது அவங்களுக்குள்ள இருக்குற கால காலமா உயிர்கள வாழவைக்குற 'Survival of the fittest' ங்குற காரணியின் பயிற்சியாக கூட இருக்கலாம் :).


Photos Courtesy : http://www.jambottle.com/video/487/

2 comments:

JDK said...


//உதவி பண்ணுவேன். அதாவது பால் காய்ச்சும்போது அப்பப்ப பக்கத்துல இருந்து பால் பொங்காம பாத்துக்குறது, குக்கருல விசில் போடுறது, குக்கர் விசில் அடிச்சுச்சுனா கரெக்டா எண்ணி சொல்லுறதுனு இப்படி சில.// அடடே
இது என்ன பிரமாதம் நான் அம்மா சமைக்கும் பொது ..இன்னைக்கு என்ன சமையல்னு கேப்பேன் ...அப்புறம் எப்பயாச்சும் இந்த வாழ இலை வெட்டி வந்து குடுப்பேன் ..எவ்ளோ பெரிய உதவி இதெல்லாம் ...ஹ்ம்ம் இத சொன்னா நம்மலயெல்லாம் ......

Bharathi said...

Samayal ellam orae kalakal dan pola. aana nenga help nu sonadu elam nijama samayal help ah???? Ana epadiyum sapdurenga la adan unga sportiveness. keep enjoying siva.