Monday, July 16, 2012

நான் ஈ - விமர்சனம்

இன்னைக்கு படத்துக்கு போறதுன்னு முடிவானதும் , இருந்தது ரெண்டு சாய்ஸ்.1. பில்லா 2 . நான் ஈ. என் மனைவியுடனான சில பல சமாதான உடன்படிக்கைகளை முன்னிட்டு 'நான் ஈ' போவதுன்னு தீர்மானமானது :) .



படம் ஆரம்பிச்சதுல இருந்து விறு விறுன்னு போகுது. எந்த ஒரு இடத்துலயும் துளி bore இல்ல. கதை எல்லா காலத்துலயும் இருக்க கதைதான். வில்லன், ஹீரோயினுக்கு ஆசைப்பட்டு ஹீரோவ கொன்றுறாரு , பின்னர் நம்ம ஹீரோ அடுத்த ஜென்மம் எடுத்து வில்லன பழி வாங்குறாரு. இதுவரைக்கும் வந்த இது மாதிரி படங்கள்ல பெரும்பாலும்  ஹீரோ அடுத்த ஜென்மத்துல பலசாலியா ஜென்மம் எடுப்பாரு. என்ன இங்க நம்ம ஹீரோ 'ஈ' ஆ ஜென்மம் எடுக்குறாரு. எந்த ஒரு பலமும்  இல்லாத 'ஈ' ஆ இருக்குறதால நம்ம ஹீரோ புத்திசாலியா இருக்காரு . அதுதான் இந்த கதையோட பலம்.


ஈயோட கண்கள் பெரிதாக இருந்தாலும் அதன் கண்கள்ல பெரிசா expression கொண்டு வரமுடியாதால , அதோட body language வச்சு அத express பண்ண வச்சது அருமை .
'ஈ' க்கான என்ட்ரி, அதோட ஹீரோயிசம், அதுக்கான மியூசிக் . இப்படி எந்த ஒரு ரீல்ல இருக்க ரியல் ஹீரோக்கும் சலச்சதில்ல இந்த 'நான்  ஈ'
 படத்துக்கு உண்மையான ஹீரோ 'ஈ' யும் அந்த வில்லன்னும்தான்.  படத்தின் ஆரம்பத்தில் வில்லத்தனம் காட்டும் அதே சுதீப் படத்தின் நடுவில் 'ஈ' இடம் மாட்டி அவஸ்தைப்படும் இடங்கள் அருமை. ஈயோட சாகசங்களும் அதனால் சுதீப் படுற அவஸ்தைகளும் அனைவரையும் வாய் விட்டு சிரிக்க வைக்குது.

திரைக்கதை, வசனம், இசை, கலை , ஒளிப்பதிவு, டைரக்சன் இப்படி எல்லா ஏரியாக்களும் வெளுத்து வாங்கி இருக்காங்க. படத்தோட மிகப் பெரிய பலம் அனிமேசன். இதுவரை நமக்கு நம்ம நாட்டு அனிமேசன்னா அது நம்ம ராமநாராயண் வகையராவோட அனிமேசன் மட்டும்கிறதால , நமக்கு அனிமேசன் படமுனாலே அது ஹாலிவுட் படம்தான். அப்படிப்பட்ட மனநிலையில் மக்கள் இருக்கும்போது  ஒரு அனிமேசன் கதாப்பாத்திரத்த நம்பி ஒரு படம் எடுக்குறதுனா அதுல எந்த அளவுக்கு அனிமேசன் நல்லா இருக்கணும். நிச்சயமா இந்த படம் ஏமாத்தலா . அனிமேசன் 'ஈ' சூப்பர். 'ஈ' யபத்தி அருவருப்பான எண்ணம் இருக்குற நாட்டுல ஒரு 'ஈ' ய ஹீரோவா வச்சு படம் எடுக்க தைரியம் வேணும். ஆனா அந்த தைரியம், தன்னுடைய ஒவ்வொரு படத்துலயும் ரிஸ்க்  எடுத்து வெரைட்டி காட்டிட்டு வர்ற ராஜ மௌலிக்கு இருக்குறதுல ஆச்சர்யம் இல்லை . படத்தோட title la கதையின் கருன்னு ஒருத்தர் பேரு போடுறாங்க. அவருதான் ரொம்ப காலத்துக்கு முன்னாடி ராஜமௌலிக்கு இந்த மாதிரி ஒரு கான்செப்ட் சொன்னாராம். good.



சமந்தா - அழகு. எல்லா படத்தையும் போல இந்த படத்துலயும் அழகோ அழகு சமந்தா. என்னா expression , என்னா நடிப்பு, என்னா அழகு . காணக் கண் கோடி வேண்டும் :)

காதல், காமெடி, ஆக்சன் , த்ரில்லர், செண்டிமெண்ட் இப்படி அனைத்து ஏரியாக்களும் கொண்டது 'நான் ஈ'
படம் சூப்பர் , என்ன ஒரே ஒரு வருத்தம், அழகு சமந்தாவ 'ஈ' க்கலாம் ஜோடி ஆக்குனத நினைச்சுதான் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ;) .

கொஞ்ச காலத்துக்கு முன்னாடி , நான் எங்க பெரியம்மா வீட்டுக்கு வடபழனி போகும்போது அங்க எனக்கு ஒரு 'உதவி இயக்குனர்' அறிமுகம் ஆனாரு. ஒரு நாள் அவர்ட்ட பேசிகிட்டு இருக்கும்போது அவர், சார் , நான் 'Spider Man' கான்செப்ட்ல ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கேன். அதுக்கு சிலந்தி மாதிரி ஏதாவது உயிரினம் இருந்தா சொல்லுங்க சார்னு, சொன்னாரு. நானும் பல ஆராச்சிகல்லாம் பண்ணி , சார் , ஆப்ரிக்காவுல ஒரு வண்டு இருக்கு சார் . அது 'mood' வந்துருச்சுனா  வேகமா தரைல கொட்டும் , அதோட அதிர்வு ரொம்ப தூரத்துல இருக்க  இணைக்கு கூட கேட்கும். அந்த வண்ட வச்சு நீங்க ஒரு படம் எடுங்க சார்னு சொன்னேன். இப்ப அவர் மட்டும் டைரக்டர் ஆகி அந்த படம் எடுத்துருந்தார்னா , ஈயலாம் வச்சு படம் எடுக்குற இந்த காலத்துல அந்த படம் முன்னூறு நாள் ஓடிருக்கும். இந்நேரம் படத்தோட title ல  கதையின் கரு 'ஹரிபாண்டி' னு வந்துருக்கும். தமிழ்கூறும் நல்லுலகம் அந்த பொன்னான வாய்ப்ப இழந்துருச்சு ;).

சரி விமர்சனத்த முடிக்கலாம், ஹாலிவுட்டுக்கு ஒரு spider man னா இந்தியாவுக்கு ஒரு 'நான் ஈ' . அவ்ளோதான்பா :).