Sunday, January 2, 2011

மன்மதன் அம்பு


மது இன்னைக்கு மாயாஜால்ல மன்மதன் அம்புக்கு டிக்கெட் புக் பண்ணி இருந்தான் . ஆனா நேத்தே அவன், அவன் நண்பர்களுடன் போய் பார்த்துட்டு வந்துட்டான். அவனோட review படம் பாக்கலாம், கடைசி 20 நிமிஷம் கொஞ்சம் கடி. பொதுவா படத்த பத்திய review ரெண்டு extreme ஆ இருந்தது. சில பேர் படம் ரொம்ப நல்லா இருக்குனாங்க . சில பேர் நல்லாவே இல்லைனாங்க. கமலோட தீவிர விசிறியான நண்பன் jdk வே ஒரு தடவ பாக்கலாம் அதுவும் கமல் fan ஆ இருக்கணும்னு சொன்னது ஆச்சரியமா இருந்தது. சரி எப்படி இருந்தாலும் படத்துக்கு போறதுன்னு முடிவெடுத்தாச்சு. எப்பயும் போல நான் , மது மற்றும் கார்த்திக் போணோம்.

படம் ஆரம்பத்திலேயே கமல் வரல. படம் ஆரம்பத்தின் சில நிமிடங்கள் மாதவன் மற்றும் த்ரிஷாவை சுற்றியே இருந்தது. அதாவது த்ரிஷா ஒரு தமிழ் நடிகையா இருக்காங்க. அவங்களை காதலிக்கிற மாதவனுக்கு அவங்க மேல ரொம்ப சந்தேகம். த்ரிஷா ஒரு holiday trip புக்காக பாரிஸ் போறாங்க. அவங்கள வேவு பாக்க மாதவன் கமலை நியமிக்கிறாரு. கமலுக்கு கான்செர் நோயாளியா இருக்கிற தன் நண்பன் ரமேஷ் அரவிந்த காப்பாற்ற பணம் தேவைப்படுரதால அவர் இந்த வேலைக்கு ஒத்துக்கிறார். வேவின் ஆரம்பத்திலேயே த்ரிஷா மேல எந்த குற்றமும் இல்லைங்கிறது தெரிகிறது. அத கமல் மாதவன் கிட்ட சொன்னதும் மாதவன் கமலை வேவு பாக்க வேண்டாம் என்றும் திரும்பி சென்னை வந்து விடுமாறும் சொல்கிறார். த்ரிஷாவை வேவு பாக்க வேண்டாம் என்று சொல்லி விட்டதால் மாதவன் பேசிய பணத்தை கமலுக்கு கொடுக்க மறுக்கிறார். இதனால் கமலின் நண்பன் ரமேஷ் அரவிந்தின் மருத்துவ செலவிற்கு பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் கமல் மாதவனிடம் த்ரிஷாவை பார்க்க ஒரு ஆள் வருகிறான். அவன் மேல் சந்தேகம் என்று பொய் சொல்லி வேவை தொடர்கிறார். இதற்கிடையில் சில வருடங்களுக்கு முன் கமலின் மனைவி ஒரு விபத்தில் இறப்பதற்கு த்ரிஷா காரணமாக இருந்ததை த்ரிஷா அறிகிறார். இதற்கடுத்து கமல் , த்ரிஷா , மாதவன் மற்றும் த்ரிஷா தோழி சங்கீதா வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே கதை.

