Thursday, December 16, 2010

மனிதநேயத்தின் கடைசி காலடி சுவடுகள்

ராகவன் அன்று யோகா கிளாசுக்கு ரொம்ப லேட். எப்பொழுதும் விரைவில் கிளம்பி விடுவார் இன்று சற்று கண் அயர்ந்ததால் நேரமாகிவிட்டது. மனைவி பாக்கியத்தை பிடித்து திட்டிக் கொண்டிருந்தார். தான் தான் சற்று அதிக நேரம் தூங்கிவிட்டேன் நீயாவது என்னை எழுப்பி இருக்கக் கூடாதா என்று. அவர் எப்பொழுதும் மதியம் தூங்கும் பழக்கம் இல்லாதவர். அன்று ஏனோ சற்று கண் அயர்ந்துவிட்டார். ராகவன் பொதுவாக அதிக நேரம் தூங்கும் பழக்கம் இல்லாதவர். அதனாலேயே பாக்கியம் யோகா கிளாசை விட சற்று நேரம் கண் அயரட்டுமே என்று வேண்டுமென்றே தான் அவரை எழுப்பவில்லை. ராகவனுக்கு ஒரு 65 வயது இருக்கும். பாக்கியத்திற்கு ஒரு 62 வயது இருக்கும். இருவருக்கும் குழந்தை பாக்கியத்தை அந்த இறைவன் அருளவில்லை. இதனாலேயே அவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் குழந்தையாக இருந்தனர். ராகவன் மத்திய அரசுப் பணியில் கிளர்க்காக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்று ஐந்து வருடம் ஆகிவிட்டது. ஓய்வு நேரத்தில் எப்பொழுதும் வீட்டில் இருக்க வேண்டாமே என்று பாக்கியம்தான் அவரை யோகா கிளாசில் சேரச் சொன்னாள். ராகவனுக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் . அவர்கள் அப்பா காலத்திலேயே சென்னையில் குடியேறிவிட்டனர். அவர்கள் அப்பா அம்மாவிற்கு பிறகு அவர்கள் குடியிருந்த வீடு இவருக்கு வந்தது. அவர்கள் வீடு பல்லாவரத்தில் இருந்தது. தினமும் யோகா கிளாசிற்கு கோடம்பாக்கம் செல்வார். அவரின் யோகா கிளாஸ் டீச்சர் அவரின் நண்பரின் நண்பர். அந்த யோகா கிளாஸ் டீச்சர் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தார். பள்ளி விட்டு ஓய்வு நேரத்தில் அவர் யோகா சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார்.

