Monday, August 16, 2010

வம்சம் - திரை விமர்சனம்


வம்சம், 'பசங்க' புகழ் பாண்டிராஜின் இரண்டாவது படம். படத்தின் கதாநாயகன் நம் முதல்வரின் பேரன் அருள்நிதி. படம் அருள்நிதி அவர்கள் ஊரின் படிக்கும் பிள்ளைகளுக்கு படிக்க நிதி திரட்டி தருவதிலிருந்து ஆரம்பிக்கிறது. படம் இப்படியே பில்ட் அப் கொடுக்குறதுலயே போயிருமோ என்று பயந்தால் நல்ல வேளை இல்லை.

புலிவதனம், சிங்கம்பிடாரி என்னும் இரண்டு ஊர்கள் உள்ளன. சிங்கம்பிடாரியில் தேவர் இனத்தைச் சார்ந்த பதினோரு வம்சங்கள் உள்ளன. அவ்வூரின் திருவிழாவில் ஒவ்வொரு வம்சத்தைச் சார்ந்தவர்களுக்கும் மரியாதை செய்யப்படுகின்றன. ஊர் திருவிழாவின் போது யாரேனும் இறக்க நேரிட்டால் அவருக்கு எந்த மரியாதையும் செய்யாமல் ஊர் கூடாமல் சொந்தகாரங்களாக சேர்ந்து எரித்துவிடுவர். இப்படி மரியாதை இல்லாமல் அடக்கம் செய்வதாலயே அக்காலங்களில் பகை தீர்க்கும் கொலைகள் நடக்கின்றன. இப்படி நடக்கும் கொலைகள் போலீசிற்கு தெரிவிக்கப்படுவதில்லை .

இந்த பதினோரு வம்சங்களில் நம் கதாநாயகனின் வம்சம், எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவர். இந்த வம்சத்திற்கு ஒரே வாரிசு நம் கதாநாயகன்தான். இன்னொரு வம்சம், நஞ்சுண்ட மா ஒ சி . இது கதாநாயகனின் எதிரியான சீனி கண்ணுத் தேவருடயது. படத்தில் அருள்நிதி திருவிழாவில் மரியாதையை ஏற்கும் போது சீனி கண்ணுத் தேவர் , அன்பரசனான நம் கதாநாயகனை வஞ்சம் தீர்த்து கொல்ல வேண்டும் என்று கூறுவதிலிருந்து பிளாஷ் பேக் ஆரம்பிக்கிறது.


பிளாஷ் பேக்கின் ஆரம்பத்திலேயே நம் கதாநாயகனின் கையை வெட்ட அவரின் இறந்து போன அப்பாவின் எதிரிகள் வருகிறார்கள். படத்த எடுத்த உடனயே நம்ம முதல்வரின் பேரனின் ஹீரோயிசம் காட்ட சண்டையா என்று நினைக்கையில் , அவர் எதிரிகளுடன் சண்டை போடாமல் தப்பித்து ஓடுவதிலிருந்து படம் நிமிர ஆரம்பிக்கிறது. அப்படி ஓடுபவர் தன்னுடைய மாமாவிடம் ஓடுகிறார். அவர் அந்த ஊரின் பெரிய தலையான சீனி கண்ணு தேவரிடம் கூட்டிச் செல்லுகிறார். சீனி கண்ணுத் தேவரின் உதவியால் நம்முடைய கதாநாயகன் தப்பிக்கிறார். இப்படியாக அன்பரசன் யார் வம்புக்கும் செல்லாமல் நல்லவராக இருக்கிறார்.


இந்த படத்தில் சுனைனாவிற்கு செம ரோல். சுனைனா செம தைரியமான ஆள் . சுனைனாவின் ஆரம்ப காட்சியிலேயே அன்பரசனுடன் சண்டைக்கு செல்கிறார். படத்தில் மாட்டிற்கு அசின்னு பேர் வச்சு அத காதலுக்கு தோது செலுத்துறதும், மரத்து மேல செல்போன கட்டி பேசுறதும் நல்ல காமெடி.சுனைனா, தன்னுடைய அப்பாவைக் கொன்ற சீனி கண்ணுத் தேவர் மேல சாணிய கரைச்சு வீசுரப்பவும், எதிரிகள் சுனைனாவையும், அருள் நிதியையும் சூழும் போது , அருள்நிதி ஓடக் கூப்பிட்டபொழுதும் , மறுத்து இடுப்பிலிருந்து சைக்கிள் செயன எடுத்து சுழற்றும் போதும் செம ஸ்கோர் பண்ணுகிறார். சீனி கண்ணுத் தேவரை அவமானப்படுத்துனதால சுனைனா அவரின் கோபத்திற்கு ஆளாகிறார். அருள்நிதியும் சுனைனாவிற்கு சப்போர்ட்டாக இருப்பதால் அவரும் சீனி கண்ணுத்தேவரின் கோபத்திற்கு ஆளாகிறார்.

அருள்நிதி , தன் அம்மாவின் மூலம் தன்னுடைய அப்பாவைக் கொன்றதும் சீனிகண்ணுத் தேவர் என்று அறிகிறார். இப்படியாக சீனி கண்ணுத்தேவர்க்கும் அருள்நிதிக்கும் பகை வளர்கிறது. கடைசியில் அருள்நிதி , சீனி கண்ணுதேவரை வென்று சுனைனாவை கைபிடிக்கிறாரா இல்லையா என்பது தான் கதை.

இது பாண்டிராஜின் இரண்டாவது படமாக இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது. அருள்நிதி முதல் படத்திலேயே ஸ்கோர் பண்ணுகிறார். படத்தில் எந்த ஒரு ஹீரோயிசமும் இல்லை . அதுவே அருள்நிதி மீது மதிப்பைக் கூட்டுகிறது. அருள்நிதி வெகு இயல்பாக நடிக்கிறார். இதேபோன்று தான் முதல்வரின் பேரன் என்ற எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் கதைகளை தேர்ந்தெடுப்பதிலும், நடிப்பிலும் ஹீரோயிசம் காட்டாமல் இருந்தால் ஒரு நல்ல நடிகர் ரெடி. சுனைனாவிற்கு இந்த படத்தில் அருமையான வேடம். சீனி கண்ணுத்தேவர் அவர் சாணிய கரைத்து வீசும்போதும், அருள்நிதி தன்னை கட்டிகாவிட்டால் ,அருள்நிதியை கொன்றுவிடுவதாக மிரட்டும்போதும் செம ஸ்கோர் பண்ணுகிறார் . படத்தில் சண்டைகாட்ச்சிகள் அனைத்தும் இயல்பாக அமைந்துள்ளன. மருதாணிப் பூவே பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

குடும்பத்துடன் சென்று பார்க்க ஒரு நல்ல படம் .

9 comments:

JDK said...
This comment has been removed by a blog administrator.
Haripandi Rengasamy said...
This comment has been removed by the author.
Haripandi Rengasamy said...
This comment has been removed by the author.
JDK said...
This comment has been removed by a blog administrator.
Haripandi Rengasamy said...
This comment has been removed by the author.
Devaraj Rajagopalan said...
This comment has been removed by a blog administrator.
Haripandi Rengasamy said...
This comment has been removed by the author.
Devaraj Rajagopalan said...
This comment has been removed by a blog administrator.
Haripandi Rengasamy said...
This comment has been removed by the author.