Tuesday, November 9, 2010

மைனா - திரை விமர்சனம்


தீபாவளி அன்னிக்கு நான், மது மற்றும் JDK மூனு பேரும் வ - குவாட்டர் கட்டிங் படத்துக்குப் போனோம். படத்தின் இயக்குனர்கள் ஓரம்போ படத்தின் இயக்குனர்களான புஷ்கர் & காயத்ரி . அதனால் கொஞ்சம் எதிர்பார்ப்புடனே போனோம் . அந்த படத்தோட டிரைலர்சும் வித்யாசமா இருந்ததால கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனா அது எல்லாத்தையும் நாறடிக்கிற மாதிரி படம் செம மொக்கை . ஏன்டா போனோம்னு ஆச்சு. அதுக்கு அடுத்த நாள் மைனா படத்துக்கு மது டிக்கெட் புக் பண்ணி இருந்தான் . ஏற்கனவே ஒரு மொக்க படத்துக்கு போனதால இந்த படம் எப்படி இருக்குமோனு ஒரு பயம் இருந்துச்சு. மேலும் படத்த பற்றிய பல பிரபலங்களோட விமர்சனங்கள் படம் ஏதோ பருத்தி வீரன் போல் இருக்குமோனு ஒரு பயத்தை ஏற்ப்படுத்தியது. எனக்கு கோரமான படங்கள் ஒரு பயத்தை ஏற்ப்படுத்தும் . மேலும் படத்தை பார்த்த கமலஹாசன் , படத்தின் கிளைமாக்ஸ் கோரமா இருக்கிறதே அதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று கூறி இருந்ததால் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டது என்று கேள்விப்பட்டதால் படத்திற்கு ஒருவித பதட்டத்துடனே போனேன்.


படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி புதுசு என்பதால் அவர்களைப் பற்றி எதிர்பார்ப்பு இல்லை . மேலும் நான் படம் பார்ப்பதற்கு முன் பாடல்களை கேட்கும் பழக்கம் இல்லாதவன் ஆனதால் பாடல்களைப் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இப்படி படத்தை பற்றிய நேர்மறையான எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி ஒரு வித எதிர்மறையான எதிர்பார்ப்புடனேயே சென்றேன்.


படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன் ஜெயிலில் இருந்து தன் மைனாவை பற்றி பின்னோக்கிப் பார்ப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. சின்ன வயதில் மைனாவும்(கதாநாயகி) அவள் அம்மாவும் யாருடைய ஆதரவுமின்றி இருக்கும் போது சுருளியாகிய நம்ம சின்ன வயது கதாநாயகன் அவர்களை கூட்டி வந்து தன்னுடைய ஊரில் இருக்கும் ஒரு பாட்டி வீட்டில் குடி வைக்கிறார். பின்னர் அந்த குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கிறார். இப்படியாக சிறு வயதிலிருந்து மைனாவிற்கும் சுருளிக்கும் காதல் ஏற்படுகிறது. இதனை அறியும் மைனாவின் அம்மா அதனை எதிர்க்கிறார் . இதனால் சுருளி மைனாவின் அம்மாவை அடித்து விட்டு ஜெயிலுக்குப் போகிறார். சிறையில் மைனாவிற்கு கல்யாண ஏற்பாடு நடப்பதை அறிந்து அங்கிருந்து தப்பிக்கிறார். பின் தன் ஊருக்குச் சென்று தன் காதலியைச் சந்திக்கிறார். அதே சமயம் தப்பிய சுருளியைப் பிடிக்க ஜெயில் சூப்பிரென்டும், அவருடன் ஒரு ஏட்டும் வருகின்றனர். மறுநாள் தீபாவளி. ஜெயில் சூப்பிரென்டுக்கு அது தலை தீபாவளி. அந்த தலை தீபாவளியை கொண்டாட முடியவில்லை என்ற கடுப்பு அவருக்கு. இப்படியாக சுருளியின் ஊரை அடையும் சூப்பிரென்டும் ஏட்டும் சுருளியை கைது செய்கின்றனர். சுருளியுடன் மைனாவும் வருகிறார். வரும் வழியில் சூப்பிரண்டு சுருளியை ஆறு மாதம் கஞ்சா கேசில் போடப்போவதாக மிரட்டுகிறார். அதனால் பயந்த சுருளியும் மைனாவும் அவர்களிடமிருந்து தப்பிக்கின்றனர். பின்னர் மீண்டும் சூப்பிரென்டிடம் அகப்படும் அவர்களை ஏட்டு சமாதானப்படுத்தி சுருளி மீது கஞ்சா கேசுலாம் போடமாட்டோம் என்று சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறார். அவர்கள் போகும் வழியில் மலைப்பாதையில் பேருந்து தலைகுப்புற விழுந்து விபத்தில் சிக்குகிறது. அந்த விபத்திலிருந்து சுருளி சூப்பிரென்டையும் , ஏட்டையும் காப்பாற்றுகிறார். அதனால் அவர் மேல் சூப்பிரென்டுக்கும், ஏட்டுக்கும் நல்ல மதிப்பு ஏற்ப்படுகிறது. அதனால் அவர்கள் ஜெயிலை அடைந்ததும் மறுநாள் சுருளியை கோர்டில் ஆஜர்படுத்திய பிறகு சுருளிக்கும் , மைனாவிற்க்கும் கல்யாணம் செய்விப்பதாக சூப்பிரென்டும், ஏட்டும் கூறுகின்றனர். அதே நேரத்தில் சூப்பிரென்டின் மனைவி தலை தீபாவளிக்கு போக முடியாத கடுப்பில் இருக்கிறார். கதையின் முடிவில் சுருளிக்கும், மைனாவிற்க்கும் கல்யாணம் முடிந்ததா இல்லையா . அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பதே கிளைமாக்ஸ்.