வீட்டிலிருந்து ராகவன் கிளம்பி விட்டார். அப்படியே நடந்து போய்க்கொண்டிருக்கும் போது அன்னைக்குன்னு பாத்து செருப்பு பிஞ்சு போச்சு. ஏற்கனவே பழைய செருப்புதான். அத இனியும் தச்சு போட முடியாது. செருப்பை உதறி விட்டு நடக்க ஆரம்பித்தார். திரும்பி வீட்டுக்கு நடந்து போய் வேற செருப்பு போட்டுக்கிட்டு போகலாமா என்று பாத்தார். ஆனால் இப்பொழுதே யோகா கிளாசுக்கு நேரம் ஆச்சு. 6.30 க்கு ஆரம்பிக்கும் கிளாஸ் எப்படியும் முடிய 7.30 அல்லது 7.45 ஆகிடும். இப்பொழுது வீட்டிலேயே 6.15 ஆச்சு. வீட்டிலிருந்து பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் 15 நிமிச நடை. 6.30 க்கு ட்ரைன பிடிச்சாலும் எப்படியும் கோடம்பாக்கம் போய்ச் சேர 7 ஆகிடும். யோகா கிளாஸ் டீச்சர் வீடு ஸ்டேஷனுக்கு பக்கம் தான். ராகவனுக்கு சக்கர வியாதி இருந்தது. கால்ல ஏதாவது கல்லு எதுவும் குத்தி வெறுங்கால்ல புண்ணு எதுவும் வந்தா ஆறாதேனு கொஞ்சம் பயமாவேற இருந்துச்சு. அவருக்கு யோகா கிளாஸ் அட்டென்ட் பண்றத விட அவர் ஜோட்டு ஆளுங்க அங்க கிளாசுக்கு வருவாங்க. அவங்கள்ள நாலஞ்சு பேரு நெருக்கமா பழக்கம் ஆகிட்டாங்க. அவங்கள பாக்குறதுதான் அவருக்கு முக்கியமாபட்டது. சரின்னு நடைய விறுவிறுன்னு கட்டினாரு. ஸ்டேஷன் போய்ச் சேர்ந்ததும் ட்ரைன் வந்துருச்சு. கொஞ்சம் கூட்டம்தான். செகண்ட் கிளாஸ் கம்பார்ட்மென்டா பாத்து ஏறிக்கிட்டாரு. மன்த்லி பாஸ் எடுத்துருக்கதால டிக்கெட்டுக்கு கியூல நிக்க வேண்டாம். நேர ட்ரைன் ஏறிடலாம். ட்ரைன் ஏறிடனவுடனே உக்கார சீட் கிடைக்குமான்னு பாத்தாரு. கிடைக்கல. சரின்னு நின்னுக்கிட்டே வந்தாரு. ட்ரைன் ரெண்டு மூனு ஸ்டேஷன தாண்டியது. அவரு பக்கத்துல ஒரு 20 வயசுப் பைய்யன் இருந்தான். பாக்க ரொம்ப டீசென்ட்டா இருந்தான். அவன் தோளுல போட்டுருந்த பையப் பாத்தப்ப எதோ என்ஜினீயரிங் காலேஜுல படிக்கிறவன் மாதிரி தெரிஞ்சது. பைய்யன் கொஞ்சம் மேட்டுக்குடி இளைஞனாத்தான் இருந்தான். கண்ண பாக்க பைய்யன் துறு துறுன்னு இருப்பான்னு தோணுச்சு. வாயில்ல ஏதோ பப்புல்கம் போட்டு மென்னுகிட்டு இருந்தான். அவன் பக்கத்துல்ல இன்னொருத்தன் நின்னுக்கிட்டு இருந்தான். அவன பாக்க ஒன்னும் டீசென்டா இல்ல. கொஞ்சம் பொறுக்கி மாதிரி இருந்தான். கொஞ்சம் நேரம் ஆச்சு பாத்தா அந்த பொறுக்கி அந்த பைய்யன் பான்ட் பாக்கெட்டுல இருந்த பர்ஸ எடுக்க கைய விட்டான். ராகவன் ஒரு நிமிஷம் சுதாரிக்கிறத்துக்குள்ள அந்தப் பைய்யன் டக்குனு அவன் கையைப் பிடிச்சிட்டான். திடீர்னு அந்தப் பொறுக்கி தன் முழங்கால்லுல