Sunday, April 22, 2012

Ok Ok - Ok


SMS, பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜேஷ் படம் என்பதால் நல்ல தைரியத்துடன் சென்ற படம் . படத்தோட review உம் நல்லாதான் இருந்தது . அதனால் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் சென்றேன். மற்ற இரண்டு படங்களைப் போல் இதுவும் கலகலப்புக்கென்றே அமைந்த படம் .

உதயநிதிக்கு முதல் படம், இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது.

சரண்யா எப்பயும் போல் முழுதாக score பண்ணுகிறார்.

ஹன்சிகா மோத்வானி - பாப்பா குண்டா இல்ல ரொம்பவே குண்டாவே இருக்கு. பாட்டுலலாம் தத்தக்கா பித்தக்கானு ஓடும்போது நல்லா  தெரியுது, பாப்பா இந்த உடம்ப வச்சுகிட்டு ரொம்பவே கஷ்டப்படுதுன்னு . குஷ்பு மாதிரி இருக்கீங்கன்னு சொல்றது நல்லாத்தான் இருக்கு ஆனா வந்த புதுசுல  குஷ்பு கூட இந்த அளவு குண்டா இல்ல. கொஞ்சம் உடம்ப குறைம்மா.

சந்தானத்த சந்தன பொட்டோட  பார்த்தசாரதியா பாக்குறதுதான் கொஞ்சம்  கஷ்டமா இருக்கு. பாஸ் உங்களுக்கு கீழ இறங்கி பேசுற SMS மாதிரி ரோலுதான் ரொம்ப செட் ஆகுது பாஸ்.

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு பாட்ட தவிர வேற எந்த பாட்டும் ஞாபகம் வர அளவுக்கு பெரிசா இல்ல.

மனம் , SMS ஜீவா இந்த படத்துல நடிச்சிருந்தா எவ்ளோ நல்லா இருந்துருக்கும்னு நினைக்குறத தவிர்க்க முடியல. இந்த மாதிரி ரோலுக்கு ஜீவா SMS ல ஒரு இலக்கணமே படைச்சுட்டார். படம்  நிச்சயம் பாக்கலாம் , ஆனா SMSஅ மனசுல வச்சுருந்தா கொஞ்சம் ஏமாற்றம்தான்.

தண்ணீர் இல்லா தேசம்


இந்த வெயில் காலத்துல வெளில போனா தண்ணி குடிக்க ஒவ்வொரு பஸ் ஸ்டாப்புளையும் கடை கடையா தண்ணி தேடி ஓட வேண்டியதா இருக்கு. அப்பலாம் தோணும் இப்ப முக்குக்கு முக்கு இருக்குற கடைல தண்ணி பாட்டில் வாங்கி தண்ணி குடிச்சுப்போம். ஆனா அந்த காலத்துல மக்கள் கால்நடையா இந்த உலக சுத்தி வந்தப்ப எங்க தண்ணிக்குப் போயிருப்பாங்கன்னு . ஆனா நிச்சயமா அந்த காலம் இன்று போல் இருந்ததில்ல. அப்பலாம் எந்த ஊருக்குப் போனாலும் எந்த வீட்டிலையும் தவிச்ச வாய்க்கு தண்ணி கிடைக்கும். இல்லனா ஊர் ஊர்ல இருக்கும் ஆறு, குளம்னு எங்கயும் தண்ணி மொண்டு குடிச்சு தாகத்த தீத்துக்குவாங்க . ஆனா இப்ப அப்படியா!. அப்பலாம் தண்ணிய பத்துன பயம் இல்லாம இருந்துச்சு . அய்யயோ தண்ணி நல்லா இல்லையே , இப்படி திறந்த ஏரி , குளத்துல இருக்குற தண்ணிய குடிக்கலாமாங்குற பயம் இல்ல.