படத்தின் முக்கால்வாசி கதை சுருளி, மைனா, சூபிரென்டு மற்றும் ஏட்டு இவர்களை சுற்றியே நடைபெறுகிறது. படத்தின் கதை தீபாவளியை சுற்றியே நடைபெறுகிறது . படம் நடைபெறும்போது அதன் ஓட்டத்தை தீர்மானிக்க முடிகிறது. இதற்கடுத்து என்ன நடைபெறப்போகிறது என்பதை ஓரளவு நாம் உணர முடிகிறது. படத்தை நம்மை மறந்து பார்க்க முடிகிறது என்றெல்லாம் நான் கூற மாட்டேன். அதுவே படத்தின் இடையில் ஒரு அயற்ச்சியை ஏற்ப்படுத்துகிறது. படத்தின் பலம் அதன் நாயகர்கள் தேர்வு . கதாநாயகனாக நடிக்கும் விதார்த், கதாநாயகி அமலா, சூப்பிரண்டு, மற்றும் ஏட்டாக நடிக்கும் தம்பி ராமையா . அனைவரும் அருமையாக நடிக்கின்றனர். சூபிரென்டு மனைவியாக நடிப்பவர் சில இடங்களே வந்தாலும் அவரும் நன்றாக நடித்திருக்கிறார். படத்தின் காமெடிக்கு தம்பி ராமையா பொறுப்பு. அவருடைய டயலாக் டெலிவரியே மிக அருமையாக இருக்கின்றது. படத்தின் சில காட்சிகள் பருத்தி வீரன் படத்தை ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. பருத்தி வீரன் போன்ற படங்களின் முடிவுகளும் பருத்தி வீரன் போன்றே இருப்பதைத்தான் தாங்க முடியவில்லை.

படத்தின் மிகப் பெரிய பலம், இசை. அனைத்துப் பாடல்களும் மிக அருமையாக இருக்கிறது. படத்தின் இசையமைப்பாளர் இமான். நம்பவே முடியவில்லை . கையப் பிடி, மைனா மைனா ஆகிய இரண்டு பாடல்களும் மிக அருமையாக இருக்கிறது. ஜிங்கு சிக்கா பாடல் தாளம் போட வைக்கிறது. கிச்சு கிச்சு தாம்பூலம் பாடல் வெகு நாளுக்குப் பிறகு வந்த சிறார்களைப் பற்றிய அருமையான பாடல்.

நிச்சயம் படம் பார்கலாம் .

2 comments:

JDK said...

கிளைமாக்ஸ் தவிர எல்லாத்தையும் சொல்லிட்ட இதுக்கு பேரு திரை விமர்சனமா ? ஏம்பா இப்படி :-)

Haripandi Rengasamy said...

எனக்கும் அந்த உறுத்தல் இருந்துச்சு மச்சி ... கொஞ்சம் தப்புதான் பண்ணிட்டேன்