இருந்து சட்டுன்னு ஒரு கத்திய எடுத்துட்டான். கத்தியப் பார்த்ததும் சுத்தி இருந்தவங்க எல்லாம் தள்ளிப் போய்ட்டாங்க. ஆனா அந்தப் பைய்யன் மட்டும் அசரல. அவன் பிடிச்ச பிடியையும் விடல. கண்ணுல மிரச்சி தெரியல. தைரியமா அவன் கைய பிடிச்சிருந்த பிடிய இறுக்கமா பிடிச்சான். டக்குனு அந்த ரௌடி அந்தப் பைய்யன் கையில சரக்குனு ஒரு வெட்டு வெட்டினான். டக்குனு அது கைய்ய கீறுச்சு. அப்பயும் அந்தப் பைய்யன் பிடிய விடல. சரக்குனு அந்த ரௌடி அந்தப் பைய்யன் வயித்துல கத்திய பாய்ச்சிட்டான். ஆழமாத்தான் பாய்ச்சிட்டான். அந்தப் பைய்யன் மெல்ல சரிஞ்சு கீழ விழுந்துட்டான். அந்த ரௌடி உடனே மவனே எவனாவது இவனைத் தொட்டீங்க அவ்ளோதான்னுனான். இவனுக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும் என்று சொல்லிட்டு பக்கத்துலயே நின்னுக்கிட்டான். கொஞ்ச நேரத்துல அடுத்த ஸ்டேஷன் வரவும் வேகமா இறங்கி ஓடிட்டான். பாத்தா அந்தப் பைய்யன் வண்டில தரையில ரத்த வெள்ளத்துல கிடந்தான். அடிவயித்துல கத்திய பாய்ச்சிட்டதால ரத்தம் நிக்கவே இல்ல. வண்டி ஸ்டேஷன விட்டு கிளம்பிருச்சு. கொஞ்ச நேரத்துல அந்தப் பைய்யன் மயங்கிட்டான். அப்பயும் யாரும் அந்தப் பையன நெருங்கல. கொஞ்ச நேரத்துல ராகவன்தான் மனசு தாங்காம அவன் பக்கத்துல நெருங்கி அவனைத் தூக்கினாரு. பாத்தா ரத்தம் நிக்காம போய்க்கிட்டே இருந்தது. அவனைத் தூக்கி அவரு மடியில வச்சுக்கிட்டாரு. உதவின்னு கூப்பிட்டா யாரும் வரல. ஜனங்கள நினைக்கவே அவருக்கு அருவெறுப்பா இருந்துச்சு. அப்பத்தான் அங்க இருந்த ஒரு முப்பது வயசுப் ஆளு துணைக்கு வந்தான். அவன வச்சுக்கிட்டு தன்னுடைய கர்சீப்ப எடுத்து அந்தப் பையனோட வயித்துல கட்டினாரு. இன்னம் ரத்தம் நிக்கல. இன்னம் ரொம்ப நேரம் ஆச்சுனா பைய்யன் தாங்கமாட்டான்னு தோணுச்சு. கொஞ்ச நேரத்துல அடுத்த ஸ்டேஷன் வந்துருச்சு. வேகமா ராகவன் அந்த 30 வயது ஆளோட இவன தூக்கிட்டு இறங்கினாரூ. அவன தூக்கிட்டு ஸ்டேஷன்ல போகும்போது ஜனங்க வெறுச்சு வெறுச்சு பாக்குறாங்களே தவிர யாரும் உதவிக்கு வரல. அங்க பாத்தா RPF போலீஸ் யாரும் இல்ல. ராகவனும், அந்த முப்பது வயசு ஆளும் அவனைத் தூக்கிட்டு ஸ்டேஷன விட்டு வெளிய வந்தாங்க. அங்க ஒரு ஆட்டோவைப் பிடிச்சு பக்கத்துல இருந்த ஹாஸ்பிட்டலுக்கு போனாங்க. அங்க முதல்ல அந்தப் பையன சேத்துக்கல. அப்பறம் ராகவன்தான் கெஞ்சிக் கூத்தாடி சேத்துக்க வச்சாரு. அவன் பைய நோண்டிப் பாத்ததுல அவன் செல்போன் கிடைச்சது. அதுல அம்மான்னு இருந்த நம்பருக்கு போன் பண்ணி விசயத்த சொன்னாரு.