இப்பலாம்  எங்கயும் திறந்த வெளியா இருக்குற ஆறு , குளத்துல யாரும் தண்ணி மொண்டு அப்படியே குடிக்கிற மாதிரி பாக்க முடியல. ஆனா அது எல்லாம் இந்த கொஞ்ச காலமாதாங்க. எனக்குத் தெரிஞ்சு பதினஞ்சு, இருபது வருசத்துக்கு முன்னாடி கூட இப்படி இல்ல .  ஒரு பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி எங்க அப்பா எங்கள குடும்பத்தோட வட இந்தியா டூர் கூட்டிட்டுப் போனாங்க. 23 நாள் டூர் , அதுவும் ப்புல்லா பஸ்ல!. ஒரே பஸ்ல எங்களோட இன்னும் 45 பேர் வந்தாங்கா. திருநெல்வேலில  ஆரம்பிச்சு , சிம்லா வரைக்கும் போய் திரும்பி அதே பஸ்ல திருநெல்வேலி திரும்புனோம்!. அப்ப நாங்க குடிச்சதெல்லாம் வெறும் ஆத்துத் தண்ணி. போற வழி எல்லாம் இருக்குற ஆறுகள்ள இருந்த தண்ணி . அப்பலாம்  திறந்த தண்ணி , அசுத்தம் , புது தண்ணினு எந்த பயமும் கிடையாது. ஆனா இப்ப நம்ம வீட்டுக் குழாய்ல வர்ற தண்ணியையே குடிக்க பயப்படுறோம். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி நான் திருப்பியும் வட இந்தியா  போயிருந்தேன். அப்ப நான் குடிச்சதெல்லாம் 1 லிட்டர்  ரூபி 15 , 20 ங்குற பாட்டில் தண்ணிதான். 90 கள்ள நாங்க போன அந்த டூர்ல ஒரு விஷயம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கும். நோர்த் இந்தியா ரொம்ப hot ங்குறதால குளிர்ச்சியான தண்ணிக்காக  தோல்ல செஞ்ச ஒரு பையில தண்ணி ரொப்பி அத பஸ்ல ஜன்னலுக்கு வெளில தொங்கப் போட்டுருப்பாங்க. பஸ் போறப்ப வீசுற காத்துல அந்த பை குளுந்து ஜில்லுனு ஆயிரும் . அந்த தண்ணிய எடுத்துக் குடிப்பாங்க. ஆனா அந்த மாதிரி ஒரு அடையாளத்தையே இந்த தடவை அங்க பாக்க முடியல . எங்கயும் பாட்டில் தண்ணிதான். 

நாங்க முத முதலா எப்ப காசு குடுத்து குடிக்க தண்ணி வாங்குநோம்னு எனக்கு இப்பயும் நல்லா ஞாபகம் இருக்கு. அதுவும் பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடிதான். அப்ப நாங்க இருந்த புதுக்கோட்டை மாவட்டத்துல இருந்து , ராமநாதபுரம் மாவட்டுதுல இருக்குற முதுகுளத்தூருக்கு வந்தோம். அப்ப நாங்க முதுகுளத்தூருக்கு கிளம்புனப்ப எங்க பக்கத்து வீட்டுக்காரங்கலாம் கேட்டாங்க , ஏங்க புது ஊர்லலாம் குடிக்க தண்ணி எப்படிங்கனு? . அப்ப எங்க அம்மா  , குடிக்க ஒரு குடம் 50 காசுனு வாங்கனும்மாம்னு சொன்னாங்க. அங்க இருக்குறவங்கலாம் , அடி ஆத்தீ, என்னது  குடிக்கிற தண்ணிய காசு குடுத்து வாங்கனுமாம்லன்னு! அவ்ளோ ஆச்சரியப்பட்டாங்க. பாத்துக்குங்க அப்பா  நாங்க வாங்குனது ஒரு குடம் 50 பைசா, இப்ப நாங்க குடிக்கிற தண்ணி 20 ltr 80 ரூபா !. நிச்சயமா சொல்றேன், குடி தண்ணிக்கு காசானு கேட்ட அதே ஊர் இன்னைக்கு காசு கொடுத்து கேன் தண்ணி வாங்கித்தான் குடிப்பாங்க.

இப்ப நாம குடிச்சிட்டு போடுற 1 ltr தண்ணி பாட்டிலலாம், அப்ப பழைய பேப்பர் வண்டிக்காரங்கலாம் கொண்டு வருவாங்க . அந்த ஒரு காலி பாட்டில் 2 ரூபா. அப்ப உங்களுக்கு எப்படிங்க இந்த பாட்டிலலாம் கிடைக்குதுன்னு கேட்டா அவங்க , இதலாம் பணக்காரங்க 15 ரூபா , 20 ரூபான்னு வாங்கி குடிக்கிறது . அவங்கட்ட இருந்து இதை நாங்க வாங்கிட்டு வரும்வோம்னு சொல்லும்போது என்னது ஒரு லிட்டர் தண்ணி இருபது ரூபையானு  ஆச்சரியமா இருக்கும் .

ஒரு காலத்துல இந்த பாட்டில் தண்ணி , கேன் தண்ணிலாம் Status symbols.  ஆனா இப்ப அது அத்தியாவசியமா(க்கப்பட்டு)கிவிட்டது.

இந்த தண்ணி business ஒரு பணம் காச்சி மரம். கோடிக்கணக்கா பணம் கொழிக்குது. அதனாலதான் உள்ளூர் குடிசைத் தொழிலுல இருந்து உலகில இருக்குற பெரிய MNC வரைக்கும் இதுல ஈடுபடுறாங்க. இதுல பெரிய தொழில் சூச்சுமமே இருக்கு. எப்பயுமே வருசத்துக்கு ஒரு தடவ விக்கிற ஒரு பொருளுல இருந்து கிடைக்கிற பெரிய லாபத்தவிட , தினமும் யூஸ் பண்ற ஒரு  பொருள விக்கிறதுல கிடைக்குற சின்ன லாபம் பெரிசு. ஏன்னா இந்த சின்ன லாபம் நிலையானது, அதோட volume உம் பெரிசு. அதுல செம லாபம் கிடைக்கும். அதுதான் இந்த குடிக்கிற தண்ணி விசயத்துலயும் நடக்குது.

