Saturday, January 15, 2011

யூதர்கள்


கி.மு 1812 ஆதாம் ஏவாளின் பத்தொன்பதாவது தலைமுறைப் பேரனாகப் பிறந்தார் ஆபிரஹாம். அவரது மனைவி சாரா. இருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லை. பார்த்தார் சாரா தன் வேலைக்காரப் பெண் ஆகாரை தன் கணவருக்கு மணம் முடித்து வைத்தார். அவர்களுக்கு இஸ்மாயீல் பிறந்தான். அதன் பிறகு சாராவுக்கும் ஒரு மகன் பிறந்தான் . பெயர் ஈசாக் . சாராவே பார்த்துவைத்து ஆகாரை ஆபிரகாமுக்கு கல்யாணம் செய்து வைத்தாலும் சக்களத்தி சண்டை வந்துவிட்டது. பின் குடும்பத்தில் சண்டை ஏற்படுவதை தவிர்க்க ஆகார் இஸ்மாயீலுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். கவனிக்கவும் இது சாதாரண குடும்ப விவகாரம் அல்ல. இது இரண்டு இனங்களின் மூன்று மதங்களின் தோற்றம் . இஸ்மாயீலின் வழி வந்தோரே அரேபியர். ஈசாக்கின் வழி வந்தோர் யூதர்கள். இப்படி பார்த்தால் அரேபியர்கள் யூதர்களை விட மூத்தவர்கள் . இதுவே கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாடு , முஸ்லீம்களின் குர் ஆன் மற்றும் யூதர்களின் புனித நூலான தோரா மூன்றும் கூறுவதாகும் .

இந்த உலகில் மிக அதிகமாக துரத்தப்பட்டதும் , மிக அதிகமாக கொடுமைபடுத்தப்பட்டதுமான இனம் எதுவென்றால் அது யூத இனம் தான். அவர்கள் காலம் காலமாக யூதரல்லாத மற்ற இனத்தவரால் கொடுமைபடுத்தப்பட்டனர். அவர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் வெறுக்கப்பட்டனர். அது அவர்கள் இனம் தோன்றிய காலத்திலிருந்து அடுத்த நானூறு ஆண்டுகள் ஈராக்கில் கொடுமைபடுத்தப்பட்டதிலிருந்து நேற்றைய ஹிட்லரால் அழித்தொழிக்கப்பட்டதிலிருந்து இன்று சுற்றியுள்ள அரபு நாடுகளால் வெறுக்கப்படுவதுவரை என்றும் அந்த இனம் வெறுக்கவும் அழிக்கவும்பட்டது. யூதர்கள் தங்கள் ஒன்று விட்ட சகோதர்களான அரேபியர்களால் மட்டும் வெறுக்கப்பட்டதுமல்லாமல் அரேபியரல்லாத ஆரியரான ஹிட்லர் வரை அனைவராலும் வெறுக்கப்பட்டனர். இவ்வினம் ஒருவரல்லாமல் அனைவராலும் வெறுக்கப்பட பல காரணங்கள் . முக்கியமாக யூதர்கள் சிறந்த அறிவாளிகள் . அவர்கள் ஈடுபட்ட அனைத்து தொழிலிலும் வெற்றி பெற்றனர் . யாரும் நுழைய முடியாத இடத்திலும் அவர்களால் நுழைய முடிந்தது . எப்படியும் அவர்களால் காரியம் சாதிக்க முடிந்தது . அடுத்து யூதன் என்றால் அது ஒரு தனிமனிதனை குறிக்காது. அது மொத்தமாகவே அவ்வினத்தையே குறிக்கும் . அவர்கள் சாமி கும்பிடும்போது கூட நான் , எனது என்று கூறமாட்டார்கள் , நாம் , நமது என்றுதான் கூறுவார்கள் . ஒரு யூதன் ஒரு இடத்தில் நுழைந்து விட்டால் போதும் அடுத்த கொஞ்ச காலங்களில் அங்கு யூதர்கள் அதிகரித்துவிடுவார்கள் . இப்படி அவர்கள் தான் மட்டும் வளராமல் தம் இனத்தையே வளர்த்தார்கள் . இப்படி ஒரு இடத்தில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றால் அங்கு யூதர்கள் அதிகரித்துவிடுவார்கள் .மேலும் அவர்கள் வட்டி தொழிலில் ஈடுபட்டார்கள். அதுவும் அவர்கள் மேல் வெறுப்பு வளரக் காரணம். மேலும் யூதர்கள் தங்கள் இனமே உலகில் உயர்ந்தது என்றும் , கடவுளின் விருப்பமான இனம் தங்கள் இனமே என்றும் , உலகில் மனித இனம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு கடவுள் தங்களை படைத்தார் என்றும் முழுமையாக நம்பினர்.