அந்த முப்பது வயது ஆளுட்ட வா நாம போய் RPF ல கம்ப்ளைன்ட் கொடுப்போம்னு சொன்னாரு. அதுக்கு அந்த ஆளு போங்க சார் நான் தினைக்கும் இந்த ட்ரைன்ல தான் வேலைக்கு போயிட்டு வர்ரேன். நான் கம்ப்ளைன்ட் பண்ணா அந்த ரௌடி இன்னைக்கு இல்லாட்டியும் இன்னொரு நாளு என்ன குத்திருவான். ஏதோ பாவம் இந்தப் பையன பாக்க பாவமா இருந்துச்சேன்னு வந்தேன். வந்த வேலை முடிஞ்சுருச்சு நான் கிளம்பறேன்னு சொல்லிட்டுப் போய்ட்டான். ராகவன்தான் அந்தப் பைய்யன் வீட்டுல இருந்து ஆளுங்க வர்ற வரைக்கும் வெயிட் பண்ணி அவங்க வந்ததும் நடந்த விசயத்த எடுத்துச் சொன்னாரு. அந்தப் பையனோட அம்மாவும் அப்பாவும் அவர கை எடுத்துக் கும்பிட்டாங்க. அப்பத்தான் ராகவன் ஒரு அப்பாவோட வலிய உணர்ந்தாரு. அவங்கட்ட வாங்க போய் RPF ல கம்ப்ளைன்ட் பண்ணுவம்னு சொன்னதுக்கு அவங்க வேண்டாம் சார் என் பைய்யன் பொழச்சு வந்ததே போதும். போலீஸ் அது இதுன்னு வேணாம். என் பைய்யன் அந்த ட்ரைன்லதான் தினைக்கும் காலேஜ் போயிட்டு வர்றான். அந்த ரௌடியால இனிமேலும் பிரச்சினை வேண்டாம். நாம இத இத்தோட விட்டுருவம்னு சொன்னாங்க. அவங்கட்ட இருந்து விடை பெற்று ராகவன் வீட்டுக்கு திரும்பி கிளம்பினாரு. வர்ற வழியெல்லாம் மக்களோட மனசு எந்த அளவுக்கு கடினப்பட்டுப் போய்டுச்சுன்னு மனம் வெதும்பிகிட்டே வந்தாரு. வீட்டுக் வந்து சேரும்போது மணி 11. பாக்கியம் என்னவோ ஏதோனு பயந்துகிட்டு வாசலுலயே காத்துகிட்டு இருந்தா. உள்ள போனதும் ராகவன் நடந்ததெல்லாம் ஒன்னு விடாம சொன்னார். அவருக்கு எல்லாத்தையும் விட மக்களின் மனம் எந்த அளவுக்கு கடினப்பட்டிருந்தால் ஒரு பைய்யன் உயிருக்குப் போராடினதப் பாத்துக்கிட்டே இருந்து எந்த உதவியும் செய்யாம இருப்பாங்கனு தோணுச்சு. மக்கள் இவ்வளவு கேவலமா போயிட்டாங்களான்னு அவருக்கு வெறுப்பா இருந்துச்சு. அதுக்கும் மேல அந்த ரௌடி எந்த தண்டனையும் இல்லாம தப்பிக்கிறத அவரால தாங்க முடியல. அத அவரு பாக்கியத்துட்ட சொன்னபோது பாக்கியம் , அந்தப் பைய்யன் பொழச்சுட்டான்ல அது போதும். அந்த ரௌடிய கடவுள் தண்டிப்பார். நீங்க மனசப் போட்டு அலட்டிக்காம தூங்குங்கனு சொன்னா. ஆனா ராகவனுக்குத்தான் தூக்கம் வரல. இப்படியே கடவுள் தண்டிப்பாருனோ இல்ல ரௌடிக்கு பயந்துட்டோ யாரு அவன காட்டிக் கொடுக்காம இருந்தா எப்படின்னு அவருக்கு எண்ணம் ஓடிக்கிட்டே இருந்தது. மறுநாள் பகல் முழுவதும் இதே எண்ணம்தான் . அன்றும் வழக்கம் போல் யோகா கிளாசிற்கு கிளம்பிச் சென்றார். வரும் வழியில் அந்த ட்ரைன் முழுவதும் அந்த ரௌடி இருக்கிறானா என்றே மனம் தேடி அழைந்தது. யோகா கிளாசிலும் அவர் மனம் முழுவதும் இதே எண்ணமாக இருந்தது. யோகா கிளாஸ் முடிந்ததும் அவர் நண்பர்கள் ஏன் இன்று என்னவோ போல் இருக்கிறாய் என்று கேட்டனர். அவர் முந்தின நாள் நடந்ததை கூறினார். அத்துடன் அந்த ரௌடி எந்த தண்டனையும் இல்லாமல் தப்பிப்பதையும் . அவனால் இன்னும் எத்தனை பேருக்கு தீங்கு ஏற்படுமோ என்று தான் கலங்குவதையும் கூறினார். ஒவ்வொருவரும் பயந்துகிட்டு இருந்தா அந்த ரௌடிக்கு தண்டனையே கிடைக்காதுல என்றார். அவர் நண்பர்கள் ஆளுக்கு ஒன்ரொன்று சொன்னனர். சிலர் அவனை போலீசில் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்றும் மற்றும் சிலர் எதுக்கு வம்பு அவனை கடவுள் பார்த்துக் கொள்வார் என்றும் கூறினர். ராகவனுக்குத்தான் மனசு ஆறவில்லை. கடைசியில் அனைவரும் சரி RPF இல் சென்று கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று ஒரு மனதாக முடிவுக்கு வந்தனர்.

