Friday, November 12, 2010

நானும் சர்வாதிகாரியும்

எனக்கு ரொம்ப சுவாரசியமான கனவுகள் வரும். நேற்று அப்படிதான் ஒரு கனவு வந்தது . அதில் நான் ஒரு பொறியியல் பட்டதாரி. அப்பொழுதுதான் பட்டம் பெற்றிருந்தேன். நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு கீழ் வீட்டில் இரண்டு பட்டதாரிகள் குடியிருந்தனர். அவர்கள் இருவரும் Msc Bio Chemistry படித்திருந்தனர். நான் இருந்த நாட்டை ஒரு சர்வாதிகாரி ஆட்சி செய்தான். நான் அந்த சர்வாதிகாரியை நேரடியாக சந்திக்கும் வரை சர்வாதிகாரத்தின் தன்மை புரியவில்லை. அந்த நாடு அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறமை வாய்ந்த ஏவுகணையை பரிசோதித்து பார்த்தது. அந்த ஏவுகணை தன்னுடைய இலக்கில் 160cm மட்டுமே தவறி இலக்கை அடைந்தது. இதை அந்த நாடு மிகப் பெரிய வெற்றியாக கொண்டாடியது. இந்த வெற்றியில் அந்த சர்வாதிகாரி இந்த வெற்றிக்கு காரணமானவர்களை நேரில் பாராட்டினான். இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் நான் மேலே சொன்ன அந்த இரண்டு Msc பட்டதாரிகள். அதனால் இருவருக்கும் அந்த சர்வாதிகாரி தன் வீட்டில் விருந்து வைத்தான். அவர்களுடன் நானும் அவன் வீட்டிற்க்குச் சென்றேன். அந்த இரண்டு Msc பட்டதாரிகளை அந்த சர்வாதிகாரி மிகவும் பாராட்டினான். அவர்களுடன் நானும் சென்றதால் எனக்கும் அந்த சர்வாதிகாரியின் அறிமுகம் கிடைத்தது. போகப் போக அந்த சர்வாதிகாரியுடன் எனக்கு நெருக்கம் அதிகமானது. கிட்டத்தட்ட நான் அவனுடைய ஜால்ரா போலவே ஆனே ன். எனக்கு பயங்கள் அதிகம் . ஆனால் நான் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் அந்த சர்வாதிகாரியிடம் ஒரு சிறந்த வீரனைப் போல் காட்டிக்கொள்கிறேன். இப்படியாகச் செல்கையில் அந்த சர்வாதிகாரி நான் அதிகம் வீரம் கொண்டவன் அல்ல என்று சந்தேகம் ஏற்ப்படுகிறது. அதனால் அவனுக்கு கோவம் ஏற்படுகிறது. இதனால் அவன் எனக்கு சில தேர்வுகள் வைத்து படையில் சேர்க்க எண்ணுகிறான். மிகவும் பயந்தவனான நான் அவனுடைய தேர்வில் முதலில் தோற்று பின் எப்படியோ தேர்ச்சி பெற்று படையில் சேர்கிறேன் . எனக்கு பயங்கள் அதிகம் என்பதால் எனக்கு போர்ப்படையில் சேர இஷ்டம் இல்லை. எப்படியாவது நாட்டை விட்டு வெளியேறிட வேண்டும் என்று எண்ணுகிறேன் . அந்த ஊரில் அந்த சர்வாதிகாரி தங்கியிருந்த அரண்மனைக்கு வெளியே மார்கட் இருக்கிறது. அந்த மார்கட்டை முடிவில் ஒரு பாதை செல்கிறது . அந்த பாதையை தாண்டினால் வேறு நாட்டிற்குச் சென்று விடலாம் . ஆனால் யாரேனும் பார்த்துவிட்டால் சர்வாதிகாரியின் முன் நிறுத்தப்படுவோம். உடனே மரண தண்டனைதான். என்ன செய்வது என்றே புரியவில்லை. இந்த நேரத்தில் பயத்தில் முழித்து விட்டேன். உடம்பெல்லாம் வேர்த்து விட்டது

அப்பத்தான் தோன்றியது நாம் ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டு உருப்படியா இல்லனாலும் ஓரளவுக்கு ஒழுங்கா உயிருக்கு உத்தரவாதாம் தர்ற நாட்டுல இருக்கிறோம். ஆனால் ஈரான், வட கொரியா, பர்மா போன்ற சர்வாதிகார நாட்டுளலாம் இருக்கிறவங்களை நினைச்சா பயமா இருக்கு. எனக்கு இந்த கனவே நான் ஈரான் நாட்டில் இருப்பது போன்றே வந்தது. ஏன் சீனாவே அப்படிதான். அங்கு எவரும் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்க முடியாது. ஈரானும் சர்வாதிகார நாடுதான். ஆனால் இருக்கிறதுலயே ரொம்ப மோசமான நாடுகள் வட கொரியாவும் பர்மாவும்தான் . அங்கு நீங்கள் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினால் சுட்டே கொன்றுவிடுவார்கள். மேற்க் கூறிய நான்கு நாட்டிளையும் சீனாவும் ஈரானுமே பரவா இல்லையான நாடுகள். ஈரானுல தேர்தலுல தில்லு முல்லு பண்ணாலும் தேர்தல்னு ஒன்ன வைப்பாங்க. ஆனா வட கொரியாவும், பர்மாவும் முழுக்க முழுக்க சர்வாதிகார நாடுகள். நான் சில நாட்களுக்கு முன் ஒரு டாகுமெண்டரி படம் பார்த்தேன் . அது முழுக்க உண்மை . அதில் பர்மாவில் வீடியோ கேமேராவே வைத்திருக்க விடமாட்டேன்கிறார்கள். ஏனென்றால் வீடியோ கேமரா இருந்தால் நாட்டில் நடக்கும் அட்டூழியங்களை உலகிற்கு காட்டி விடுவார்கள் என்று பயம். அந்த அளவிற்கு சர்வாதிகார நாடுகள் . வட கொரியாவில் , நாட்டில் சர்வாதிகார அக்கிரமம் தாங்க முடியாமல் வட கொரிய, தென் கொரிய எல்லையை தாண்ட முனைபவர்களை எல்லாம் சுட்டுக்கொன்று விடுவார்கள்.

இந்த கனவில் பயந்து முழிக்கும் போதுதான் சர்வாதிகாரத்தின் கோர வலி புரிந்தது. என்னாதான் நம் நாட்டில் கொலை, பஞ்சம், ஊழல் மிகுந்திருந்தாலும் குறைந்த பட்சம் நம்மலால் சுதந்திரமாக இருக்க முடிகிறது . ஏன் ஆட்சியைக் கூட எதிர்க்க முடிகிறது.ஜனநாயத்திற்காக குரல் கொடுப்பதால் நம் நாட்டில் யாரும் சுட்டுக் கொல்லப்படப் போவதில்லை. சர்வாதிகார நாட்டில் பிறந்த ஒரே காரணத்திற்க்காக வட கொரியாவிலும் , பர்மாவிலும் இருக்கும் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது . அப்பொழுதுதான் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியது ஞாபகம் வந்தது. தன்னுடைய சுய லாபத்திற்காக இந்தியா பர்மாவில் நடக்கும் கொடுமைகளை பார்த்தும் பார்க்காமல் இருப்பது போல் இருக்கக் கூடாது. பர்மாவில் ஜனநாயகம் தலையெடுக்க இந்தியா பாடுபடவேண்டும். ஆமாம் நிச்சயம் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா வட கொரியாவிலும் , பர்மாவிலும் ஜனநாயகம் தலையெடுக்க பாடுபடவேண்டும் .

பின் குறிப்பு: எனக்கு இப்படி சுவாரசியமான கனவுகள் அடிக்கடி வரும். அப்பொழுதெல்லாம் கனவின் ஊடாகவே நான் நினைத்துக்கொள்வேன். ஆகா இன்று கனவு அருமை. இப்பொழுதே எழுந்திருத்து எழுத வேண்டும் என்று. ஆனால் அப்படி செய்ததில்லை . இன்றுதான் பயத்தில் முழித்ததும் எழுதினேன்.நான் எழுதும் போது மணி நடு இரவு 2!!!.

1 comment:

Devaraj Rajagopalan said...

கண்டிப்பா நாம ஜனநாயக நாட்ல இருக்கறது எவளவோ பரவால. சர்வாதிகார நாட்ல இருந்து பாத்தா தான் அந்த அருமை புரியும்.