படம் முழுவதும் வெளிநாட்டில் நடக்கிறது. அதன் பெரும்பகுதி ஒரு உல்லாச கப்பலில் நடக்கிறது. படத்தின் ஒலி live recording கில் பண்ணியது . அது அருமையாகவே வந்திருக்கிறது. கமல், சங்கீதா ,மாதவன் மற்றும் த்ரிஷா அனைவரும் அருமையாகவே தமிழ் பேசுகின்றனர். மிகச் சிறந்த தமிழ் ஆர்வலரான கமல் தன் படங்களிலெல்லாம் மிகச் சிறந்த தமிழை வைப்பதோடு ஏன் ஆங்கிலத்தையும் அதிகம் உபயோகிக்கிறார் என்பது எனக்கு புரியாத விஷயம். வெகு நாட்களுக்குப் பிறகு எனக்கு இந்த படத்தில் நடித்த அனைவரையும் பிடித்திருந்தது. முக்கியமாகா கமல் , த்ரிஷா , மாதவன் மற்றும் சங்கீதா. எனக்கு மாதவன் குடிச்சிட்டு உளறதும், சங்கீதாவோட நடிப்பும் ரொம்ப பிடிச்சிருந்தது. கமல் மாதவன் தனக்கு பணம் தர முடியாது என்ற சொல்லியபோது மாதவனின் அப்பாவிடம் இன்னும் கொஞ்சம் அழுத்தி கேட்டிருந்தாலோ , அல்லது விஷயத்தை த்ரிஷாவிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டி இருந்தாலோ பிரச்சினை அப்பொழுதே முடிந்திருக்கும். அதனை தவிர்த்து எனக்கு படம் எந்த தொய்வும், தேக்கமும் இல்லாமல் சென்றதாகவே தோன்றியது.

வசனம் கமல் புண்ணியம் . எப்பொழுதும் போல் வார்த்தை விளையாட்டு . ஆனால் மும்பை எக்ஸ்பிரஸ் போல் கடியாக இல்லை . சொல்லப் போனால் எனக்கு நிறைய வசனங்கள் பிடித்தே இருந்தன. முக்கியமாக குடித்துவிட்டு மாதவனும், சங்கீதாவும் உளரும் வசனங்கள் ரொம்பவே பிடித்திருந்தன . eg நான் பொன்னதெல்லாம் சொய் (நான் சொன்னதெல்லாம் பொய்). அதேபோல் அந்த மலையாளி தயாரிப்பாளரைப் பற்றி பேசும் போது " நான் பொ
றுத்துக்குவேன் . தமிழ் பொறுக்குமா ? ஆமாம் தமிழ் கொஞ்சம் தெருப் பொறுக்கும் " என்பதும் class. மேலும் சில வசனங்கள் கூர்மையாகவே இருந்தன. வீரத்தின் மறுபக்கம் மன்னிப்பு என்பதும் வீரத்தின் உச்சம் அகிம்சை என்பதும் காந்தியின் காதலரான கமலின் உச்சகட்ட வசனங்கள்.
நான் உணர்வுப் பூர்வமாக உணர்ந்தது "வலி குறைஞ்சுருச்சு . ஆனா சோகம் மட்டும் பாம்பு மாதிரி வயித்துக்குள்ள இருக்கு" என்று தன் மனைவி இறந்ததைப் பற்றி கூறுவது. என் அப்பாவின் இறப்பின் வலி இந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்து விட்டது . ஆனால் அந்த சோகம் மட்டும் எனக்குள் பாம்பு மாதிரி வயித்துக்குள் சுருண்டு எப்பொழுதும் இருக்கு என்பதை உணர்த்தியது.

நான் நிச்சயம் படத்தை இன்னொரு தடவை பார்ப்பேன்.

3 comments:

Anonymous said...

//என் அப்பாவின் இறப்பின் வலி இந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்து விட்டது . ஆனால் அந்த சோகம் மட்டும் எனக்குள் பாம்பு மாதிரி வயித்துக்குள் சுருண்டு எப்பொழுதும் இருக்கு என்பதை உணர்த்தியது.//

for me also :(((((((

JDK said...
This comment has been removed by the author.
JDK said...

பயபுள்ளைங்க இந்த ஊர்ல sub-titles'ஓட படத்த போட்டுட்டாயங்க...நான் உலக படங்கள பாத்து பாத்து sub-titlesயும் படிச்சிட்டே இருந்தேன் ..அதான் Climax கிட்ட எனக்கு கொஞ்சம் வெளங்கல :((
Anyway..I'll go for one more time :)