Saturday, January 1, 2011

உலகில் என்னை அதிகம் பரவசப்படுத்தும் மனிதர்கள் - 3

சச்சின் டெண்டுல்கர் :


சச்சின் டெண்டுல்கருக்கு அறிமுகமே தேவை இல்லை. இந்தியா உருவாக்கிய மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர். உலகம் உருவாக்கிய மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் . ஒரு காலத்தில் சச்சின் அவுட் ஆகிவிட்டால் அனைவரும் டிவியை அணைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். அந்த அளவிற்கு விரும்பப்படுகிறவர். சச்சின் விளையாடும்போதெல்லாம் எங்கே அவுட் ஆகிவிடுவானோ என்று ஒரே பயமாக இருக்கும். இது மற்ற யாரும் விளையாடும் போது ஏற்படுவதில்லை . இதுவே சச்சினின் மீது இருக்கும் ஈடுபாட்டிற்கு சான்றாகும். எனக்கு சச்சினை பிடிக்க காரணம் அவர் வெறுமனே நன்றாக விளையாடுபவர் என்று மட்டுமே அல்ல, சச்சினின் நாட்டுப்பற்றே என்னை சச்சினின் பால் ஈர்ததாகும். சச்சின் தன்னை எப்பொழுதும் ஒரு இந்தியனாகவே முன்னிறுத்தி இருக்கிறார். தான் கிரிக்கெட் விளையாடுவதை விட தன் தாய் நாடாம் இந்தியாவிற்காக விளையாடுவதையே பெருமையாக கருதுவார். தன்னை உத்தவ்தாக்கரே போன்றோர் மராட்டியர் என்று முன்னிறுத்திய போதிலும் தான் இந்தியன் என்றே கூறுபவர். சச்சினுக்கு இணை யாரும் இல்லை. சச்சின் தான் எந்த அளவிற்கு இந்தியாவை நேசிக்கிறார் என்பது அவர் பின் கூறிய விதத்திலிருந்து அறியலாம். மும்பை 26/11 அப்புறம் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சென்சுரி அடித்தார். அப்பொழுது அவரிடம் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்ட போது நாட்டு மக்கள் மன வேதனையில் இருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் மனதில் சிறு அளவேனும் இந்த சென்சுரி மகிழ்ச்சியை கொடுத்தால் அதுவே எனக்குப் போதும் என்றார் . அதுதான் சச்சின். சச்சினுக்கு இந்தியாவின் மிக உயரிய civilian விருதான பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை பல இடங்களிலிருந்தும் எழுகிறது. அதற்க்கு எல்லா விதத்திலும் சச்சின் தகுதியானவர்.

தயான்சந்த் :


உலகின் மிகச் சிறந்த ஹாக்கி வீரர். இந்தியா உருவாக்கிய விளையாட்டு வீரர்களில் மிகச் சிறந்தவர். இவருடைய காலத்தில் இவராலையே இந்தியா ஹாக்கியில் அசைக்க முடியாத அணியாக இருந்தது . இவருடைய விளையாட்டு எப்படி இருக்குமென்றால் இவருடைய விளையாட்டை பார்த்த ஒரு முதியவர் நீ ஹாக்கி மட்டை வைத்திருப்பதால்தான் இப்படி விளையாடுகிறாய் முடிந்தால் என்னுடைய கைத்தடியை வைத்து விளையாட முடியுமா என்று கேட்டாராம் , அப்பொழுது தயான் சந்த் அவருடைய கைத்தடியை வைத்து மிகச் சிறப்பாக விளையாடினாராம். தயான்சந்த் அப்பொழுது இந்திய பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்தார். இவருடைய திறமையை பார்த்த ஹிட்லர் தயான்சந்தை ஜெர்மனி வந்துவிடும்படியும் அவரை ஜெர்மானிய ராணுவத்தில் மிக உயர்ந்த பதவி அளிப்பதாகவும் கூறினார். ஆனால் தயான் சந்த் தான் இந்தியாவிற்காகவே விளையாடுவேன் என்று கூறிவிட்டார். தயான் சந்தின் திறமையை பாராட்டி ஆஸ்திரிய தலைநகரமான வியன்னாவில் தயான்சந்த்தின் நான்கு கைகளில் நான்கு ஹாக்கி மட்டைகள் இருப்பது போன்று சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு இந்தியா அரசு ஸ்டாம்ப் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

கபில் தேவ் :


இந்தியா உருவாக்கிய மிகச் சிறந்த ஆல் ரவுண்டர். அரியானாவிலிருந்து வந்து இந்திய கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றியவர். இவருடைய தலைமையின் கீழயே இந்தியா 1983 இல் கிரிக்கெட் உலக கோப்பையை கைபற்றியது. அன்றைய கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத அணியாக இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியை உலக கோப்பை இறுதிப் போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்ற காரணமானவர். மேற்கிந்திய தீவுகளுக்கு அடுத்து உலக கோப்பையை கைபற்றிய அணி என்ற பெருமையை ஏற்படுத்தியவர். டெஸ்ட் கிரிக்கெட் உலகில் மிக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்று பெருமையுடன் ஓய்வு பெற்றவர். இன்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளுக்கு மேலாகவும் , 5000 ரன்களுக்கு மேலாகவும் சேர்த்த ஒரே கிரிக்கெட் வீரர் . விஸ்டன் பத்திரிக்கையால் 2002 ஆம் ஆண்டு Indian Cricketer of the Century என்று அறிவிக்கப்பட்டவர். எனக்கு பிடித்த விளையாட்டு வீரர்களில் ஒருவர்.