ஈசாக்கின் வழிவந்தோர் எகிப்தில் கொடுமைபடுத்தப்பட்டபோது அவர்கள் இறைவனின் கட்டளையின் பேரில் இறைதூதர் மோசசினால் மீட்கப்பட்டனர். இறைவன் மோசசின் மூலம் யூதர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், அவர்களின் கடமைகள் என்ன, அவர்களின் இறை வழிபாடு எப்படி இருக்க வேண்டும் என்று அனைத்தையும் கூறினார். கடவுள் யூதர்களுக்கு பத்து கட்டளைகள் அளித்தார். இறைவனின் கட்டளைப் படி யூதர்களுக்கு கடவுள் ஒருவர்தான்.

யூத மதம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் நிறைந்தது. நிறைய வழிபாடுகளும் விழாக்களையும் கொண்டது. கடவுள் இப்பூவுலகததை படைத்தபோது உயிரினங்கள் உட்பட அனைத்தையும் முதல் ஆறு நாட்கள் படைத்தார் . ஏழாவது நாள் ஓய்வெடுத்தார். அதன்படி யூதர்கள் வாரத்தின் ஆறு நாட்கள் ஓய்வின்றி உழைப்பர் ஆனால் ஏழாவது நாளான சனியன்று மட்டும் யார் என்ன கூறினாலும் வேலை செய்ய மாட்டர். அன்று முழு ஓய்வு நாள் . அன்று சமையல் கூட கிடையாது. அன்றைக்கு தேவையான சமையலை முதல் நாளே செய்துவிடுவர் .
அவர்களின் அனைத்து சடங்குகளிலும் அவர்களின் முன்னோர் பட்ட துன்பங்கள் நினைத்து பார்க்கப்பட்டது. அது அவர்களின் அனைத்து விழாக்களிலும் முக்கிய சடங்காகவே இருக்கும் கல்யாண விழாக்கள் உட்பட.

சாலமன் ஆலயம் கடவுளின் கட்டளைப்படி சாலமன் அரசனால் கட்டப்பட்டது. இது கிமு 900 களில் கட்டப்பட்டது. பின் இது கிமு 586 இல் பாபிலோனியர்களால் இடிக்கப்பட்டது. பின் 70 ஆண்டுகள் கழித்து அதே இடத்தில் முன்பிருந்ததைவிட சிறிய அளவில் சாலமன் ஆலயம் கட்டப்பட்டது. பின் அது ரோமானியர்களால் 70 C.E இல் மீண்டும் அழிக்கப்பட்டது. ஏசு கிறிஸ்து மீது கூறப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டு அவர் சாலமன் ஆலயம் மீண்டும் அழிக்கப்படும் என்று தன் தீர்க்க தரிசனத்தால் கூறியது. அதுவே அவர் மீது முக்கிய குற்றச்சாட்டு. அதற்காகவே அவர் சிலுவையில் அறையப்பட்டார். அவர் கூறியபடியே சாலமன் ஆலயம் ரோமானியர்களால் அழிக்கப்பட்டது. இன்று ஜெருசலேத்தில் இருக்கும் அந்த ஆலயத்தின் இடிந்த சுவர் தான் யூதர்களின் ஆலயம். அந்த சுவரிடம் தான் அவர்கள் தங்கள் வேண்டுதல்களை கூறுகின்றனர் . இன்றுவரை யூதர்கள் தங்கள் தேவ தூதர் இம்மண்ணில் பிறப்பார் அவர் சாலமன் ஆலயத்தை மீண்டும் கட்டிக்கொடுப்பார் என்று நம்புகின்றனர்.
யூதர்களுக்கும் கிருஸ்துவர்களுக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு , கிறிஸ்துவர்களைப் பொறுத்தவரை ஏசு கிறிஸ்து மரித்த மூன்றாம் நாள் உயித்தெழுந்தார். யூதர்களைப் பொறுத்தவரை அவர் உயித்தெழவில்லை. இதுவே முக்கிய வேறுபாடு.

யூதர்களைப் பொறுத்தவரை மோசஸ் தங்களை குடியேற்றிய இஸ்ரேலே உலகின் புனிதமான பூமி. அதனுள் ஜெருசலேமே புனிதமானது. அதனுள் புனிதமானது சாலமன் கோயில் .அதனுள் புனிதமானது Holy of Holiest .

யூதர்களே உலகில் புனிதமானவர்கள். அவர்களுள் லாவி இனத்தவர்களே புனிதமானவர்கள். அவர்களுள் பூசாரிகளே புனிதமானவர்கள். அவர்களுள் புனிதமானவர் தலைமை பூசாரி.

மொத்தம் 354 நாட்கள். அவற்றுள் புனிதமானது விடுமுறை நாட்கள். அதனுள் புனிதமானது சபாத் என்னும் விடுமுறை நாள் . அதனுள் புனிதமானது Sabaath of Sabaath என்னும் Day of Atonement.

உலகில் 70 மொழிகள் உள்ளன. அதனுள் புனிதமானது ஹீப்ரூ மொழி. அதனுள் புனிதமானது தோரா என்னும் புனித நூல். அதனுள் புனிதமானது 10 கட்டளைகள். அதனுள் புனிதமானது கடவுளின் பெயர்.

வருடத்தின் ஒரே ஒரு நாள் Day of Atonement இல் தலைமை பூசாரி Holy of Holiest இல் நுழைந்து கடவுளின் பெயரை கூறும் பகுதியே
புனிதத்திலும் புனிதமானது .

இப்படியாக இருந்த யூதர்கள் பின்னர் இஸ்ரேலிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் வெளியேறினர்/ வெளியேற்றப்பட்டனர். இப்படி வெளியேறி உலகின் பல்வேறு பகுதிகளில் பல நூற்றாண்டுகாலமாக யூதர்கள் வாழ்ந்தாலும் அவர்களின் நினைப்பு முழுவதும் இஸ்ரேலின் மீதே இருந்தது. அவர்கள் எங்கு எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் அவர்கள் தாங்கள் எப்படியும் ஒரு காலத்தில் இஸ்ரேலில் குடியேறுவோம் என்று முழுமனதாக நம்பினர். யூதர்களின் மீது பல நாடுகளுக்கு வெறுப்பு இருக்க மற்றொரு முக்கிய காரணம் அவர்கள் தாங்கள் குடியேறிய நாட்டின் மீது பற்று கொள்ளாமல் தங்கள் இனத்தின் மீதும் இஸ்ரேலின் மீதுமே அதிக பற்று கொண்டிருந்தனர்.

இப்படியாக தங்களுக்கு என்று ஒரு நாடு இல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்த யூதர்கள் இரண்டாம் உலகப் போரின் முடிவில் பிரிட்டனின் தயவில் இஸ்ரேலைப் பெற்றனர். இன்றும் யூதர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்கு எந்த பிரச்சினை என்று இருந்தாலும் முதலில் உதவிக் கரம் நீட்டும் நாடு இஸ்ரேல். இந்தியாவில் மும்பையின் மீது தாக்குதல் நடந்தபோது யூத ஆலயத்தையும் தாக்கினர். அப்பொழுது இஸ்ரேல் தான் உதவிக்கு வரவா என்று கூறியது ஞாபகம் இருக்கலாம். அதே போல் உலகின் எந்த மூலையில் இருக்கும் யூதர்கள் இஸ்ரேலில் குடியேற விரும்பினால் இஸ்ரேல் அவர்களை அழைத்து இஸ்ரேலில் நிலம் குடுத்து அவர்களை குடியேற்றுகிறது.

7 comments:

JDK said...

Superb post! No matter how cruelly they attack the Palestine numerous times, it shows that they still remember their wound and it is etched fresh in their memories.

Check this link also:
http://vijayarmstrongcinematographer.blogspot.com/2010/06/blog-post_24.html

Venki said...

Hari,

How are you?. I am thinking to read about "யூதர்கள்". Before reading this post.. I am sure.. I will be got some more news.

Good luck

Venki said...

பக்குவபட்ட எழுத்தாளர் போல உள்ளது. நான் படித்து கொண்டிருக்கும் பொது திடீர் என்று நினைவு வந்தது Oh இது ஹரி எழுதியதல்லவா என்று..

வாழ்த்துகள்

Haripandi Rengasamy said...

Thank you JDK. I always have good thought about jews. Their attack on Palestines is other part. I am not going to talk about that. The aim of this post is also not that. I liked to talk about their intelligence, their faith on their religion, their affection on their race and all other good things. In whatever way the world in the past attacked them , they regain power like phoenix .

Thank you Venki. Even before reading my post you had good faith on me . Thanks for that. And also thanks for appreciating me :)

JDK said...

Pandi, more than the faith on their religion their unity is what amazes me no matter in whatever part of the world they are their ethnic unity is exceptional. No other ethnic group can come close to that (leave alone malayalis). We even though procalim ourselves as Tamils, the kind of diversity we create within ourselves in the name of caste n communal shits
really questions our values and integrity and that is the reason why our fellow tamils were hunted down like animals in front of our eyes and we remained as mere mute spectators watching them rot to death.Shame on us :(

Allinone said...

It's written in the Bible itself...Palestine,Syria etc., will always remain as enemies. Israel people are not supposed to have any kind of alliance with them. It's forbidden. Even feeling bad for those countries are forbidden.

Unknown said...

Jude's is great god's sons