இப்ப இருக்குற business tactics லாம் ரொம்ப தெளிவானது. இப்பலாம் business ல Status ங்குறத விட அதிகமா முன் வைக்கப்படுவதுனா அது மூனு விஷயம்தான்.
  1. Safety
  2. Security
  3. Health Conscious .
ரொம்ப அழகான ஆனா வலிமையான tactics. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆள் அரவமற்ற  ஒரு மலைப்பாங்கான ஒரு இடத்துக்கு என் friends ஓட போயிருந்தோம். அப்ப அங்க சின்னதா ஒரு ஓடை தெளிவான நீரோட  ஓடிக்கிட்டு இருந்துச்சு. அத பாத்ததும் ஆசையாகி நான் போயி கொஞ்சம் தண்ணி அள்ளிக் குடிச்சேன். அப்ப என் மனைவி, ஏங்க அந்த தண்ணிலாம் குடிக்காதீங்க , அது என்ன தண்ணியோனு சொன்னப்ப நான் அதிர்ந்து போயிட்டேன்.  ஆள் அரவமற்ற இடத்துல இருக்குற  இந்த ஓடத் தண்ணி தெளிவானது, சுத்தமானது ஏன் சொல்லப் போனா கடைல கிடைக்குற பல பாட்டில் தண்ணிலாம் விட ரொம்ப ஆரோக்கியமனதுன்குறது ரொம்ப நல்லாவேத் தெரியும் . ஆனா அதையும் தாண்டி எழுற இந்த Health Conscious இருக்குல, அதுதான் business tactics, இப்படி மக்கள பயப்பட வச்ச அந்த விளைவுதான் அதோட மாபெரும் வெற்றி.


ஆனா இப்படி தயாரிக்குற தண்ணியும் ஆரோக்கியமானதாங்குறதும் விவாததிற்குரியது .


சின்ன வயசுல்லாம்  நினைச்சுக்குவேன், நாமும்  பெரிய பணக்காரனா ஆகி இப்படி தண்ணி பாட்டில்ல தண்ணி வாங்கி குடிக்கனும்னு. ஆனா இப்படி  நாம தினமும் குடிக்கிற அந்த தண்ணியையே காசு குடுத்து வாங்குற இந்த நிலைமை உருவாக்கப்பட்டத நினச்சு வெக்கப்படுறேன்.

லட்சக்கணக்கான வருடங்களா இந்த பூமியில் ஜீவராசிகள் குடிச்சுகிட்டு இருந்த தண்ணிய  நம்மால குடிக்க முடியாம செஞ்ச, அந்த குடி தண்ணியையே காசு குடுத்து வாங்குற மாதிரி செஞ்ச இந்த அதி பயங்கர மாற்றத்த நான் வெறுக்குறேன். இப்படி லட்சக்கணக்கான வருடமா நல்லா இருந்த தண்ணி கேட்டுப் போனது வெறும் 15 , 20 வருசத்துலதான். என்ன கொடும இது .


என்னடா இவன் அந்த காலத்துல (அந்த காலம்னா ரொம்ப காலம் இல்லங்க வெறும் 15,20 வருசம்தான்!), ஆத்துல தண்ணி மொண்டு குடிச்சேன் இப்ப  வேறு வழி இல்லாம பாட்டில்  தண்ணி குடிக்கிறேன்னு புலம்புறான் . சுத்தமான பாட்டில் தண்ணிய வளர்ச்சியோட அடையாளமா ஏத்துக்காத பழம் பிற்போக்குவாதியா இருக்குனான்னு நினைக்காதீங்க. நான் எந்த கவலையும் இல்லாம குடிச்ச அந்த சுத்தமான ஆத்துத் தண்ணிய அசுத்தமாக்குனது, அந்த அசுத்தத சரி பண்ணாம அந்த அசுத்தத்த மூலதனமா வச்சு பணம் பண்ணுறத எதோட அடையாளம்னு முதலில் புரிஞ்சுக்கோங்க .

இப்படி ஒரு மனுஷனுக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்னான தண்ணியையே காசு கொடுத்து வாங்க வச்சதுக்கு நம்ம அரசாங்கம்தான் வெக்கப்படனும். இன்னும் கொஞ்ச நாள் ஆனா உயிர் வாழ அத்தியாவசியத் தேவையான ஆக்சிசனையே காசு கொடுத்து வாங்க வச்சாலும் நாமும் அதையும் எதிர்க்காமல்,  இதலாம் வளர்ச்சியின் கூறுகள்னு சொல்லி ஏத்துகத்தான் போறோம். அந்த காலம் ரொம்ப தூரம் இல்ல. 
Photo Courtesy : http://naturalsociety.com/the-bottled-water-deception/