எல்லாரும் சேர்ந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று அங்கிருந்த RPF போலிசை பார்த்து நடந்ததை கூறினர். அதை நன்றாக கேட்ட போலீஸ் ராகவனிடம் உங்களால் அந்த ரௌடியை அடையாளம் காட்ட முடியுமா என்று கேட்டனர் . அதற்கு ராகவன் தன்னால் முடியும் என்று கூறினார். அந்த ரௌடி நீங்க சொல்றதைப் பார்த்தா இந்த ட்ரைன்ல ரெகுலரா வர்றவன் மாதிரிதான் தெரியுது . நாளைக்கு நீங்க சம்பவம் நடந்த அன்னைக்கு எத்தன மணிக்கு ட்ரைன் ஏறினீங்களோ அத்தன மணிக்கு நாளைக்கும் ட்ரைன் ஏறுங்க . உங்களோட எங்க போலீஸ் நாலு பேரும் வருவாங்க. நீங்க அவன கைய்ய காட்டிட்டு ஒதுங்கீருங்க. மத்தத எங்க ஆளுங்க பாத்துக்குவாங்கனு சொன்னாங்க. அதே மாதிரி ராகவனும் மறுநாள் அதே மாதிரி 6.30 மணிக்கு ட்ரைன் ஏறினார். அவருடன் நாலு போலிசும் ஏறினாங்க. ராகவன் ட்ரைன் முழுவதும் அலசி ஆராய்ந்தார். அவனைக் காணவில்லை. அன்று முழுவதும் அப்படியே போய் விட்டது. அன்று அவனைக் காணவில்லை . அதனால் போலீஸ் நாம் இன்னும் நான்கு நாள் பார்ப்போம் என்றனர் . ராகவனும் ஒத்துக்கொண்டார். அன்று இரவு வீடு திரும்பினார். எதையும் மறைக்காமல் பாக்கியத்திடம் கூறும் அவர் இதை மட்டும் கூறவில்லை. பாக்கியம் இதைக்கேட்டு பயந்துவிடுவாள் என்பதோடு தன்னை ஒரு வேளை தடுத்துவிடுவாளோ என்றும் எண்ணினார். மறுநாளும் அதே மணிக்கு கிளம்பினார். அன்றும் கிடைக்கவில்லை. மனம் தளராமல் மூன்றாம் நாளும் ட்ரைன் ஏறினார். அந்த ரௌடி பழவந்தாங்கல் ஸ்டேஷனில் ஏறினான். அவனைப் பார்த்ததும் ராகவன் அடையாளம் கண்டுகொண்டார். அருகிலிருந்த போலீசிடம் அடையாளம் காட்டினார். உடனே போலீஸ் அவனை கொத்தாக தூக்கிவிட்டனர். அவன் தன்னை எதற்கு பிடிக்கிறீர்கள் என்று கத்திக் கொண்டே இருந்தான் . போலீஸ் அதனைக் கண்டுகொள்ளவேயில்லை. அவனைப் பிடித்துக் கொண்டு அடுத்த ஸ்டேஷனில் இறங்கி விட்டனர். அடுத்து ராகவன் தன் வீடு வந்து சேர்ந்தார். அவனைப் பிடித்துக் கொடுத்ததில் மன நிறைவு அடைந்தார். அன்று ஏதோ நிம்மதியாக உறங்கினார்.

தவறின் ஒரு பகுதிக்கு காரணமான ரௌடியைப் பிடித்துக் கொடுத்துவிட்டார். தவறின் மறுபகுதியான எந்த உதவியுமே செய்ய வராத அந்த பொது மக்களை யார் பிடித்துக் கொடுப்பார்.

3 comments:

Suppa S said...

Some exceptions are still there...http://www.sr.indianrailways.gov.in/sr/press/index.jsp?id=1469&evnt=DETAILS

But no cud match ராகவன் in your story - HatsOff

Haripandi Rengasamy said...
This comment has been removed by the author.
Haripandi Rengasamy said...

Its nice to hear about these kind of people .. Hats off Raj Kumar