Saturday, October 17, 2009

தெரிந்ததைச் சொல்கிறேன்

1.பொதுவாக நம் ஊரில் இலவசமாக கிடைப்பதை ஒசியில்் கிடைப்பது என்பார்கள். ஒசி் என்பது தமிழ் வர்ர்த்தை அல்ல . பிரிட்டிஷ் காலத்தில், அரசாங்கத் தபால்களுக்குத் தபால் தலை ஓட்டவேண்டியதில்லை. அவற்றின் மேல் "On Company Service" என்று முத்திரை இடப்பட்டிருக்கும். அவற்றை சுருக்கமாக OC யில் செல்வது என்பார்கள். அதிலிருந்து இலவசமாக கிடைப்பதற்க்கு ஒசி என்று பெயர் வந்து விட்டது.

2.நம் ஊரில் பொதுவாக வழக்கில் இருக்கும் சொல் எம்ப்டன் கப்பல். நீ பெரிய எம்ப்டன் கப்பலா என்பார்கள்?. எம்ப்டன் கப்பல் ஒரு ஜெர்மானியக் கப்பல். முதலாம் உலகப் போரின் போது அக்கப்பல் சென்னைக்கு வந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மீதும், ஜார்ஜ் கோட்டையின் மீதும் குண்டு வீசிவிட்டு பிரிட்டிஷ் கப்பல்களிடம் அகப்படாமல் தப்பித்துச் சென்று விட்டது.இன்றும் கூட அக்கப்பல் குண்டு வீசியதால் ஏற்ப்பட்ட இடிபாடுகளை சென்னைத் உயர்நீதிமன்றத்தில் நீங்கள் காணலாம். அதிலிருந்து அசாதாரணச் செயல்களைச் செய்வபர்களைக் குறிப்பிட எம்ப்டன் கப்பல் என்ற சொல் வழக்கில் வந்தது.

No comments: