அன்று அந்த ஹோட்டலில் மதியம் சாப்டுட்டு பிரெண்ட் கூட அந்த ஹோட்டலின்  வாசலில் நின்று பேசிக்கிட்டுருந்தேன். அப்ப அங்க ஒரு சில அழுக்கு  மூட்டையுடன் வந்த ஒரு வயதான பிச்சைக்காரர் தன் கையில் இருந்த காலி தண்ணி  பாட்டிலை ஹோட்டலை நோக்கி ஏதோ ஆட்டி ஆட்டி காட்டிக் கொண்டிருந்தார். அவரால்  பேசக் கூட முடியவில்லை. கொஞ்ச நேரம் கழித்துதான் புரிந்தது அவர் தண்ணி  வேணும்னு கேட்கிறார்னு. கொஞ்ச நேரத்தில் அந்த ஹோட்டலிலிருந்து வெளியே வந்த  ஒருவர் அந்த பிச்சைக்காரரை அடிக்காத குறையாக விரட்டி அடித்தார். எனக்குப்  பாவமாக இருந்தது. பொது குடிநீர் குழாய்களையும், பொதுக் கழிப்பிடங்களையும்  காட்டிலும் அதிக சாராயக் கடைகளைக் கொண்டிருக்கும் நாட்டில் நாம் இந்தக்  காட்சிகளைத்தான் காண முடியும்.
நான் அருகில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் தண்ணீர் பாக்கெட் வாங்கி  விட்டு திரும்பிப் பார்த்தால் அந்த வயதானவர் வெகு தூரம் விலகி  சென்றிருந்தார். அவரை நோக்கி தண்ணிப் பாக்கெட்டுடன் ஓடினேன். நான் அவரை  நோக்கி ஓடி வருவதைப் பார்த்ததும் அவர் பயந்து விலகினார்.  நான் வாங்கிய  அந்த தண்ணிப் பாக்கெட்டை நீட்டிய போது கூட , அவர் பயந்து கொண்டுதான் அதை  வாங்கினார்.
திரும்பி வரும்போதுதான் அந்த ஹோட்டலின் பெயருக்குக் கீழே எழுதியிருந்த அந்த வாக்கியம் கண்ணில்பட்டது.
"அதிதி தேவோ பவ " :(
Photo Courtesy:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhrb9ENPW1evUS934vbsD75RWmuWYf_kr3flwIv__SppSptGTTmr0qoskrbME5xe_5ZQolhSBT9SYpCi-DoWslu7PMKtu-7PIlHNcrVhHdD7nDvGCAtTRonxChC0w-RF8oAGhcbQeGgtUg/
Wednesday, August 10, 2011
அதிதி தேவோ பவ :(
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment