Monday, July 18, 2011

"தம்பி, நான் போலீசு "

நான் அன்று சிக்னலில் பைக்கில் நின்றுகொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர் இன்னொரு பைக்கின் பில்லியனிலிருந்து முணுமுணுத்தவாரே இறங்கி என்னிடம் வந்தார் .

"தம்பி, நான் போலீசு "

"என்னை அங்கன இறக்கிவிட்டுருங்க" என்றவரே பில்லியனில் உட்கார்ந்தார்.

அதற்கு நான் "சார், நீங்க போலீசா இல்லனாலும் lift கொடுப்பேன்" .

அதற்கு அவர் "இல்ல தம்பி போலீசுனு சொல்லிக்கிடனும்ல " .

சிறிது நேரம் சும்மா இருந்தவர் "தம்பி, இப்படி கூடி போயி சிக்னல cross பண்ணி போங்க" என்றார்.

அதற்கு நான் , தம்பி டீ இன்னும் வரல என்னும் டோனில் "சார், சிக்னல் இன்னும் போடல" என்றேன்.

சற்று கடுப்பான அவர் வண்டியிலிருந்து இறங்கிச் சென்றார்.

கொஞ்ச தூரத்துல ஒரு பைக்காரன் அருகில் ஒரு குரல் "தம்பி, நான் போலீசு ..." :)

2 comments:

Devaraj Rajagopalan said...

வடிவேலு காமெடி மாதிரி ஆகிட கூடாதுன்னு தான் மொதல்லயே தம்பி நான் போலிசுநு சொல்லிடாரு.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

போலீஸ்க்கு சிக்னல் தேவையில்லை பேர்ல...