Sunday, March 28, 2010

படிக்காத பத்திரிக்கைகள்


படிக்காத பத்திரிக்கைகள் எப்பொழுதும் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்ப்படுத்துகின்றன . அவை எப்பொழுதும் நிராகரிக்கப்பட்டதாகவே தோன்றுகின்றன. அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு அயர்ச்சி ஏற்ப்படுகிறது. பத்திரிகைகள் படிக்கப்படாததர்க்குக் காரணம் நேரமின்யா, ஆர்வமின்மையா அல்லது அயர்ச்சியா. எதுவாகிருந்தாலும் அவை நம்மைப் பார்க்கும்போதெல்லாம் , ஒரு பரிதாபப் பார்வைப் பார்பதாகவேத் தோன்றுகிறது. அவை காற்றில் படபடக்கும் போதெல்லாம் நீ என்னை வாசிக்காமல் ஏன் புறக்கணிக்கிறாய் என்று ஒரு காதலி கேட்பதுபோல் உள்ளது. பத்திரிகைகள் வாசிப்பு ஒருவரின் குணாதிசயத்தைக் காட்டுகின்றன. சிலர் கிடைக்கும் பத்திரிகைகள் அனைத்தையும் படிப்பார்கள், சிலர் சில பத்திரிக்கைகள் மட்டுமே படிப்பார்கள். எனக்குத் தெரிந்து பலர் சில பத்திரிகைகளில் சில பக்கங்களை மட்டுமே படிப்பார்கள்.

படிக்காத பத்திரிகைகள் எப்பொழுதும் சில நிகழ்வுகளை சொல்ல எத்தனிப்பதாகவேத் தோன்றும் . அவற்றை நாம் தான் கவனிப்பதில்லை. வாழ்கையில் கவனிக்கப்படாத பக்கங்கள் இருப்பது போல் பத்திரிக்கையிலும் கவனிக்கப்படாத பக்கங்கள் உள்ளன . எல்லாப் பத்திரிக்கைகளும் சுவாரசியமாய் இருப்பதில்லை. சில நேரங்களில் சில பக்கங்களே சுவாரசியமாய் இருக்கின்றன. அந்த சுவாரசியப் பக்கங்களை தேடும் அயர்ச்சியே , அந்த சோம்பலே படிக்காத பத்திரிக்கைகளை உண்டாக்குகின்றன.

படிக்காத பத்திரிக்கைகில் போலவே படிக்காத புத்தகங்களும். நானும் மதுவும் சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்ச்சிக்கு செல்வது வழக்கம். அங்கு வாங்கிய புத்தகங்கள் படித்து முடிப்பதற்கும் முன்னாலயே அடுத்த புத்தக கண்காட்சி வந்துவிடும். இப்படியாக சேர்ந்த புத்தகங்கள் அநேகம். எப்பொழுதும் அந்த படிக்காத புத்தகங்களைப் பார்க்கும் போது அதே குற்ற உணர்ச்சி ஏற்ப்படும்.

photo courtesy : http://www.greentaxi.com/wp-content/uploads/2009/03/newspaper-future.jpg

4 comments:

JDK said...

//சிலர் கிடைக்கும் பத்திரிகைகள் அனைத்தையும் படிப்பார்கள், சிலர் சில பத்திரிக்கைகள் மட்டுமே படிப்பார்கள். எனக்குத் தெரிந்து பலர் சில பத்திரிகைகளில் சில பக்கங்களை மட்டுமே படிப்பார்கள்.//

And people like me jus used to see the photos of actresses.


//படிக்காத பத்திரிக்கைகள் எப்பொழுதும் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்ப்படுத்துகின்றன //

Appadiyaa? I don't feel any bad about it...who will feel bad about not reading "Dinakaran" paper needless to say it contains only crap.Also,I have completely refrained from reading newspapers some time back, only reading blogs nowadays :-)

virutcham said...

தினகரன் மாதிரி பத்திரிக்கைகள் படிப்பதை தவிர்க்க வேண்டும் என்று நான் என் டிரைவரிடம் அறிவுரை கூறுவதுண்டு. நல்ல புத்தகங்களை தேடித் படிக்கு முன் இப்படி எல்லாவற்றையும் படித்து பின் ஒரு புரிதலில் முன்னோக்கி சென்று எது நல்ல புத்தகம் என்று அறிய படித்தல் என்பது உதவும். மற்றபடி நீங்கள் சொல்லிய அனைத்தும் நானும் உணர்ந்திருக்கிறேன். அப்படியே மனதை படித்து போல். இது ஒரு பொதுவான அனுபவம் தான்போலும்

http://www.virutcham.com

Haripandi Rengasamy said...

@JDK,

நான் புத்தகத்தில் வெறுமனே photo பார்ப்பவர்களைப் பற்றி நான் பேசவில்லை கண்ணா ;-) :-)

@விருட்சம்

நான் நல்ல பத்திரிகைகள் பற்றிதான் பேசுகிறேன். நல்ல பத்திரிக்கைகளை படிக்காமல் நாளைக் கடத்தும்போது அவை மனதில் ஒரு நெருடலை ஏற்ப்படுத்துகின்றன. மற்றபடி அனைவருக்கும் பொதுவான ஒன்றைப் பற்றி எழுதியதில் எனக்கு மகிழ்ச்சிதான் :-).

Vetrivel said...

உங்களின் முயற்ச்சி New இருக்கிறது.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி
Link:www.secondpen.com/tamil/what is jaiku?