விஸ்வநாதன் ஆனந்த்:


இந்திய மூளையை உலகறியச் செய்தவர். இந்திய விளையாட்டு உலகம் உருவாக்கிய மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் . இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் . 2000 -2002 FIDE உலக செஸ் சாம்பியன், 2007 முதல் இன்று வரை undisputed World Champion. Knockout, Tournament, Match, Rapid and Blitz என்று பல வகைகளில் உலக சாம்பியன் ஆன ஒரே வீரர். உலக வரலாற்றில் FIDE rating இல் 2800 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 6 வீரர்களில் ஒருவர். கடந்த நவம்பர் மாதம் FIDE rating இல் உலகின் முதல் நிலை வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்தியாவில் விளையாட்டுத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்ற முதல் வீரர், இந்தியாவின் civilian துறையில் வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருதான பத்மா விபூசன் விருதை பெற்ற முதல் விளையாட்டு வீரர். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாத பெரிய மனிதர். இத்தனை தகுதி இருந்தாலும் எனக்கு இவரிடம் மிகவும் பிடித்தது இவருடைய நாட்டுப்பற்று. இவரின் திறமையை பார்த்து எத்தனையோ பணக்கார நாடுகள் இவரை தங்கள் நாட்டுக் குடியுரிமையைப் பெற்று தங்கள் நாட்டுக்காக விளையாட அழைக்கின்றன. இருந்தபோதிலும் தான் இந்தியாவிற்காகவே விளையாடுவேன் என்று விளையாடுபவர். HatsOff விஸ்வநாதன் ஆனந்த்.

ஜெய் சங்கர்:


தென்னகத்து ஜேம்ஸ் பான்ட். மக்கள் கலைஞன். எனக்கு மிக பிடித்த தமிழ் நடிகர். இவருடைய நடிப்பு இயல்பாக இருக்கும் என்பதைவிட இவர் மேற்கொண்ட மக்கள் பணிகளே என்னை இவர்பால் ஈர்த்தது. திரைத்துறையிலிருந்து மக்கள் பணிகளை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மேற்கொண்டவர். இவருடைய அனைத்து சொந்த விசேசங்களையும் ஆதரவற்றோர் இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும் நடத்தியவர். டூப் நடிகர்களின் உயிரும் விலைமதிப்பற்றதுதானே என்று கூறி டூப் இல்லாமல் நடித்த முதல் கதாநாயகன். எந்த ஒரு இமேசிலும் தன்னை பொருத்திக் கொள்ளாதவர். மிகப் பெரிய கதாநாயகனாக நடித்த பிறகு எந்த ஒரு இமேஜை பற்றி கவலைப்படாமல் முரட்டுக்காளையில் வில்லனாக நடித்தார். அதற்கப்புறம் கிட்டத்தட்ட 180 படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகனாகவும் நடித்தார். இவருக்கு அப்புறமே மற்ற பெரிய கதாநாயகர்கள் தங்கள் கடைசி காலத்தில் குணச்சித்திர நடிகர்களாக நடித்தவர். எனக்குப் பிடித்த மக்கள் கலைஞன். என்னைப் பொறுத்தவரையில் இவருக்கும் இந்தியா அரசு ஸ்டாம்ப் வெளியிட வேண்டும்.

சாய்னா நேவால் :


என்னைப் பரவசபடுத்தும் மனிதர்களில் சமீபத்தில் சேர்ந்தவர். இன்றைய இளைய இந்தியாவின் விளையாட்டு முகமாக இருப்பவர். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் முன்னேறியவர். இறகு பந்து போட்டியில் இந்தியர் எவரும் எட்டாத சிகரத்தை எட்டியவர். இறகு பந்து போட்டியின் Grand Slam ஆன நான்கு super serious வென்றவர். அவை Indonesia Super Series 2009, Singapore Super Series 2010, Indonesia Super Series 2010, Hong Kong Super Series 2010 ஆகும். 2010 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றார். தற்போது தரவரிசையில் உலக அளவில் 2 வது இடம் வகிக்கிறார். 2010 ஆம் ஆண்டு commonwealth games இல் தங்கம் வென்று கடைசி நிமிடத்தில் இந்தியா பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடம் பெறக்காரணம் ஆனார். ஒலிம்பிக்கில் காலிறுதி சென்ற ஒரே இந்திய வீரர். நான் தற்போது அதிகம் விரும்பும் மனிதர்களில் ஒருவர்.

P.S :

We do the things at new year day which we like to do through out the year (as far as me through out my life). For that I have spared this blog post to post esp on this new year day. I can proudly say that I get immense pleasure in blogging. I want that to continue in this new year and thorough out my life also :-)...

No comments: