Monday, November 9, 2009

ஆப்ரிக்காவில் புலி


நேற்று Animal Planet Channel ல், ஒரு பரந்த savanna இல் புலியைப் பார்த்தேன். என்னடா இது ஒரு வித்யாசமான காட்சியாக உள்ளது என்று ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் புலிகளின் வசிப்பிடம் பெரும்பாலும் அடர்ந்த காடாக இருக்கும். புலிகளின் வசிப்பிடம் ஆசியா மற்றும் ஐரோப்பாவாகவே இருந்திருக்கிறது. புலிகள் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவை அல்ல. என்னுடைய முந்தையப் பதிவுகளில் சிங்கமும் புலியும் இருக்கும் ஒரே நாடு இந்தியா என்று கூறியிருப்பேன். அதனால்தான் புலியை ஆப்ரிக்கா savanna புல் வெளிகளில் கண்டபோது மிக ஆச்சரியமாக இருந்தது.

சமீபத்திய ஆராச்சிகளின்படி புலிகள் ஆப்ரிக்காவிலிருந்து 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டன.

சிங்கத்தையும் புலியையும் ஒப்பிடும்போது, புலியே திட்டமிடுதல், ஆற்றல், திறமை என்று பல விதங்களிலும் மேம்பட்டது. ஆனால் சிங்கத்தின் வேட்டையாடுதல் பற்றிய ஒளிப் பதிவுகள் அளவிற்கு புலியின் வேட்டையாடுதல் பற்றிய ஒளிப் பதிவுகள் கிடையாது. அதற்க்குக் காரணம் சிங்கத்தின் இருப்பிடம் ஆப்ரிக்காவின் பரந்த புல் வெளியாகவும், புலிகளின் இருப்பிடம் அடர்ந்த ஆசியக் காடுகளாகவும் இருப்பதே.

நேற்றுப் பார்த்த நிகழ்ச்சி "Living with Tigers" எனும் ஆப்ரிக்கா காடுகளில் புலிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாகும். இந்த நடவடிக்கையில் இரண்டு வங்காளப் புலிகள் ஆப்ரிக்காவில் அறிமுகப் படுத்தப்பட்டன. ஒன்று
ரான் எனும் ஆண் புலி மற்றொன்று ஜூலி எனும் பெண் புலி. இரண்டும் அமெரிக்காவில் captivity இல் பிறந்த சகோதர சகோதரிகள்.


இப்புலிகள் அறிமுகப் படுத்தப்பட்ட பகுதி, தென்ஆப்ரிக்காவில் உள்ள சுற்றிலும் மின்சார வேலி அமைக்கப்பட்ட இப்புலிகளுக்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு சரணாலயம். இது ஒரு தனியார் முயற்சி.

இந்நிகழ்ச்சியில் இப்புலிகளுக்கு காடுகளில் வாழ்வதற்கு படிப்படியாக பயிற்சி கொடுக்கப்பட்டது. முதலில் இப்புலிகளுக்கு simulated prey அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது ஒரு இறந்து போன மானின் உடலில் கறியைத் திணித்து அதனை ஒரு ஜீப்பில் கட்டி ஓட்டிச் சென்றார்கள். அதனை இப்புலிகள் வேட்டையாடின. இப்புலிகளின் முதல் உண்மையான வேட்டை ஒரு முள்ளம்பன்றி. இதனை அந்த நிகழ்ச்சியின் வர்ணனையாளரின் வார்த்தையில் கூறுவதென்றால் "Perfect hunt but wrong choice". ஏனெனில் முள்ளம்பன்றி வேட்டை மிக ஆபத்தான ஒன்று. முள்ளம் பன்றிகள் பல புலிகளையும் சிங்கங்களையும் நிரந்தர ஊனமாக்கிவிடும். இந்நிகழ்ச்சியிலும் ரானை முள்ளம் பன்றியின் முட்கள் நன்றாக குத்திவிடும். இருந்தாலும் கடைசியில் அது ஒரு மிகச் சிறந்த வேட்டையாகவே இருந்தது.


அடுத்த வேட்டை ஒரு வான்கோழி. அந்த வேட்டை மிகச் சிறப்பாக இருந்தது. வான்கோழி பறக்கும்போது இரண்டு புலிகளும் எதிர் எதிர் திசைகளிலிருந்து தாவி, வானத்திலேயே பிடிக்கும். மிக அருமையாக இருந்தது அக்காட்சி. அதற்க்கடுத்த வேட்டைக்கான தேர்ந்தெடுத்த மிருகம், அப்புலிகளின் அனுபவமின்மையை நன்றாக காட்டியது. அவற்றின் தேர்ந்த்தெடுப்பு 1400 kg எடை உள்ள காண்டாமிருகம்!. நல்லவேளையாக அக்காண்டாமிருகம் திருப்பித் தாக்கி சட்னி ஆக்காமல்விட்டது.

அதற்கடுத்த வேட்டை ஒரு காட்டுப் பன்றி. காட்டுப் பன்றியின் தோலானது சற்றுக் கடினமானது. அதனால் அப்பன்றியைக் கொல்வதற்கு இரண்டு புலிகளுக்கும் சற்று நேரமானது.

அதற்கடுத்து இப்புலிகளுக்கென்று அந்த மூடிய மின்சார வேலி அமைக்கப்பட்ட சரணாலயத்தில் மான்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்க்கடுத்துதான் உண்மையான வேட்டை ஆரம்பமானது. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி புலி வேட்டையைப் பார்ப்பது அபூர்வம். நேற்றைய நிகழ்ச்சியில் புலிகளின் மான் வேட்டை மிகச் சிறப்பாக அமைந்தது. ஆரம்பத்தில் இப்புலிகளின் மான் வேட்டை அவற்றின் அனுபமின்மையைக் காட்டியது. புலி வேட்டையாடும் பொழுது இரையின் குரல் வளையை முதலில் பிடித்து அதன் மூச்சை நிறுத்தும். நேற்றைய நிகழ்ச்சியில் இப்புலிகள் குரல் வளையைப் பிடிக்காமல் கழுத்தின் மேற்ப்பகுதியையே பிடித்தன. ஆனால் காலம் செல்லச் செல்ல இரண்டு புலிகளும் வியூகம் அமைத்து மிகச் சிறப்பாக வேட்டையாடின. ஒரு கட்டத்தில் இரண்டு புலிகளும் சேர்ந்து ஒரே வேட்டையில் ஏழு மான்களை வேட்டையாடின!. ஒரு மானை இரண்டு புலிகளும் எதிர் எதிர் திசைகளிலிருந்து தாவி வானத்திலேயே பிடிக்கும். wow, that was a great hunt.

அதற்கடுத்து அச்சரணாலயத்தில் Wildebeest அறிமுகப்படுத்தப்பட்டன. Wildebeest என்பது 160- 290kg எடையுள்ள காட்டெருமை போன்ற ஒரு மிருகம். பொதுவாகப் புலிகள் இந்தியாவில் உலகிலேயே மிகப் பெரிய எருமை இனமான Gaur(1,000–1,500kg) ஐ தனியாகவே வேட்டையாடிவிடும். ஆனால் captivity இல் இருந்த இப்புலிகளுக்கு wildebeest சற்றுக் கடினம்தான். இருந்தாலும் ரானும், ஜூலியும் மிகச் சிறப்பாகவே வேட்டையாடிவிடும்.

அடுத்து நெருப்புக்கோழிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நெருப்புக்கோழிகள் புலிகளின் வேகத்தை அளவிடக் கூடியவையாக இருந்தன. ஏனெனில் நெருப்புக்கோழிகள் மணிக்கு 72km வேகத்தில் ஓடும். அதையும் இரண்டு புலிகளும் சிறப்பாகவே வேட்டையாடின.

இவ்வாறாக இரண்டு புலிகளுக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பயிற்ச்சி கொடுக்கப்பட்டன. மேற்க்கூறிய காட்ச்சிகள் அனைத்தும் மனித இனம் இதுவரை பார்த்திராத ஒன்று!. ஏனெனில் Wildebeest ம்,Thomson Gazelle ம், நெருப்புக் கோழியும் புலிகள் இருக்கும் இடத்தில்(ஆசியா) கிடையவே கிடையாது. புலிகளின் வேட்டையை பரந்த புல் வெளியில் காண்பது என்பது மிக அருமையாக இருந்தது.

தற்பொழுது ரான் மற்றும் ஜூலிக்கு 10 வயதாகிறது. செயற்கை கருவூட்டல் முறையில் ஜூலி 5 குட்டிகளை ஈன்றிருக்கிறது.

ஆப்ரிக்கா காடுகளில் புலிகளை இனப்பெருக்கம் செய்யவைப்பது கண்டனங்களை எழுப்பாமல் இல்லை. ஏனெனில் ஆப்ரிக்கா புலிகளின் உண்மையான இருப்பிடம் இல்லை. மேலும் இப்புலிகளின் "genetic purity" பற்றிய சந்தேகங்கள் எழுந்துள்ளன. பெரும்பாலும் உலகில் காடுகளைத் தவிர்த்து மிருகக்காட்சி சாலைகளிலும் மற்ற இடங்களிலும் உள்ள புலிகள் பெரும்பாலும் "genetically impure" ஆகவே உள்ளன. அதாவது அவைகள் ஏதேனும் இரண்டு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட இனப் புலிகளின் கலப்பாகவே உள்ளன. மேலும் இந்த முயற்சி ஒரு தனியார் பண்ணுவது. அதனால் இது பணம் பண்ணுவதற்க்கான முயற்சியே என்ற குற்றச்சாட்டும் உள்ளது .

இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பொழுது எனக்கு கோவமும் ஆத்திரமுமே மேலோங்கியது. ஏனெனில் இவ்வளவு முயற்சி செய்து ஆப்ரிக்காவில் இல்லாத புலியை உருவாக்க முயற்சி நடக்கும் பொழுது, புலிகளின் தாயகமாக விளங்கும் இந்தியாவில் புலிகள் பாதுகாக்கப்படவில்லை என்று எண்ணும்போது கோபம்தான் மேலோங்குகிறது.

மேலும் அறிய கீழே உள்ள பதிவுகளைக் காண்க,

http://www.jvbigcats.co.za/
http://www.lairweb.org.nz/tiger/release10.html
Photos Courtesy : http://www.jvbigcats.co.za/

5 comments:

Shankar.Nash said...

nice post da.. ur description of the hunt brought the scene before the eyes.. if possible, post any videos in this regard. btw.. its true that india which is a natural habitat to most of the species is letting its advantage go waste. Ur feelings are valid, that we dont take any measures to safegaurd the wildlife and the forest that we have here. Hope we dont let the resources depreciate atleast from now on.

Haripandi Rengasamy said...

I don't have any video link at now .. some videos are available in the links i have given ..surely if i come across any other videos i let you know ...

Yes,after saw that program, i got much angry and disappointed .. we never know real value of india ...how much precious things we have ..we never know ..
that is the problem ...

JDK said...

The comment I posted for the previous post holds good for this one also,..."A country which does not take adequate measures to protect and safeguard its own resources cannot survive in this planet for a long time and some are thinking how to make India a super power within 20 years.Its survival itself is in question till that time !!!" .Ridiculous

madu said...
This comment has been removed by the author.
madu said...

Ron and Julie are here. Watch first four videos

http://www.youtube.com/results?search_query=ron+and+julie+tigers&search_type=&aq=f