Tuesday, September 22, 2009

உன்னைப்(நம்மைப்) போல் ஒருவன்

நேற்று நான்,மது மற்றும் கார்த்தி மூன்று பெரும் சேர்ந்து "உன்னைப் போல் ஒருவன் " படம் பார்க்க மாயாஜால் சென்றிருந்தோம். அந்த படத்தை தேர்ந்தெடுத்ததறகு இருவர் தான் காரணம். 1.லாலேட்டன்் , 2. உலக நாயகன். இதற்கு மேல் வேறு காரணம் எதுவும் தேவை இல்லை என்று நினைக்கிறேன். சத்யம் போயிருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் . மாயாஜால், சத்யத்தை விட சற்று சுமாராகத்தான் இருக்கும்(ஃபிகர்களிலும்!).

உலக நாயகன் ஒரு மிகச்சிறந்த தமிழ் ஆர்வலர், ஆனால் அவர் ஏன் title card அனைத்தையும் ஆங்கிலத்தில் வைத்திருந்தார் என்று தெரியவில்லை. ஆனால் அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

படம் லாலேட்டன்் தன்னுடைய நினைவுகளை திரும்பிப் பார்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. அந்த நொடி முதல், படம் முடியும் வரை, படம் பார்த்த உணர்வே இல்லை. அனைவரும் படத்தின் உடனே பயணிக்கிறோம். அதுவே படத்தின் வெற்றி. கமலஹாசன் நிச்சயமாக வில்லன் இல்லை என்று அனைவருக்கும் தெரியும். மேலும் ஹிந்தி "Wednesday" படத்தின் கதையும் முக்கால் வாசி பேருக்கு தெரியும். அதையும் தாண்டி படம் சுவாரசியமாக சென்றதுதான் படத்தின் வெற்றி. என்னைப் பொறுத்தவரை அந்த வெற்றியின் பெரும் பங்கு லாலேட்டன் சாரும்.

இந்த படத்தில் என்னை கவர்ந்தவர்களை வரிசைகிரகமாக சொல்லுவதென்றால்1.லாலேட்டன், 2. ஆரிஃப் ஆக நடிக்கும் கணேஷ் வெங்கட்ராம் 3.பத்மஸ்ரீ கமலஹாசன்.

லாலேட்டன்் :
இதில் அவர் மலையாலீயாகவே நடிப்பதால், தமிழ் உச்சரிப்பிற்கு அவர் மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. நல்லவேளை, இல்லையென்றால் அந்த அழகிய மலையாளத் தமிழை நாம் இழந்திருப்போம். அவருடைய நடிப்பை பற்றி நான் என்ன சொல்லுவது. அவருடைய ஒவ்வொரு செல்லும் நடிக்கிறது. லாலேட்டன், லாலேட்டன் தான். பொறுப்பை முழுவதுமாக தன் தலையில் ஏற்பதிலிருந்து, சரியான வேலையை சரியான நபரிடம் சரியான நேரத்தில் பகிர்ந்து கொடுப்பது வரை, மிகச்சிறப்பு. காவல் உடையில் இருக்கும் அந்த கம்பீரம், மிடுக்கு, ஒவ்வொரு நிமிடமும் பார்த்து கொண்டிருக்கலாம். லாலேட்டா you are great.

ஆரிஃப :
இளம் காவல்துறை அதிகாரி. இவரிடமும் காவல் துறை அதிகாரிக்கான அந்த மிடுக்கை காணலாம். கூடுதலாக charming ஆக இருக்கிறார். அந்த வெடிமருந்து விற்பனையாலனிடம், விஷயத்தை கறப்பதறகாக அடிக்க தயாராவதிலேயே உண்மையையை கக்க வைக்கும் இடம் மிகச் சிறப்பு.

உலகநாயகன்:
உட்கார்ந்த இடத்திலிருந்து அனைவரையும் ஆட்டி வைக்கும் வேலை. கமலுக்கு நடிப்பதற்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.

இந்த படத்தை பற்றிக் கூறப்படும் ஒரு குற்றச்சாட்டு, அதிகமாக ஆங்கிலம் உபயோகப்படுத்தியிருப்பது. அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளும், வலைத்தளத்தை பார்த்து வெடிகுண்டு தயாரிக்கவும் , Router பற்றிய விசயங்களை தெரிந்திருக்கும் ஒரு மனிதனும், ஆங்கிலத்தில் அதிகமாக உரையாடுவது என்பது இயல்பாக நடக்கும் விஷயம் என்றே நான் எண்ணுகிறேன்.

திரைப்படங்களைப் பற்றிய தொழில்நுட்ப விஷயங்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அதனால் அதை வாசகர்களின் விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன் .

பொதுவாக இந்த மாதிரி படங்களை பார்த்துவிட்டு வெளியே வரும்போது, தேசப்பற்று கொஞ்சம் அதிகமாகவும், நாட்டை திருத்த வேண்டும் என்றும் தோன்றும் . ஆனால் இந்த பட முடிவில் அப்படி எதுவும் தோன்றவில்லை. அதுவே இப்படத்தின் பலமும் மற்றும் பலவீனமும் என்று நான் எண்ணுகிறேன். ்

3 comments:

Haripandi Rengasamy said...

மோகன்லாலை, பாலேட்டன் அல்ல லாலேட்டன் என்றுதான் அழைப்பார்கள் என்று தவறைச் சுட்டிக் காட்டியதற்கு, பிரகாஷிற்கு நன்றி.

-Haripandi

Anand said...
This comment has been removed by the author.
Anand said...

ஏன் நீங்கள் SunTV யில் திரை விமர்சனத்திற்க்கு முயற்சி செய்யக்கூடாது